Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 476693 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
உன்னை துச்சமாக எண்ணி
எதையும் கூறவில்லை..
துச்சமாக நீ ஆகிவிடக்கூடாது
உச்சத்தின் உச்சமான 
உச்சாணி கொம்பில்
உன்னை ஏற்றதான் அன்பு சகோதரனே...!
உன்னிடம் ஒரு கேள்வி சகோதரா
எதன் மீதாவது பற்று
வைத்தால் தானே காதல்
அப்படி இருக்க
மது, மாது மீது மயங்காதவன் என்றும்,
காதலில் மயங்கி மதி மறந்தவன் என்றும்
கூறியுள்ளது மதி மறந்ததின் உச்சமோ...!



அடுத்த தலைப்பு மயங்காதவன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நான் கேட்க நினைத்ததில் சில
மிக முக்கிய விஷயங்களை நீ
வருடியிருக்கின்றாய் ,
வருடியதோடு  மட்டும் நில்லாமல்
சில சமயம்  மனதை திருடி இருக்கின்றாய்
சில சமயம் நெருடியும் இருக்கின்றாய் ..
மது மீதும், மாது மீதும் மயங்காதவன்
என்பது சிறு நெருடல் தான் எனக்கும் .
காதல் மாது வுடன் தொடர்புடையது,
காதல் கசந்தால் மது உடனும்
தொடர்பு கொள்வது என்பது  வழக்கு...
அப்படி இருக்க , இவை இரண்டிலும்
தொடர்புடையவரை மதிகெட்டவன் என
சொல்லி கேட்டதில்லையே ??

அடுத்த தலைப்பு
கேட்டதில்லையே ??

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அன்பாய் ஆதரவாய் பேசி
முப்பொழுதும் தென்றலாய் வருடியவள்,
முழுதாய் இத்திருடனை திருடியவள்
இப்பொழுது.....
இதயதிருடனை
வருடாமல் நெருடி சென்றதேனோ?
இனியவளே இம்மாதிரி
கடுசொல்லும், சுடுசொல்லும்,
உன்னிடம் கேட்டதில்லையே?

அடுத்த தலைப்பு சென்றதேனோ?

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கிறுக்கன் இவன் வரைந்து வைக்கும்
கிறுக்கல் கவிதை அனைத்திற்கும்
திருத்தம் என்று எதையும் சொல்லாமல்
விருத்தம் போல வரி வரியாய் வரியிட்டு
என் வரிகளை பொன் வரிகளாய் பாவித்து
நறுக்கென விமர்சன பரிசதனை
வாரி வாரி வழங்கிய என் வெளி நாட்டு
வெள்ளிநிலவே !
விமர்சன வள்ளலே !
விட்டு விலகுவாய் என தெரிந்ததுதான்
இருந்து இப்படி சொல்லாமல்
கொள்ளாமல் கொன்று  சென்றதேனோ ?

அடுத்த தலைப்பு
கொன்று

Offline supernatural

கொன்று சென்றேனா  ??
இல்லை இல்லை....
வென்று  சென்றேன்....
இனிமையான  இதயத்தை...
அருமையான அன்பை...
நெகிழவைக்கும் நேசத்தை
என்னக்கே என்னக்காய் ...
வென்று தான்  சென்றேன்...

வென்று
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

 
வென்று தான்  சென்றாய் ,நன்று
நானும் தோற்று தான் நின்றேன்
நீ வெல்ல வேண்டும் என்று  .
ஒன்று மட்டும் சொல்கிறேன்
அன்றல்ல இன்றல்ல என்றென்றும் 
நீயே வெல்லவேண்டும் என்று.
வென்றதும் சென்றதும் சரி தான்
எனை , மனம் உருக்கும் உன் நினைவில்
கொன்றது மட்டும் முறையா?
நினைவில் நீங்காமல் நிலைத்து
எனை கொடுமை செய்து கொல்பவளே
என்றேனும் ஒரு நாள் முழுதாய்
கனவில் வந்து, கொன்ற மனதிற்கு
உயிர் தருவாயா ?

அடுத்த தலைப்பு

உயிர் தருவாயா ?

Offline Bommi

உன்னை சந்திக்காத நாட்கள்  உண்டு
சிந்திக்காத நாட்கள் இல்லை
உன் மொழி கேட்காத நாட்கள் உண்டு
உன் விழி நினைக்காத நாட்கள் இல்லை
நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம் -நாம்
இணையத்தால்  சேர்ந்த இந்த நட்புக்கு
உயிர் தருவாயா என் தோழனே !!!

