Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 474895 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அலுவலகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால்
மனம் எதிலும் ஈடுபடாமல் அது
ஒன்றன் மீதே தழுவி நிற்பதால்
அதை விடுத்து நழுவ நினைத்தாலும்
மனதின் ஓரம் தழுவல்கள்
நீண்டுகொண்டே இருப்பதால்
எதையும் தழுவமுடியாமலும்,
அதை விட்டு நழுவ முடியாமலும்
தவிப்பதால் மன்ற புறக்கணிப்பு...?


அடுத்த தலைப்பு புறகணிப்பு 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline RemO

அலுவல் பல இருந்தும்
அவற்றை எல்லாம் புறகணித்து
இரவுபகல் பாராமல்
தூக்கம் மறந்தும்
துக்கம் மறக்க
உன்னுள் மூழ்கி
இன்பத்தில் திளைக்க
தினந்தினம் ஓடோடி வந்த
நானே இன்று உன்னை புறக்கணிக்கிறேன்
கயவன் ஒருவனின் காரணத்தால்


அடுத்த தலைப்பு:


கயவன்

Offline RemO

என்னவள் என நான் எண்ணியவள்
என்னிடம் மயங்கியதன் மர்மம்
என்னவென கேட்டு
என் காதலால்
என் பாசத்தால்
என் நட்பால்
என் சிரிப்பால்
என் கோபத்தால்
என் கோபத்திலும் தலை தூக்கும் அன்பால் கவர்ந்தேன்
என காரணம் நூறு கூறுவாள்
என்றெண்ணிய இம்மடையனின் மனதிலும்
பதியும் படி கூறிச் சென்றாள்
பொழுது போக்க வேறு வழி இல்லையென


அடுத்த தலைப்பு :


மடையன்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மடையனே ! நீ  மடையனே  !
உன்னவள் அவள் உன்னோடு  தன்
பொன்னான  பொழுதுகளை 
செலவிடுவதை  பெரிதாய்  எண்ணி
கூறியதை, மடை  திறந்த
வெள்ளம்  போல்  கோவத்தில்   கொப்பளித்துவிட்டாயோ  ??

அடுத்த  தலைப்பு
கொப்பளித்துவிட்டாயோ  ?
« Last Edit: April 25, 2012, 04:02:13 PM by aasaiajiith »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இவன் மூடன்.! மடையன்.!
என கோபத்தில்
கொப்பளித்துவிட்டாயோ.!
நிச்சயமாய் அவன்
மூடனும் அல்ல,
மடையனும் அல்ல...
மங்கை ஒருத்திக்கு ஏங்கிடும்
மாக்காண் இவன்...
எப்படி என்கிறாயா?
அவள் ஒரு பார்வைக்கே
ஓராயிரம் யுகங்கள்
வாழ்ந்திடலாம்,
 அவளோடு உரையாடிய,உறவாடிய
நிகழ்வுகளில் ஒன்று போதுமே
காலமெல்லாம் வாழ்ந்திட
அப்படியிருக்க அவள் ஏமாற்றிவிட்டாளென
வீணாய் பிதற்றுபவனை
என்ன சொல்லி அழைப்பது?


அடுத்த தலைப்பு பிதற்றுபவனை
« Last Edit: April 25, 2012, 05:41:21 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அச்சோ! நானே தேவலை
கொஞ்சம் கடு சொல் கூறினாலும்
மனதிற்கு ஆறுதலாவது கிடைத்திருக்கும் .
ஈதென்ன கொடுமை??
பாவம் வேதனையில் பிதற்றுபவனை
மாக்கான்  என்பதா??
ஒருவேளை மகான் தான் மருவி
மாக்கான் ஆகிவிட்டதோ ??

அடுத்த தலைப்பு
மகான்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
மகானா! யார்  இவனா ?
மது , மாது , சூது , அனைத்தும்
மயக்கம்  தரும்  வஸ்த்து  என்பதை
மறந்த  மதிகெட்டவன்.
மதிகெட்டவன் இனி வரும் காலங்களில்
மகானாகவும்  மாறுவான்
ஆச்சர்ய  படுவதற்கில்லை.!
மாற்றம் ஒன்றுதானே மாறாதது!!

