Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 477380 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கூட்டு சேர்த்து குழி பறிக்கும்
எண்ணம் இல்லை
சிலரின் குட்டு வெளிப்பட்டதால்
தப்பித்த சந்தோசம் எனக்கு...
வஞ்சகம் எண்ணம் துளியும் இல்லை
நம்பும் மாந்தரை  ஏய்க்கும்
சிலரின் எண்ணம் விளங்கி
விலகிட்ட திருப்தி என்னுள்...

திருப்தி



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

மறத்தி  குறத்தி  பருத்தி

புண்ணாக்கு  என்றால்  ஒருத்தி...

நானும்  ஏதோ  கடிவாளம்  கட்டப்படாமல்

கட்ட்டவிழ்த்து  விடப்பட்ட  கட்டுக்கடங்கா  குதிரை

எனக்கருதி ,அதை அடக்குவோமே  என்று  களம் கண்டேன்

சில பல  கவிதையும்  பதித்தேன்

காலம கடந்த  பிறகுதான்

கொஞ்சம்  கொஞ்சமாய் தெரியவந்தது..

இது ஒரு நகைச்சுவை துண்டு
(காமெடி  பீஸ் )என்று

அக்கினி  அகிலாண்டம் ,தீபொரித்திரு முகம் ,கங்கு கந்தசாமி ,கொள்ளிவாய் கொடுவாயன் போல

கொடுமையானா கூட்டம்தான்  போல

எப்பா  சிரிச்சு  சிரிச்சு வயிறு வலிச்சது தான்  மிச்சம்

எப்படியோ , ஒரு பெரும்  தொல்லை  விட்ட  திருப்த்தி  தான்  உச்சம் 

Aduththa Thalaippu

SIRIPPU

Offline Global Angel

எட்டாத பழம் புளிக்குமாம்
அதுதான் இது போலும்...
தனக்குள் தானே சிரிப்பது இரு வகை
ஒன்று இன்பத்தை நினைத்து சிரிப்பது
பிரிதொன்று இன்பம் துன்பம்
தெரியாமல் சிரிப்பது ....
பாவம் ஏர்வாடிக்கு
அடுத்த வண்டி எப்போப்பா ...?

கடிவாளம் அல்லாத குதிரைதான்
இதற்கு கடிவாளம் அன்புதான்
அன்பென்ற பெயரில்
அணங்குகளை வசபடுத்த
துணியும் ஆசாமிகளுக்கெல்லாம்
அடங்காத குதிரைதான் ...
அடக்க நினைத்தால்
அவளவும் இழப்புத்தான் ...

திரை படபெயர்களும்
திரைப்பட பாடல்களும் இலாது போனால்
தள்ளட்டம்தான் போலும் ...
அந்தோ பரிதாபம் ....
அறுதி வரிகள்
உறுதியாய் அணங்குகள் பொதித்த வரி ..

காசிக்கு போனாலும் சனி விடாதாம்
யாரவது சொல்லுங்களேன்
காசியை விட வேறு உண்டா
கூவம் என்றாலும் குளிக்க தயார்
பாதி நாள் பேசிய பாவத்தை தொலைக்கனும்யா ....



காசி

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கடவுள் மேல் நம்பிக்கை இல்லை
காசியின் அவசியம் தேவையும் இல்லை..
புனிதமான காசி புனிதம் இழந்து போனது போல
அழகாய் இருந்தா கவிதை களம்
போர்களமாய் மாற
கலங்குது உள்ளம்...
கவிதையை விட்டு கதை வேண்டாம்...
சொந்த கதை, சோக கதை, காதல் கதை
புனைவதாக இருந்தால்
செல்லுங்கள் கதை பிரிவிற்கு....


கவிதை



« Last Edit: May 01, 2012, 07:54:14 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

எட்டாத  பழமா  ??
அழுகி  கெட்டு  போன  வெளிநாட்டு  பழமா  ????

ஏர்வாடிக்கு  வந்து  யாரையும்  பார்க்க    நேரம்  இல்லை
ரொம்ப  தூரம்  வேற ....

