Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 476800 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

கவிதையை  கவிதையாய்  மட்டுமே  கண்டு

கவிதைக்கு  பதில்   அதே  கவிதையையே  கொண்டு

பதில்  பதிக்கும்  சராசரி  திறமை  மட்டுமே  எனக்கு

கவிதை  என்பது  காணும்  கண்ணோட்டத்தை  பொருத்தது
என்பதை  கண்மூடித்தனமாய்
நம்புவன்  நான் .

தேவைக்கு  ஏற்றாற்போல்  வரிகளை  பொருள்  கொள்ளும்  தனி  திறமை
இன்னும்  கர்க்கவில்லையே  !

அடுத்த  தலைப்பு

தனி  திறமை


« Last Edit: April 29, 2012, 04:53:49 PM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கவி மன்றத்தில்
கவிதைக்கு பதில் கவிதை
பதிப்பது திறமை..!
அதில் உள்ள குறைகளை
தமிழின் நலன் கருதி
வரி பதித்திடும் வறியவர்க்கு
பிற்போக்கு சிந்தனையுடன்
எடுத்துரைப்பது தனி திறமை..!
கருத்துள்ள கவிதையில்
சிறுமையான வரிகள் இருக்குமாயின்
அருமையான கவிதையும்,
பெருமை படாமல் போகுமென
பொறுமை இழந்து  கூறினால்
வீண் வருத்தம்  ஏன் சகோதரியே?
இப்படிதான் கவி பதிக்க வேண்டுமென
கட்டாயமும் இல்லை,
கட்டளையும் இல்லை.....
ஏற்று  கொள்வதும்,
ஏற்று கொள்ளாததும்,
அவரவர் விருப்பம்..
கருத்து பதிவதும், பதிவிடுவதும்
கவி மன்றத்தில் புதிதல்லவே...- இது
என் தாழ்மையான கருத்து.

அடுத்த தலைப்பு  தாழ்மையான கருத்து

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தெள்ளத்தெளிவான கருத்துக்கள் நண்பா !
இருந்தும் ஏன்   இத்துனை அமைதி ??

புத்தி  சொல்லும் நல்ல கருத்தை
பத்தி பத்தியாய் பத்தியிட்டு
வரிகளுக்கு கொஞ்சம் அழுத்தம் இட்டு   
எழுத்துக்களுக்கு கொஞ்சம் அடர்த்தியிட்டு
பதித்து இருக்கலாம் !

இருந்தும் ஏன்   இத்துனை அமைதி ??

ஒருவேளை
அது தாழ்மையான கருத்து என்பதாலோ ??

அடுத்த தலைப்பு
அமைதி


Offline Global Angel

அமைதியாய் இருக்கும்
சமுத்திரத்தை கூட 
ஆர்பரிக்கும் சுனாமியாக்கும்
அழுக்கு பிடித்த அதிர்வே
உன் அடங்காத வெறிக்கு
அப்பாவிகள் பலியாவது ஏன்
உன்னை எவருக்கும் பிடிக்காது
அதனால்தான் எம்மவரை
பலி கொள்கிறயா.....
பலி கேட்கும் உன்னை
பாதாளத்தில் அடைக்கும் சக்தி
பகவானுக்கும் இல்லையோ ..



சுனாமி


                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தெள்ள தெளிவாய்
இருந்த சமுத்திரத்தில்
எங்கிருந்தோ வந்த சுனாமியால்
சில கிருமிகள் கடலில் கலக்க
மாசு படிந்து போனது சமுத்திரம்
மசாகி போன சமுத்திரத்தை
சுத்தம் செய்வது கடினமெனினும்
கிருமிகளை அழிப்பது சுலபமே... ;) ;)