அடுத்த  தலைப்பு  மதிகெட்டவன்



யார் மனதையும் புண்படுத்த அல்ல
பண்படுத்த

கவிதை நடைக்காக சேர்ந்த வார்த்தைகள் 
அததனையும்....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

காதல் போர்களத்தில் காயம்
பட்டபிறகும் ஓடாமல்
நிற்கும் உண்மை வீரனா -நீ
மானம் கெட்டவனே
மதி கெட்டவனே -அவர்கள்
உன்னை கல்லால் அடிக்கவில்லை
பரிசோதிக்கிறார்கள்


அடுத்த தலைப்பு :ஓடாமல்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்
ஓடாமல் ,மெல்ல ஆமையாய் நகரும்
காலதேவன் , ஏனோ ?
உன் வருகைக்கு பின் மட்டும்
கால்களில் இறக்கை கட்டி
பறக்கின்றான்  ???
ஒருவேளை ,காலதேவனையே
காக்கவைத்து காக்வைத்து
காலாவதி ஆக்கிய
புண்ணியவதி நீயோ ??

அடுத்த தலைப்பு
புண்ணியவதி

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
மூடனாக்கினோம்,
மடையனாக்கினோம்,
எதையும் தெரியாத மாக்கானாக்கினோம்,
மதி மயங்கியவனை மதிகெட்டவனாக்கினோம்,
மனம் மாறி மகானாக
மாறுவானென பார்த்தால்
மானம்கெட்டவனாக்கிவிட்டாளே!
இந்த புண்ணியவதி
இவன் என்ன செய்வான்
இது கொடுமையிலும் கொடுமை.

அடுத்த தலைப்பு கொடுமை
« Last Edit: April 26, 2012, 10:41:57 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

சித்தனாய் பிறந்து
விட்டோமென்று  பித்தனாய்
திரிந்து அலைய வேண்டாம்
கொடுமைகள் கொக்கரிக்கும் போது
குப்புற படுத்து குமுற வேண்டாம்

அடுத்த தலைப்பு :குமுற வேண்டாம்



Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நண்பா !
ஆக்கினோம் , ஆக்கினோம் ,ஆக்கினோம்
என்கிறாய் எனையும் உனையும் இணைத்து
அடிப்படையில் நான் ஆக்கினேன் ,அவனை
மடையன் ஆக்கினேன் ,அவளின் எண்ணத்தினை
தவறாய் கருதி குமுற வேண்டாம் என கருதி.
தவிர ,விடப்பட்ட தலைப்பும் மடையன் என்பதால்
அதுவும் அவனை ஆதரிததே ஆக்கினேன் .
மற்ற இத்தாதி இத்தாதி எல்லாம் யவர்
அருட்பெரும்  கிருபையால் கிட்டிய
அர்ச்சனையோ ??

அடுத்த தலைப்பு
அர்ச்சனையோ ?

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அர்ச்சனையோ...!
அல்ல கர்ஜனையோ ..!
சத்தியமாய் தெரியவில்லை
சந்தவரிகளில் வந்தது
சுத்தமாய்  விளங்கவும் இல்லை
சித்தனாய் பிறக்கவும் இல்லை
பித்தனாய் அலையவும் இல்லை
ஆனால்
கொடுமைக்கு குமுறி
கொண்டிருகிறேன் என்பது மட்டும் உண்மை...



அடுத்த தலைப்பு சந்தவரிகள்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline RemO

சிந்தையில் தோன்றிய
சந்தவரிகளில் தோரணம் கட்டி
தோழன் ஒருவனை
மடையனாக்கி,
மூடனாக்கி,
ஆசை ஆசையாய்
மாக்கான் ஆக்கும் சகோதரா
இவன் மது மாதுவிடம் மயங்கும்
மதிகெட்டவன் அல்ல
காதலில் மயங்கி
மதியை மறந்தவனே 


அடுத்த தலைப்பு:
மறதி
« Last Edit: April 26, 2012, 09:19:11 AM by RemO »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மறதியின் மூல பிரதியே !
மடையன் என ஆக்கியதாய் நீ
நீட்டிய குற்றச்சாட்டினை, நான்   
உண்மையாக என்றாலும் உடன்பிறவா
உடன்பிறப்பு நீ என்பதால் வன்மையாக அன்றி
மிக மென்மையாக கண்டிக்கின்றேன் !
மடையன் என உன்னை நீயே
ஒப்புக்கொண்டு அங்கீகரித்துகொண்ட ஒன்றை
ஒருவர் ஆக்கிதாய் கூறியது
மறதியின் உச்சமோ ??

அடுத்த தலைப்பு
உச்சமோ ??