அடுத்த தலைப்பு: இணையத்தால்




« Last Edit: April 28, 2012, 02:54:28 PM by Bommi »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இணையத்தால் தான் இணைந்தோம்
இதயத்தால் அல்ல
இதயத்தால் அல்ல என்றாலும்
இணை ஈடில்லா நட்பு - நம்
இணைய நட்பு !

அடுத்த தலைப்பு  இதயத்தால் 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

நம் நட்பு வென்றிருந்தததால் தான்
நல்ல தோழன் கிடைத்தாய்
FTC க்கு நல்ல கவிகளை
நல்கிய நாயகன் நீயே
இதயத்தால் வேறுபட்டு இருந்தாலும்
நட்பால் ஒன்று பட்டு உயர்த்தியவன் நீயே !!!


அடுத்த கவிதை :நல்கிய


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நல்லதோர் கவிதையை  நல்கிய
நல்லவளே   !

 
தலைப்பை  தவிர  பிறிதொரு  வார்த்தைக்கான   பொருள்  புரியும்
படி  இருந்தால்  நன்றாக  இருக்கும் .

அடுத்த  தலைப்பு

நன்றாக     இருக்கும்
« Last Edit: April 29, 2012, 05:59:59 PM by aasaiajiith »

Offline supernatural

மன்னவனே....
என் மனதை அறிந்தவனே...
அன்பால் ...நேசத்தால்...
மனம் நிறைந்து இருப்பவனே...
என்றும் நீ என் அருகில் ..
இருக்கும் வரம் கிடைத்தால்...
என்(நம்) வாழ்வு ....
நன்றாக இருக்கும்..

வரம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கேட்கும் வரம்
எல்லோருக்கும் கிடைபதில்லை
கிடைக்கும் வரம்
எல்லோருக்கும் நிலைபதில்லை
நிலைக்கும் வரம் வேண்டுமெனில்
நிஜமான நேசம் கிடைக்கவேண்டும்
நேசத்தை தேடும் பெண்ணே
புரிந்துக்கொள்
பாலும் கள்ளும்
ஒரே நிறம் தான் ;) ;)


நிறம்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

வெறும் புறக்கண்களால்  பார்த்து..
பாலையும் கள்ளையும்....
பேதம் பிரித்து பார்க்காமல்..
போதையில் மாட்டிக்கொள்ள ...
பேதை இல்லை நான்..

மெய் அன்பு..பொய் நேசம் ..பிரித்துஅறியும்  மேதையே..

நிறம் பிரித்து பார்க்கவும் தெரியும்..
தரம் பிரித்து பார்க்கவும் தெரியும்..
ஆதலால்...
வீண் வருத்தம் வேண்டாம்  தோழியே ...

வீண் வருத்தம்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கவிச்சமர் ,கவிச்சமர்  என்பார்கள்

 கேட்டதுண்டு , கேள்விபட்டதுண்டு
கண்ணால்  கண்டதில்லை

சங்க  காலத்தில் தான் காண  கிடைக்கும்  என்றிருந்தேன் 

வீண்  வருத்தம்  வேண்டாம்  !

கவிச்சமர்  எங்க  காலத்திலும் 
உண்டென்று  உணரவைத்து
கண்ணால் காணவும்  வைத்த
கவிதாயினிகளுக்கு  நன்றி  !

ஒரு  குறை  , சிறு  குறை 

ஒரே  ஒரு ஆண்  கவி உள்ளே  ஒப்புக்காவது  வந்தால்


சமர் களத்தில்  நானும்  களம்  கண்டிருப்பேன்  !

ஒளியின்  பிரதிபலிப்பே  !
விரைந்து  வா  உன்  சேவை  இங்கு இப்போது தேவை !

அடுத்த  தலைப்பு

கவிச்சமர்
« Last Edit: April 29, 2012, 05:56:52 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கவி சமர் களத்தில்
கவிதைக்கு கவிதை தானே தவிர
யாரையும் புண்படுத்த அல்ல...
கவிதைக்கு கவிதை படைத்து
கவிதை திறமையை மட்டுமே
வளர்த்துக்கொள்வோம்...
தேவை இல்லாத குறிப்பினை
உட்புகுத்தி கவிதையையும்
தமிழ் திறமைக்கும் இழுக்கு
சேர்க்காமல் இருந்தால் சரி...


திறமை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்