நித்திலமே ! என் ரத்தினமே !
நித்தம் , நித்தம் என்
சித்தம் குளிர்வித்திடும் முத்தினமே !
சத்தியமாய் ஒன்றை சொல்லுகிறேன்
நினைவில் கொள்வேன் உன்னை என்றும் நினைவில் கொள்வேன் என
நெஞ்சுருக நீ சொன்னது , என்னை
உன் நினைவில் கொள்வேன் என்ற பொருள் பட அல்ல
உன் நினைவில் நீங்காமல் நிலைத்து , நிழலாடி
நித்தம் ,நித்தம் ,சத்தம் இன்றி உன்னை கொல்வேன்
எனும் பொருள் பட என்று இப்போதுதான் உணர்ந்தேன் !
Aduththa Thalaippu
NENJURUGA