Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529380 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மனமே !
மகத்தான மனமே !
மனதுக்குள் தேவதையாய் ஒரு
மகத்தான ஜீவன் இருக்கும் பொழுது
உனக்காக உருக உயர்  ஜீவன் இருக்க
 மதி கெட்டு மயங்கும் 
மந்திகளை பற்றி வருந்திக்  கொள்ளாதே !
உண்மை உணர்ந்து திருந்தி வந்தால்
மனம், வருந்தி வந்தால் ,உன் மனம்
கவர கரணம் அடித்தால் ,மனமே
மந்தியானாலும் பொருந்திக்கொள் !
போனால்போகட்டும் !

அடுத்த தலைப்பு

பொருந்திக்கொள்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


மரம் விட்டு மரம் தாவும்
மந்தி இனமே
எப்படிதான் உன் மனம்
மரத்துக்கு மரம் பொருந்துகின்றதோ... ?
ஏதாவது ஒரு மரத்தில் பொருந்திகொள்
இல்லையேல் மரணத்திலும் மேலான
மானம்  உன்னுடன் பொருந்தாது போயிடும்


மானம்

                    

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
மானம் விட்டு..
தன்மானம் கெட்டு  ..
ஒரு நிலை வருமாயின்...
உயிர் விட்டு விடுவேனே  தவிர..
இவ்வையகத்தில் நிலைகெட்டு ...
வாழா  உயர் தமிழன் நான்..

தன்மானம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அடுக்கடுக்காய் பல இடர்கள்
தமிழனுக்கு நம் நாட்டிலும்
அயல் நாட்டிலும்
அத்தனை இடர்களையும் களைய
தன்மாணமுள்ள தமிழர்கள்
அனிஅனியாய் திரளாமல்
அனைவரும் ஓர் அனியாய்
திரண்டால்.... தொடர்ந்து வரும்
இடர்கள் அடர்ந்து வந்தாலும்
முளையிலேயே கிள்ளி எறிந்திடலாம்.!
 

அடுத்த தலைப்பு இடர்கள்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
எத்தனை எத்தனை இடர்கள்
தொடராய் தொடர்ந்து
தொடர்ந்தாலும்
ஸ்ரீ தேவியே ,உனை உன்
தமக்கை மூதேவின் முழு
குணமே வந்து  படர்ந்தாலும் ..

அன்றும் இன்றும் என்றும்
ஸ்ரீ தேவியின் பெருமை
குணம், புகழ் தீராது, மாறாது

அடுத்த தலைப்பு
புகழ் தீராது

 

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கவிபாடும் கம்பன் போல்!,
கவியரசு கன்னதாசன் போல்!,
கவிபேரரசு வைரமுத்து போல்,!
கசப்பில்லா தமிழில்,
கற்கண்டாய் இனிக்கும் தமிழில்
கவிமழை பொழியும்
கவிகளின் புகழ்தீராது!

அடுத்த தலைப்பு கசப்பில்லா

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கசபில்லா தமிழில் .
கற்கண்டாய்  இனிக்கும் தமிழில்
கற்கண்டின் சுவை கொண்ட வார்த்தைகள்
நிறைந்த வரிகள் பதிக்காவிட்டாலும் ,
ஒருபோதும்  பாகற்க்காயாய் கசக்கும்
கசப்பு வார்த்தைகளும்,படிப்போர் மனதை
துண்டு  துண்டாக்கும் கசாப்பு வார்த்தைகளும்
ஒரு போதும் பதிக்கமாடான் -
இந்த கத்து குட்டி கவிஞன் !

அடுத்த தலைப்பு
கசாப்பு வார்த்தை

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
கசாப்பு வார்த்தைகளால் ....
கசப்பான நினைவுகளால்...
லேசான என் மனதை..
சேதமாக்கிய  வலியோடு நான் ..
சேதாரம் ஏதும் இல்லாமல் ..
சுகமாய் நீ..