மாசு

 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இதை விட மிக தெள்ள தெளிவாய்
இயற்க்கை சீற்றத்தை கூற முடியாது.
அழுக்கு பிடித்த அதிர்வென்றும்,
அதிர்வின் கோர தாண்டவத்தில்
ஏற்பட்ட சுனாமியால் கிருமிகள் கலந்ததென்றும்,
சமுத்திரம் மாசகிபோனதென்றும்,
கிருமிகளை அழிக்க வேண்டுமென்றும்,
சீற்றத்தை அழகாய்
சீற்றத்துடன் கூறிய 
சகோதரிகளுக்கு வாழ்த்துகள்,
அழகு சமுத்திரத்தில்
கிருமியாகவும், மாசகவும்
இருக்க துளியும்
இவனுக்கு விருப்பம் இல்லை.
இனி வரும் காலங்களில் 
சமுத்திரம் மாசு படாமல் பார்த்து கொள்ளுங்கள்
நன்றிகளுடன் அன்பு சகோதரன்....


அடுத்த தலைப்பு  சீற்றம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel


இனிய சோதரனே
கொடுக்க பட்ட தலைப்புக்கு
கவிதை புனைந்திருப்பது என் குற்றமோ
கவிதையை கவிதையாக பார்க்க சொல்லிவிட்டு
இப்போது தாங்கள் மாறுபட்டு நிர்ப்பது ஏனோ ...?
வெறும் வார்த்தை சரங்களா உங்கள் பதிப்புகள்
ஆழமும் ஆறிவும் சார்ந்ததென்று நினைத்தேன்
அவசரமாக தாங்கள் அவதூறு கூறுவது ஏனோ
சீற்றம் கொள்ளாதுஅமைதியாக சிந்தனை செயுங்கள்
அனைத்தையும் அகத்தினில் போட்டு
அவசரமாய் முடிவு எடுப்பது
அழகல்ல ..



அழகல்ல ..
« Last Edit: April 29, 2012, 11:10:07 PM by Global Angel »
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எங்கள் பகுதியில் மிக அழகாய்
மிக,மிக அழகாய்,,ஒரு நதி,சிறு நதி

ஒரு காலத்தில் கண்கொள்ளா காட்சியாய்
கோடையில் கவின்மிகு குளிர்ச்சியாய் அந்நதி

இன்றோ நாற்றம் பிடித்த நச்சுக்கலப்பினில்
உள்ளூர்,வெளியூர் என உரிமத்தில் பேதம் இன்றி
பல பல தொழிற்சாலையின் கழிவுகள்
கலந்து,கழிந்து ,குழைந்து பாவமான கூவம் நதி

ஒருவழியாய் ஆகாய தாமரையை அகற்ற
ஒப்புகொண்டது ஒரு தொண்டு நிறுவனம்

கிருமி அகற்றும் உரிமை மட்டும் இன்னும்
உரிமம் பெறாமல் ஒருமையாய்,வெறுமையாய்

நல்ல நெஞ்சம் கொண்ட பெரும் கிருமிகள்
அகற்றும் பணியை ஏற்கலாமே சேவையாய்!

நாரி கிடக்கும் கூவம் ,
மாறி போகட்டும் பாவம் !

அழகாய் இருக்க வேண்டிய கூவம் நதி
அழுக்காய் இருப்பதும்  அழகல்ல !

சமுத்திரக்கிருமியே அழிக்கப்படும் போது
கூவம் நதி எம்மாத்திரம் !

அடுத்த தலைப்பு
எம்மாத்திரம்

Offline Global Angel

அழகாய் முளைத்து
அடர்த்தியாய் வளர்ந்து
பசுமையாய் கிளை பரப்பி
பரவலாய் நிழல் தந்து
காய்த்து பூத்து
கல கலத்து
கனிகள் பல ஈன்று
பருவத்துக்கு வந்து போகும்
பறவைக்கும் இரை தந்து
தன் பரிணாமத்தால்
பரந்து படர்ந்த உனக்குள்ளும்
புல்லுருவியாய் சில உயிரிகள்
உன் புனிதத்துக்கு புறம்பாய் சேர்ந்ததே ...
புல்லுருவிகள் அளிக்கப்படும் வரை
உன் புனிதம் காப்பது எம்மாத்திரம் ...?