வேணும்னா கீழ்பாக்கம்  வந்து சேறு ..
பக்கம்  தான்  பார்த்து  போவேன்

படிகாரமும் ,பரிகாரமும்  தந்து  போவேன்

கல்லாட்டம்  ஆடும்  களவாணிகள்
கல்லுளி  மங்கைகளுக்கு

மத்தியில்  தள்ளாட்டம்  ஒன்றும்
பெரிதில்லையே  ?

ஒசியில் ஏசி  பயணம்  போக
யோசித்து  தான்  காசி  பயணமோ  ???

காசியாம்  , கர்மாந்தரமாம் ...

யோசிக்காமல்   பேசிக்கொண்டிருக்கும்
மாசுக்களை  எல்லாம்

தூசியை  விட  மிக  லேசாய்  ஊதி  தள்ளிடலாம்


அடேங்கப்பா  !

கரை  பூசும்  விளையாடிற்கு  குத்துவிளக்கு  ஏற்றிய  குலவிளக்கே  சோக  கவிதை  வாசிப்பதை  வேதனையின்  வெளிப்பாடு  என்பதா  ???
வேடிக்கையின்   வெளிப்பாடு  என்பதா  ???

எதுவானாலும்

கரை பூசும்  எண்ணம்  கடுகளவும்  எனக்கில்லை  என்பதற்கு   என்  பதிப்புக்களே
பேசும்  சாட்சியங்கள்

கவிதை  என்று  வந்துவிட்டால்  .... ஒரு  கண்ணாடி  முன்னாடி  கட்டப்படும்  பொருள்  தான்  பிரதிபலிக்கப்படும் .



அடுத்த  தலைப்பு

ஊதிடலாம்


Offline Global Angel

 


நரி கதை நன்றாகத்தான் இருக்கிறது ...
நரி புளிக்கும் என்றது ....
இங்கு வித்தியாசமாய் பழசு எண்ணுது...
நன்றி என் கருத்துக்கு உடன் பட்டதற்கு


அடடா... கீழ்பாக்கம் தான் ஏர்வாடி ஆகி போனதா .....?
அங்கேயே குடி இருக்கும் ஆளை பார்க்க
ஆவல் கொண்டோர் பட்டியலில் என் பெயரில்லை காண்...
அசச்சோஒ ..... பரிகாரம் என்று சொல்லி
பாவிகள் எல்லாம் காலில் விழுந்தால்
காசிக்கு போனாலும் தீராது ....
காசியெனும் புனித இடத்தையே
கருமம் என்று சொல்லும்
கருப்பு ஆடுகள் எல்லாம்
கருத்து சொல்வதுதான் கலிகாலம் என்பதோ ...?


செல்வத்திற்கு பெயர் போன
செழிப்பான நாட்டில் வாழும்
செல்ல மகளுக்கு
ஓசியில் போக அவசியம் ஏதுமில்லை
ஒன்று பண்ணலாம் ...
அந்த ஓசி இடத்தை
பகிர்ந்தளித்து தங்களையும் கூட்டி செல்லலாம் ....
காசியில் நீவீர் கால் வைத்தால்
காசியின் புனிதம் காணமல் போய்விடும்
காலம் முழுவதும் கங்கையில் குளித்தாலும்
அந்த பாவத்தை நான் தொலைக்கேன்
என் காசை செலவு பண்ணி
கறுமத்தை விலைக்கு வாங்க
நானும் என்ன அடி முட்டாளா...

ஆட தெரியாதவன்
அரங்கம் கோணல் என்றானாம் ...
அட மண்டே ...
எற்குதான் யோசிப்பதென்று
விவஸ்தையே கிடையாதா ...
பாம்பை தொரத்த பாட்டா  பாடுவார்கள் ...

பதிப்புகள் நன்றுதான் ....
அதன் பதிப்புரையில்
பல புஷ்பங்கள் அர்சிகபடுவதுதான்...
அந்தோ பரிதாபம்
பூனை கண்ணை மூடி பால் குடித்த கதை
பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழி..?

