Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528867 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இமைக்க மறந்து போகிறேன்
எதிரே நீ இருப்பாயானால்
சுவைக்க மறந்து போகிறேன்
என் நினைவே நீ யானால்
தூங்க மறந்து போகிறேன்
என் கனவில் நீ வர மருத்தாயானால்
உன் மறுப்புகள் யாவும்
என் மறதியின் சொந்தகாரர்கள் ....


தூங்க மறந்து போகிறேன்

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முன்பு ஒரு காலம் இருந்தது
துக்கம் மனதை ஆட்கொள்ளும் போதெல்லாம்
ஊக்கம் கொடுக்கவும் உள்ளத்தில் உள்ளதை
ஆக்கத்துடன் தழைத்து வைத்து உற்சாகபடுத்த
தூக்கம் பக்கபலமாய் துனைகொடுக்கும் ...
அது ஒரு அழகிய நிலா காலம் !

இன்றோ ,
துக்கம் மனதை ஆட்கொள்கிறது
ஆட்கொண்டு அப்படியே ஆளைகொல்கிறது
ஊக்கம் கொடுக்கவும் ,ஆக்கம் கொடுக்கவும்
தூக்கம் கூட துணை இல்லை ,மனம் முழுதும்
உன் நினைவு  தேக்கம் !,
நினைவு தேக்கத்தின் நிலையான தாக்கம்.
தாக்கம் தரும் பெரும்ஏக்கத்தால் ,
ஏக்கம் தரும் பெரும்வீக்கத்தால் 
இபோதெல்லாம்  தூக்கமே மறந்து போகிறேன்!
தூக்கம் பறித்திடும் தூக்கணாங்குருவி நீ ....

அடுத்த தலைப்பு - அழகிய நிலா காலம் !

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒன்றா சேர்ந்து
உலா வந்தது ஓர் காலம்
அது ஒரு அழகிய  நிலா காலம் ...



நிலா
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இது அழகிய நிலாகாலதிற்கு எழுதியது நிலாவிற்கும் பொருந்தும் என்பதால்  விட்டு செல்கிறேன்.

 
நிலா

நீள் வானம்
கருநீல கடல்
இரண்டிற்குமிடயே
அழகிய நிலவு

நிலவொளியில்
ஆர்ப்பரிக்கும் கடல்
கடலின் நெடுகே மணல் திற்று
கரையை தீண்டி செல்லும் அலை
மிதமாய் வருடும் தென்றல்

ஒவ்வொரு அலைக்கு பின்னும்
நடக்கும் நண்டுகள்
அதை பிடித்து விட துடிக்கும்
சிப்பி தேடும் சிறுவர்கள்

கரை எங்கும் பாய்மர படகுகள்
திட்டு திட்டாய் மீன்வலைகள்
வலை பின்னும் மீனவர்கள்
பிடித்து வரப்பட்ட  விற்பனை   மீன்கள்
அனைத்து மீனவ வீட்டு வாசலிலும் உலர்மீன்கள்

இது எல்லாவற்றையும் விட
என் காதலியின் கரம் பற்றி நடப்பது
பெரிதாகி போனது விந்தை
கடல்மணலில் வீடு கட்டி
வீட்டிற்கு முற்றம் வைத்து

முற்றத்தில் காதலியின் தோல் சாய்ந்து
கால் நீட்டி அமர்ந்து கொண்டு
பாதம் தொட்டு செல்லும் அலையை
ரசிப்பது தனி அலாதிதான்

நிலவொளி அழகில் கொட்டி வைத்த
வைரங்களாக மின்னும் நீர் கூட
அவளின் விழிகளுக்கு முன்
சொற்பம்தான்

என் காதலியோடு
அளவளாவி  கொண்டிருந்தால்
என்னை தொட்டு செல்லும் காற்று
கூட அற்பம்தான்

என்னவளோடு
கழியும்  ஒவ்வொரு தருணமும்
அழகிய நிலாகாலம்தான்........


அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு  என்னவளின் அழகு
« Last Edit: February 07, 2012, 12:40:49 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
நிலா
என் அழகிய
நிலா பெண்ணே
நீ முழுமையாக
ஜனனமேடுக்கும் முன்பே
நீலவான தாய்
குறையாய்
உன்னை ஈன்றேடுததால்
பிறை நிலவாகி போனாயோ....!



