Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529524 times)

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
பெண்மையின் ...
மேன்மை பொறுமை...
பொறுமையின் அருமை ...
இன்றோ அறியாமையை போன ...
கொடுமை...

பொறுமை
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வந்து போகும் மேகங்கள் எல்லாம்
மழையை பொழிவதில்லை
வானில் தோன்றும் நிறங்கள் எல்லாம்
வானவில் ஆவதில்லை ...
கார்கால கீற்றாய்
கடந்து போகும் வானவில் உனக்காய்
காலமும் காத்திருக்கும் நான்
பொறுமை சாலி தானே ...
என் பொறுமை நீ அறிவாய் என் அன்பே
அது போதும் எனக்கு ....



வானவில்

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

வானில்  தோன்றும் 

வானவில்  அது 

வெகுசிலநாட்களாய்

வெளிப்படுவதில்லையே !

வழக்கம்  போல் 

விடயம்  என்னவென 

விவரமாய்  அறிந்திட

வானிலை  அறிக்கையை 

வழங்கிடும் 

வானிலை  விஞ்ஞானி  என

விவரம்  அறிந்தவரிடம்

விவரமாய்

விசாரித்ததில்  பெரும்

விந்தையான

வேடிக்கையான

விவகாரமான 

விடயம் அது

வெளிப்பட்டது , என்னவளின்

வெள்ளிநிரமே தோற்கும்

வெள்ளை  நிறம்  அதனை

வர்ணம்  7 கொண்ட 

வானவில்  தன் பால்  இல்லையே என

வெட்கி  வேதனை  கொண்டு

வெளிப்படுவதில்லையாம்
வழக்கம்  போல 

அடுத்த  தலைப்பு

வழக்கம் போல ...
« Last Edit: May 05, 2012, 11:38:16 AM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மேகத்தையும்
நிலவையும்
தென்றலையும்
வழக்கம் போல
துணைக்கு அழைத்தேன்
உன்னை நினைக்கும் மனதிற்கு
ஆறுதல் தர வேண்டி
என் கவிதையின்  வரிகளில்
வந்து விளையாடி
என்னவனுக்கு என் மனதை
கூறி விடு என்று

கூறி விடு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தளிர் நிலவே !!!
கொளுத்தும் கோடையில்
கொலை முயற்சி  தாக்குதலை
மெதுவாய் ஆனாலும்
முழுதாய் முறியடிக்கும்
குளிர் நிலவே !!!!

இனிமையில் நீ இருக்கும்
பொழுதுகளை வேண்டுமானால்
விடுத்துவிடலாம்

தனிமையில் நீ இருக்கும் பொழுதுகளில்
ஒரு, சிறு நொடியேனும்
நீ என்னை நினைப்பாய் அல்லவா??

நான் இருக்கும் பொழுது அதை
கூறாவிடினும்
இல்லாத பொழுதினில் எனும்
கூறிவிடு !
உண்மையாய் !

அடுத்த தலைப்பு

உண்மையாய்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


உண்மையாய் நீ உள்ளவரை
என் தன்மைகள் மாறது ..
மென்மையாய் எனை தீண்டும் வரை
என் பெண்மைகள் தூங்காது ..


தன்மை
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பெண்மையின்  தன்மை அது
மென்மை என்றஉண்மை,
அதை உண்மையாய்
உணர்ந்தவன் நான் ,இருந்தும்,
ஏனோ ? வன்மை நிறைந்தவராய்
தொன்மையாய், நம்மை அறிந்தவரே
அடிக்கோடிடும்  பொழுது தான்
அடிமனதில் லேசாய் அலைபாயுது
சோக அலை !

அடுத்த தலைப்பு

சோக அலை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கடல் அலைகள்
கரையை காதலிதபோதும்
கரையை அலை
நிரந்தரமாய் சேராத போதும்
அதன் அலைகள் தீண்டுவதை போல்
எனக்குள்ளும் சோக அலை அடித்தாலும்
உன் நினைவலைகளில் நீந்துவதை தவிர்க்கிறேன்



நினைவலை
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கடற்கரை மணலில்
நாம் வரைந்த
காதல் கோலங்களும்
மணல் வீடு கட்டி
குடி புகுந்து
வாழ போகு வாழ்கையின்
திறப்பு விழா என்று கன்னம் கிள்ளி
குறும்பு பார்வை பார்த்து
சிரித்து சிரிக்க  வைத்த
நினைவுகள் எல்லாம்
கடல் அலை கரை தொடுவதை போல
உன் நினைவலை
என் நெஞ்சம் வரை தொட்டு செல்ல
கண்ணீர் லேசாய் எட்டி பார்கிறது


தொட்டு செல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தொடுவானமாய்  நீ
தொலைவிலே இருந்தாலும்
தொட்டு செல் உன் நினைவுகளால்
உருக வேண்டும் ஒரு நொடியாவது


உருக வேண்டும்
                    

என் கனவுகளை
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்..
என்றாவது ஒரு நாள்
தனிமையின் ஆக்கிரமிப்பு
என்னை சிறைகொள்ளும் போது
உன்னை நினைத்தே உருகவேண்டும் நான்..!

அப்போது கன்னக்குழிகாட்டிச்
சிரிக்கும் உன் நிழற்படம் ஒன்று
கையில் இல்லாமல போய்விடும் எனக்கு!


நிழற்படம்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நிஜத்தில் உன் நிழலைக் கூட
நேசித்த எனக்கு ஏனோ
உன் நிழற் படத்தை சேமித்து வைக்க
தோன்ற வில்லை...
நிழற் படத்தை சேமிக்காவிடினும்
உன்னை பார்த்த தருணத்தில் எல்லாம்
என் கண்களினால்
பல ஆயிரம் புகைப்படம் பிடித்து
அழியாமல் இருக்க
என் இதய அறையில்
சேமித்து வைத்துவிட்டேன்

இதய அறை



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்றாவது ஒருநாள்
எனை தேடி நீ வருவாய் என்ற நபிக்கையில்
என் இதய அறை எங்கும் பட்டுக் கம்பளம்
விரித்து வைத்துளேன் ...
விருந்தாட வராது போனாலும்
மாருந்தாக அவ்வப்போது
வந்து போய்விடு
 


பட்டுக் கம்பளம்
« Last Edit: May 05, 2012, 08:59:49 PM by Global Angel »
                    

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
பட்டுக்கம்பளம் விரித்து...
பூ மாலை ஏந்தி...
மனம் எங்கும்....
மலர் தூவி ...
நித்தமும் காத்திருக்கிறேன்...
உன் அரும் வருகைக்காக......

நித்தமும்..


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நித்தமும் உன் சிந்தனையில்
சிக்கி தவிக்கும் எனக்கு
ஒரு முறை முகம்
காட்டி சென்றுவிடு..
புத்துணர்வு பெற்று
மீண்டும் ஒரு முறை
காதலிக்க ஆயுத்தமாவேன்

புத்துணர்வு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்