சப்பை கட்டு கட்டி
சாதரணமாய் ஊதிடலாம் என
மனப்பால் குடிக்கும்
மன்னவர்க்கு ....  மீண்டும் சொல்கிறேன்
மறத்தி இனம் இவள் மறந்துவிடாதே



புஷ்பங்கள்

« Last Edit: May 01, 2012, 10:04:41 PM by Global Angel »
                    

Offline Forum

பொதுமன்றம் என்பது நண்பர்கள் சண்டையிடுவதற்கான மைதானம் அல்ல. கவிதை களம் கருது மோதல் களமாகி பின்பு ஒருவரை ஒருவர் தூற்றிகொள்ளும் விதத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது . ஒருவர் கிளப்பும் தீப்பொறிக்கு மற்றவர் பதிலுக்கு இன்னொரு தீப்பொறி கிளப்ப இப்படியாக கவிதை களம் மற்றவர் கவிதை விளையாட்டை தொடராது வேடிக்கை பார்க்கும் இடமாக இருக்கிறது.வார்த்தைகளில் மற்றவரை தாக்கும் விதமாய் அமையும் கடுமையான சொற்களை பயன்படுத்தும் அல்லது இகழும் விதமாய் தொடுக்கப்படும் கவிதைகள் முன் அறிவிப்பு இன்றி அகற்றப்படும். இனி கவிதை விளையாட்டை தொடர்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Offline Rainbow

புஷ்பங்கள் தூசிக்க படுகின்றன
விதி ... குரங்கின் கையில் சிக்கிய
பூமாலைகள்  சிதைந்து
சின்னாபின்னமாய் போகுமே  தவிர
பூஜைக்கு வராது...




பூஜைக்கு வராது

Offline Global Angel

பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்கு வராது
உனக்காய் பூத்திருந்தும்
பூஜைக்காய் காத்திருந்தும்
வாடி போனபோதும் ...
என்றாவது உன் பூஜைக்கு
வரும் என்ற நம்பிக்கையில்
இந்த பூ ...


உனக்காய்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உனக்காய் எழுதும்
கவிதைகள்
உன்னை சேராது போனாலும்
என் நினைவுகளில் இருக்கும்
உனக்கு அற்பனமாகும்
என்ற நம்பிக்கையில்
தொடருவேன்
என் கவிதைகளை


நம்பிக்கை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel



நான் உன்னை சேராது போனாலும்
என் நினைவுகள் உன்னை சேரும்
என்ற நம்பிக்கியில்
என் பயணங்கள் ....


பயணங்கள்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

இறைநம்பிக்கை என்பதில் நம்பிக்கை குறைவு தான்
இரு பிறை சுமந்த, ஒரு பிறையாம் அவளை
தரை பிறையாய் இறக்கிய அவன் தம்
அருட்கொடையை, உணர்வுபூர்வமாய் உணர்ந்திடும் வரை .

முறை முறையாய் என பல முறை இல்லாவிடினும்
ஒரே  ஒருமுறையாவது என் அரவணைப்பில் அவள்
இருக்கும் அரும் வரம் தருவாய் எனும்
நம்பிக்கையின் பால் கொண்ட நம்பிக்கையில் அல்ல

வளர்பிறையாய் வளரும் அவள் குறை (சோகம்) யாவும்
தேய்பிறையாய் தேய்ந்து விடும் எனும் நம்பிக்கையில்
நான் தொடர்ந்திருக்கும் பயணங்களில்
இறைநம்பிக்கை பயணம் முதன்மை ..


அடுத்த தலைப்பு

முதன்மை

Offline Global Angel



என்னை சுற்றிலும்
பல நினைவுகள்
இருந்தாலும்
அவற்றுள்ளே முதன்மையாய்
உன் நினைவுகள் மட்டும்



நினைவுகள்
                    

Offline supernatural

முதன்மையான ...
மென்மையான...
உன் நினைவுகள்...
மனதில் நீங்கா ..
பசுமையான..
பொன் நினைவுகள்....


மென்மையான

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

என் மென்மையை
என் பெண்மை
சோதிக்கப் படுகிறது 
உன் மௌனங்களால்




பெண்மை