நிழல்

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

நிழல் , அதன் நிழலையே கண்டு
பயம்கொள்ளும் பயந்தான்கொள்ளிகள்
சிலரை பக்கம் வைத்த்துகொண்டு
பேய்கதை ,பொய்க்கதை கட்டும்
மெய்ப்பாட்டியின் , பொய் கதை கேட்டு
மெய்சிலிர்த்து போக இனியும்
ஆள் உண்டோ ?
மனிதன் தன் புனிதம் காக்க
இனிதான் என்ன பணி புரிவானோ ??

அடுத்த தலைப்பு
மெய்பாட்டி

Offline Global Angel

மெய்ப்பாட்டி கதை சொல்லும் போதும்
கதையோடு ஆழமான கருத்தையும் உள்வாங்கி
கடமையை நிறைவேற்றுவாள் ...
பல பொய் பார்ட்டி மெய்யென்று சொல்லி
பல பொய்களை மெய்யை போல் புனைந்து
மாய வலைகட்டி போடுவார் .....
மெய்ப்பாடி சொன்ன கதைகளை
மெருகேறி வளர்ந்தபின்னும் மறப்பதில்லை
பொய் பார்டி பொய்கதைகளை
மெய்யான மனங்களும் மதிப்பதில்லை ..



ஆழமான

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அடடா !
ஆழமான ஒரு கேலிகதை !

"ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே"
எனும் பாடல் வரி ஒன்று தான் நினைவுக்கு வருகிறது !
வாழ்க பொய் வளர்ச்சி ! வளர்க பொய் பிரசாரம் !

அடுத்த தலைப்பு
பொய் பிரசாரம் 

Offline Global Angel

மறதிக்கு மருந்து
மறக்காமல் குடித்துவிடு
இலையேல் அவரவர்
பொய் பிரசாரம் கூட
மெய் பிரசாரமாய்
அவரவர்க்கே  தோற்றம் காட்டும்
கொடி பிடித்து
கோசம் போட்டு
கூட்டம் சேர்த்து
கட்சி சேர்த்து
அடுத்தவர் கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு
களம் பதிக்கும் களவாணிதனம்
கடுகளவும் இங்கில்லை ...
 
தேள் கொட்டி விட்டதோ ...
பரிதாபம்தான் ...


மறதி

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
களவாணித்தனம்  இல்லை தான்
ஒப்புகொள்கிறேன் ,ஒப்புக்கொள்கிறேன்
மறதியில் மருளி தவிக்கும்
மந்த புத்தி கொண்டவர்க்கு
சொந்த புத்தியே சொதப்பல் எனும்போது
களவாணித்தனம் புரிவதுகடினம் தான் .
அதனால் தான், கூட்டாய் களவாணித்தனம் புரிய
கூட்டுக்கு கூட்டாளியை பிடிக்க
ஆள் கூட்டல் நடக்குதோ ???
கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கொண்டவனையே
கள்வனாய்  சித்தரிக்கும் திறமை
சுட்டுபோட்டாலும் கல்லுளிமங்கையால்
மட்டுமே முடியும் !
தேள் கொட்டியது போல்  இல்லாவிட்டாலும்
கட்டாயம் கொசு முத்தமிட்டது  போல் இருக்குமே ???

அடுத்ததலைப்பு
கபடம்

Offline Global Angel

தன்னை போல் பிறரையும்
எண்ணிக்கொள்ளும் தரம் கொண்ட
மனிதர் கூட்டத்தில்
சொந்த புத்தி சொதப்பலாய்
தெரிவது ஆச்சரியமில்லையே
மறத்தி வழி வந்த
மானமுள்ள தமிழிச்சி
மறந்தும் கூட்டு கொள்ளாள்
மாற்றானை சாடுவதற்கும்..
எதுவுமே கொட்டவும் இல்லை
முத்தமும் இடவும் இல்லை
தேளுக்கும் தெரியும்
கொசுவுக்கும் தெரியும்
தீயை தீண்டினால் தீர்ந்து போய்விடும் என்று
தெரியாதவர்கள் என்ன பண்ணுவர்கள்...
ஆறறிவு ஜீவிகளாம் பீத்தி கொள்ளகிறார்கள் 



கூட்டு