கனகாலமாய் என்னுள்ளே,
ஓசைபடாமல் லேசாய்,
ஒரு ஆசை, சின்னஞ்சிறு ஆசை .
அதிகாலை வேலை ,அழகுச்சோலை
அச்சோலையை ஒட்டி அழகாய்
சிறிதாய் ஒரு சாலை,
சாலையின் ஓரத்தில் ,
குளிர்நிலவாய்,தளிர்நிலவாய்
சேலையணிந்த உயிர் சோலையாய்
நீ அமர்ந்து கோலம் போடுகையில்
உன்னை நான் சீண்டிட ,சீன்டலின்
சிணுங்களில், சிதைந்த கோலத்தின்
பொடிபடிந்த உன் கைகளால்
என்னை தள்ளிவிட, என் கன்னத்தில்
வண்ணவண்ணமாய் பல வண்ணம் ,
நீ போடும் கோலத்திற்கு கடும் போட்டி
நான் என மனதிற்குள் ஒரு எண்ணம் !
அடுத்த தலைப்பு
வண்ணம்