புரிந்து கொள்ளுதல் எனும் சிறந்த பண்பின்றி
இப்பரந்து விரிந்த உலகில் இருந்தால்
பிறந்த ஜீவன் யார்க்கும் உறவு என்பதே சாத்தியமில்லை
அப்படியிருக்க, புரிந்துகொள்ளும்வரை காதலராய்
இருந்துகிடந்திட பரிந்து பேசும் பாமலரே !
தெரிந்து ,அறிந்து,புரிந்து இருப்பதால் தான் இன்றுவரை
சரிந்துவிடாமல் ,எனை வருத்தியும்
உன்னை வருந்தவிடாமல்
கவிப்பூக்கள் சொரிந்துவருகிறேன் ,
நான் இருக்கும்வரை இல்லாவிட்டாலும்,
இறக்கும் முன்பாவது புரிந்து கொள்வாயா ?
வரிந்து கட்டிவந்து
அன்பால் என்னை கொல்வாயா ?
கொல்வாயா?