சேதாரம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

அடப்பாவமே !
சேதாராம் ஏதும் இன்றி நானா ?
உன் இனிய ,கனிவு நினைவுகளால்
சிதைந்து சேதாரமான என் மனதை
சோகமாய் கண்டுசென்ற சமூக
ஆர்வலர்கள் அளித்த அறிக்கையை
ஆதாரமாய் சமர்பிக்கின்றேன் !
" சமீபத்திய சீற்றத்தின் பொது
ஜப்பானையும்,இந்தோனேசியாவையும்
சிதைத்தைதை  விட பெரும்  சேதாரம்
செய்திருக்கிறதே, சிறப்பாய்
"இயற்க்கை " "

அடுத்த தலைப்பு
இயற்க்கை

Offline Bommi

கடல் காற்றை உணரலாம்
மலையின் உயரம்  அறியலாம்
இயற்க்கை கண்டு ரசிக்கலாம்
எரிமலையின் வேகத்தை கண்டு பிடிக்கலாம்
பூகம்பம் அளவு  அளக்கலாம்
ஒரு பெண்ணின்    உள்ளத்தை கண்டுபிடிக்கும்
கருவியை இன்னும் யாரும் கண்டு பிடிக்க வில்லையே

அடுத்த தலைப்பு :எரிமலையின்





Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முன்னோர்கள் விட்டு சென்ற முழு
முட்டாள் தனங்களில் முதல்
பத்தில் இதும் ஒன்று !

எரிமலையின்,பூகமபத்தின்
மலையின் ,காற்றின்
ஆகமொத்தம் உதாரணமாய்
அழிவுகளின் அளவீடுகள்

அதிசயம் என்னவென்றால்
இதை ஆமோதிப்பதே பெண் .
மென்மையான ,மேன்மையான
உண்மையான பெண்ணின்
நல் மனதின் ஆழம் அறிவதும்
அளவினை அறியவதும்
உன்னதமான அந்த மனதின்
மட்டும் அல்ல உள் மனதின்
உள் ஆழமும் , இறைவனால்
முடியுமோ? முடியாதோ ?
பெண் மனதில் இருப்பவன்
ஒருவனால் சத்தியமாய்
சாத்தியமே !

அடுத்த தலைப்பு

சாத்தியமே !

Offline Bommi

பூக்களை பற்றி எழுதினேன்
அது விற்பனைக்கு அல்ல
குளத்தை பற்றி எழுதினேன்
அதில் கல்லை தூக்கி எறிவதற்கு அல்ல
சிகரத்தை பற்றி எழுதினேன்
அதை நோக்கி நடப்பதற்கு அல்ல
மழை பற்றி எழுதினேன்
அதில் நனைவதற்கு அல்ல
பெண்ணின் மனது பற்றி எழுதும்
சாத்தியமே ஒரு கவிங்கனின்
கற்பனையே

அடுத்த கவிதை :விற்பனைக்கு



Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தன் மானத்தையும் மிஞ்சிய
தன் ஆசையால்
தரம் கெட்டு போய்
தழுவல்கள் நீள்வதால்
தாய்க்கும் மேலான
தமிழ் மொழியே
நீ பலர் படைப்பில் விற்ப்பனைக்கு ...



தழுவல்கள்
                    

Offline Bommi

உன் அழகை பார்த்து வியந்து விட்டேன்
நீ நெருப்பு என்று தெரியாமல் உன்
வெளி தோற்ற அழகை கண்டு
உன்னை என் கை கட்டி தழுவல்கள்
செய்த போது தான் தெரிந்து
நீ என்னை சுட்டு விடுவாய் என !!!!

அடுத்த கவிதை :அழகை கண்டு

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "
உண்மை ஈதெனில் ஒப்புக்கொள்ளமாட்டேன்
சிலருக்கு அடிப்படியில் புத்தியோ உச்சம் -இருந்தும்
அளவிட முடியா ஆத்திரமே மிச்சம்
ஆத்திரம் கொண்டால் அவர்க்கு மற்றவை
எல்லாம் மிக மிக துச்சம்
வழி தேடி ,விழி மூடி, மனம் ஆறும் வரை
பழி பாடி முடிக்கும் வரை
அவருக்கு நிகர் அவரே தான் போடி !

இவை அனைத்தும் யாரோ ஒருவரின்
வினோத,விஷேஷ ,வித்தியாச
குனாதிசயத்தின் ஓர தழுவல்கள்
சமயத்தில் என்னை நானே அறியாமல்
நழுவ விட்டுவிடும் நழுவல் தகவல்கள் .

இன்னும் என்னனமோ சொல்லத்தான்
மனதில எண்ணம்
உன் வரிகளின் அழகு கண்டு மேற்கொண்டு
ஏதும் சொல்லாதது திண்ணம் .

அடுத்த தலைப்பு
ஓர தழுவல்கள்