கற்றை கற்றையாய் பலவகை பூக்கள்
அப்பப்பொழுது வந்து வந்து சென்றாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கவிசோலையில்
வாச(க)ங்களை வசம் விட்டு சென்றாலும்
ஒற்றை பூவாய் தலைப்(பு)பூ பி(வி)ட்டுசெல்லும் இடத்தே
தனக்கு நிகர் யார் என்று, எனக்கும் சவால் விட்டே
கொஞ்சும் கவிதை தேசம் முழுதும் ஆளுமை செய்யும் மலர்மொட்டே !
நீ ஆளும் தேசத்தில் நானும் ஆளுமை செய்ய நினைத்ததுண்டு
காரணம் ,தமிழ் மீதும் உன்னை போல்
எனக்கும் தொன்று தொட்டு காதல் உண்டு
சில நாட்களாய் ,சில பூக்களின்
திடீர் வரவு தொடர் வரவு
அல்லியோ, முல்லையோ , மல்லியோ ??
இல்லை ரோசாவை விஞ்ச வந்த வில்லியோ ??
சரி, இனி கொஞ்ச(சு)ம் வர்ணனை உனக்காக
கவிச்சோலையின் உயர் ரோசாவே ,
அடியே, உயிர் ரோசாவே
கவிதை ஆட்சியின் கவின்மிகு காட்சி நீ
கவிதாஞ்சலியின் வாழும் உயிர் சாட்சி நீ
பூலோக பூக்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த பேச்சி நீ
என் தம்பி ரெமோ வுக்கு மச்சி நீ - மச்சினி
எங்கே சென்றுவிட்டாய் சில நாட்களாய் ?
உன் இருப்பு இருக்கும் வரை புதுபூக்கள்
வாசம் வீசாதேன்று எண்ணியோ ?
தளம் விட்டு தொலைவாய் இருந்தாய் ?
காத்திருக்கிறேன் வா என கவிகுழந்தையாய்
நானும் காத்திருக்கிறேன் !