அன்புடன் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு  என்னவளின் அழகு
« Last Edit: February 07, 2012, 12:56:51 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்னை உன் காதலி என்று
ஏன் நீ சொல்வதில்
என் காதலில் உனக்கு நம்பிக்கை இலையா
இல்லை எனை நீ காதலிக்கவிலையா...
என்று சொல்வாய் என் காதலி நீ என்று
அன்று சொன்னாய்
என்னவளின் அழகு எதற்கும் ஈடு இல்லைஎன்று
இன்று உன்னவளின் அழகு மாடுமல்ல
அழுகை கூட உணர மறுப்பதன் மர்மம் என்ன ..
உன்னவள் அழும்போது அழகு அதிகம் என்று யார் சொன்னது
அழ வைத்து பார்கிறாயே...



அழ வைத்து பார்கிறாயே
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

அழ வைத்து பார்கிறாயே !அய்யகோ !
அபாண்டம் , அக்கரமம் , அநியாயம் .
அரைமனதாய்,அடிமனதில் ஆழ்சோகமாய்
ஆறுதல்தர ஆதரவு அற்றவனாய்
அனுதினமும் அலைந்துதிரிந்தவனுக்கு
ஆறுதலாய் அரும்மருந்துதேறுதலாய்
அழகுகவிதையாய், அணைக்கும் அன்னையாய்
ஆசைகாதலியாய் அன்புகுழந்தையாய்
ஆலயம்சென்றும் தொழாதவனை
உன் அடிபாதம் பட்ட திருவடியையும் தொழைவைத்தவள்
எனக்குள்ளும் ஒரு கவிஞனை எழ வைத்தவள்
அன்பென்னும் நீர்த்துளியை விழவைத்தவள்
மரணத்திற்கும் அழக்கூடாது எனும் கொள்கை கொண்ட
என்னையும்  அவ்வப்போது கண்ணீர் வர அழைவைதவள் நீ ..

அழைவைதவள் நீ

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பாசத்தை பகிராமல்
முழுதாய் தந்து
என்னை அழவைத்தவள்  நீ
தாய் மடி தேடி அலைந்த போது
ஆதரவை தந்து
தலை கோதி
தாயின் அரவணைப்பை
உணரவைத்தவள் நீ
தோழியே உன்னை போல
இனி ஒருத்தி
உலகில் இல்லை....

இனி ஒருத்தி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இனி ஒருத்தி
வட்ட முகம்
மீன்விழிகள்
 சிறியதாய் மூச்சு துவாரம்
முத்துக்களை அள்ளி தெளித்தார்
போல் பல்வரிசை
சிவந்த உதடு
கார்  கூந்தல்
அழகான வகிடு
இரு நீளகைகள்
மெல்லிய விரல்
வளைந்து தெளிந்த தேகம்
அன்ன நடை போடும் பாதம்
வெண்ணிற மேனி
நிலவு கூட தோற்று போகுமடி
உன் அழகுக்கு முன்னால்

உன்னையே உற்று நோக்கியதில்
உணர்வுகளை வெளிகாட்டி
உதடுகளால் உச்சரிதாயே
நீ எனக்கு மட்டும்தான் என்று
என்னுள்ளே  ஆயிரம் மின்னல்
தோன்றி மறைவதற்குள்
வரும் பௌர்ணமி திங்கள்
திருமணம் என்று
பேரிடியாய்  முழங்கி விட்டாயே ?

அதோடு நிறுத்தி இருந்தால்
பசுமை நினைவுகளை சுமந்து
காலம்  கடத்தி இருந்திருப்பேன்
திருமணத்திற்கு சொல்லுங்கள் என்றது
என் நெஞ்சில் முல்லாய் தைக்கிறது பெண்ணே
உன்னை மட்டுமே சுமந்த
என் இதயத்தில்
இனி ஒருத்தியை
நினைத்து பார்க்க எப்படி பெண்ணே முடியும் ......?


அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு  எல்லாம் முடியும்  உன்னால்
« Last Edit: February 08, 2012, 06:13:32 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எல்லாம்  முடியும்  உன்னால்
காயமிலாது
இதயத்தில் கத்தியை சொருக ..
உதிரம் இலக்கமால்
உயிரை உருவி செல்ல
கண்களில் நீர் இலாத போதும்
கொட்டும் அருவியை உருவாக்க
ஒன்று தெரிந்து கொள்
என்னாலும்  முடியும்
இருந்தும் அதை உனக்கு பரிசளிக்க
நான் விரும்பவில்லை
ஏனென்றால் உன்னை
உண்மையாக நேசிப்பவள் நான் .



கண்களில் நீர்

                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கண்களில் நீர்

பெண்ணே
என்ன சொல்லிவிட்டேன்
எதற்காக உன் கண்களில் நீர்

இப்பொழுது வேண்டாம்
சிறிது காலம் தாழ்த்தி
மனம் புரிவோம் என்றதற்கா

நாம் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளதானடி
அந்த காலமும்

மனம் புரிந்து கொண்டால்
நமக்குள் பாசம்  இருகாதடி
பெண்ணே

இதற்குள் குடும்ப சுமையை
உனக்குள் ஏற்ற விரும்பாததால்
காலம் கடத்தினேன்

இதற்கே துடித்து போவாய்
என்று தெரிந்திருந்தால்
மறுத்திருக்க மாட்டேனடி

பெண்ணே உன்னாலும்  முடியும்
என்ற தருணம் வரும் வரை
காதலர்களாகவே இருப்போம்


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு  காதலர்களாகவே இருப்போம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காதலர்களாகவே இருப்போம்
உன்னை நானும்
எண்ணி நீயும்
சரியாக புரிந்து கொள்ளும் வரை ...



புரிந்து கொள்ளு
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
புரிந்து கொள்ளுதல் எனும் சிறந்த பண்பின்றி
 இப்பரந்து விரிந்த உலகில் இருந்தால்
பிறந்த ஜீவன் யார்க்கும் உறவு என்பதே சாத்தியமில்லை
அப்படியிருக்க, புரிந்துகொள்ளும்வரை காதலராய்
இருந்துகிடந்திட  பரிந்து பேசும் பாமலரே !
தெரிந்து ,அறிந்து,புரிந்து இருப்பதால் தான் இன்றுவரை
சரிந்துவிடாமல் ,எனை வருத்தியும்
உன்னை வருந்தவிடாமல்
கவிப்பூக்கள் சொரிந்துவருகிறேன் ,
நான் இருக்கும்வரை இல்லாவிட்டாலும்,
 இறக்கும் முன்பாவது புரிந்து கொள்வாயா ?
 வரிந்து கட்டிவந்து
அன்பால் என்னை கொல்வாயா ?

கொல்வாயா?

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கொல்வாயா


அன்பே காற்றில் உன்
சுவாசம் தேடி அலைகிறேன்
என் சுவாசமாய் மாற்ற

நீ எங்கிருந்தாலும்  சுவாசி
உன் சுவாசத்தை நான் இனம்
கண்டு கொள்கிறேன்

உன் சுவாசம் எனகாகதான்
என்ற போதும்  நீ
(சு)வாசம் செய்ய மறந்ததேன்

நான் உன்னை நேசித்து
விடுவேன் என்பதாலா
 இல்லை  சுவாசித்து
விடுவேன் என்பதாலா

இல்லை நீ  (சு)வாசம் செய்தும்
உன் நினைவிலே சுழலும் நான்
சுவாசிக்க மறந்தேனா..

என் சுவாசம் அதுதான்
என்று தெரிந்து
இயற்கையே சதி செய்கிறதா...

 என்னவளின்  சுவாச காற்றை
சுமந்து வரும் தென்றலே
என்  சுவாசத்தை எனக்காக
கொணராமல் என்னை கொல்வாயா...?


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடர வேண்டியது  என் சுவாசம்


ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன் நினைவுகளால்
ஸ்தம்பிப்பது என் வாழ்க்கை மட்டுமல்ல
சுவாசமும்தான்
ஸ்தம்பிக்கும் என் சுவாசம்
என்னை சுவாசிக்காது போனால்
நன்றி உடையவள் ஆவேன்
என்னை மரணிக்க வைக்கும்
மார்புகூட்டுக்கு ....


என் வாழ்க்கை