Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 474883 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
காதல் எத்தனை மகத்தான
ஒரு கொடை.
அதன் மகத்துவத்தை,மந்த
புத்தி கொண்ட மக்கு வாத்தியான்
எவனோ , மாற்றி மாற்றி
உன் மனதில் ஏற்றி இருக்கிறான் ?
காத்திருப்பு,கண்ணீர்,கல்லறை
சோகம்,துரோகம்,ஏமாற்றம்,
பிளவு,பிரிவு,வருத்தம் ,அவலம்,
ஓலம் , ஒப்பாரி , ஒருமுறையாவது
இவைகளை விடுத்து இனிமையாய்
இன்பமாய்,காதல் பார் ஒய்யாரி !

அடுத்த தலைப்பு
ஒய்யாரி

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கவிசோலையில் புதுமையான சொல் "ஒய்யாரி"
சொல்லின் பொருள் தேடி
ஒய்யார நடை நடந்தேன்
தமிழ் பக்கங்களையும்,
தமிழ் அறிந்தவர்களையும் தேடி
அங்கோ வார்த்தைகள் கோடி!
கோடி வார்த்தையிலும்
தேடிய வார்த்தைக்கு
பொருள் கிடைக்காமல் வாடி?
சொல்லுக்கு பொருள் வேண்டி
வந்துள்ளேன் உன்னையே நாடி?


அடுத்த தலைப்பு உன்னையே நாடி

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஒய்யாரமாய் உடல் வாகினை
ஒய்யாரமாய் நடக்கும் நடையினை
ஒய்யாரமாய் ஒப்பனைகளினை
மெய்யோரமாய் மட்டுமின்றி 
மெய்பூராவும் வாய்த்து வைத்திருக்கும்
ஒருவரைத்தான் ஒய்யாரி என்பர்
இதையே ஒரு வடமொழியாள்
வாய்த்து வைத்திருந்தால்
பி(ய்)யாரி ! 
இதற்க்கு ஏன் வீணாய்
 என்னை நாடி
ஓடி, முகம் வாடி ,வேண்டி ?
இது தான் விஷயம் என்றுரைத்திருந்தால்
பதில் வந்திருக்குமே உன்னையே நாடி .

அடுத்த தலைப்பு
வடமொழியாள்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சோலையில் ஒய்யாரி மலர்களாய்
பலர் இருந்தும்
"ஒய்யாரி"க்கு கவி எழுதாதது ஏனோ?
ஒருவேளை ஒய்யாரிகளுக்கு
ஒய்யாரியின் பொருள்
விளங்கவில்லையோ? என்னவோ?
நம்மொழி, நம்நடைமொழி,
தம்மொழி, தமிழ்மொழி தெரிந்தவர்களே
தமிழ்மொழியாள் ஒய்யாரிக்கு
வரி படைக்காதவர்கள்
வடமொழியாள் பி(ய்)யாரிக்கு மட்டும்
வரி சேர்த்திடூவார்களா என்ன?


அடுத்த தலைப்பு தம்மொழி
« Last Edit: April 20, 2012, 06:56:25 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

தன் தலைவனை இழந்தாலும்
தம் மொழி
தன் மானத்தை
தன் இனத்தை
தன் சுய கௌரவத்தை
இளக்காதவன்
புலம் பெயர் தமிழன்


தமிழன்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தன்  இனமும்  தன் மக்களும்
தாக்கபடுவது  ,தகர்க்கப்படுவது
தாங்கிக்கொள்ள முடியாத துயரம் தான்.
தன் நாட்டையே  தகுதியும்,தரமும்
துளியும் இல்லாதவரிடம் தாரை வார்த்து
தவித்துகொண்டிருக்கும் தமிழன்,தமிழகம்
துயரத்தின் உயர்ந்த சின்னம் !

அடுத்த தலைப்பு
துயரச்சின்னம்

Offline supernatural

காதல் சின்னமாய்..
இனிமையான நினைவுகளை.. ..
கேட்டேன்  ...
நினைவுகளே  இன்று ....
துயரசின்னமாக உருமாறி...
மனதை உருக்குகிறதே.. ..

உருக்கமாய் .


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
காதல்  சின்னமாய்  இனிமையான
நினைவுகளை  கேட்டவள் 
நினைவுகளை கொஞ்சும் , நெருக்கமாய் ,
சுருக்கமாய் இன்றி பெருக்கமாய் 
பொத்தி போற்றி பாதுகாத்துக்கொள்
உருக்கமாய் இன்றி ,இனி
இறுக்கமாய் மனதில்
இனிமையாய் என்றும்  நிலையாய்
இருக்கும் !

அடுத்த தலைப்பு
இறுக்கம்

Offline supernatural

உருக்கமான நினைவுகளை ...
நெருக்கமாய்..பெருக்கமாய்..
என்றும் இருக்கமாய்..
இதயகூட்டில் ...
பொருத்தமாய்  சேர்த்துவைப்பேன்..

இதயக்கூட்டில்

  ..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கிறுக்கன் இவன் களப்பணியில்
கிறுக்கும் கிறுக்கல்களை  கூட
படித்து,படிப்பதே பெரும் கௌரவம்
படித்தும் கிறுக்கன் இவன் பாணியில்
பதிலும் பதிப்பது (ஒளியின் வெளிபாடு )
ஒருவர் மட்டுமே என்றிருந்தேன்
இதோ புதியதாய் ஒருவர் .....
நினைக்கும் போதே இதயக்கூட்டில்
இதமாய் ஒரு இனிமை, இன்பம் !

அடுத்த தலைப்பு

இன்பம் 

Offline supernatural

கவிநயம் நிறைந்த ..
வரிகளை காண்பதே  இன்பம்..அதிலும்..
தமிழ் மனம் கமிழும் ...
இனிமை தமிழில்...
மனம் மயங்கும் வரிகளை..
ரசித்து ..உணர்ந்து...வாசிப்பதோ ..
இன்பத்திலும் பேரின்பம்..

வாசிப்பது
..

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel



என் இதய வீணையை
வாசிப்பது நீயானால்
வாழ் முழுவதும்
நீ மீட்டும்
வீணையாய் இருக்க சம்மதம்


சம்மதம்
                    

Offline supernatural

வீணையாய் மட்டும் அல்ல..
மனதில்  நிறைந்தவளாய்..
உன்னை உணர்ந்தவளாய்...
இருக்கவும் சம்மதம்  .......
உன் பொன்னான இதயத்தை....
என்னக்கானதாய் தருவாயானால் ...

பொன்னான
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இருப்பதற்கு இதமான  இடம் இன்றி
இடர்பாட்டுடன் இங்குமங்கும்
இங்கு இடுக்காவது இருக்குமா
இருப்பதற்கென, இருக்கும் இதயத்திற்கு
பொன்னான இதயமே இடமாய்
இருக்குமென்றால் மண்ணோடு
மண்ணானாலும் என்ன ?

அடுத்த  தலைப்பு
மண்ணோடு

Offline Global Angel

மண்ணோடு மண்ணாய் போனாலும்
மாந்தரின் குணம் மாறுவது ...
மாறாது மனமே ...
மண்ணாகி விடு
மானம் கெட்ட வாழ்வு வாழ்வதற்கு
மரணம் மகத்தானது


மகத்தானது