Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 469392 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

மாயம் ஆகவில்லையடி மானே !
என் நறும் வரிகளுக்கும் வாசகத்திற்கும்
வேறு சாயம் பூசி ,காயம் ஆக்கிட
தாயம் ஆட்டம் ஆடினர் சிலர்
ஆட்டம் , வெறும் ஆட்டம் என்று உணராமல்
ஊட்டம் ஊட்டியே,வாட்டம் (வேதனை)
காட்டினாய் ,போனால் போட்டும் என
ஓட்டம் நிறுத்தியிருந்தேன் தற்காலிகமாய்
பாலைவன  சோலையை ,வாழ்த்து எனும்
வசந்தத்தால் பூந்தோட்டம் ஆக்கியதால்
இதோ ,மீண்டும்  கவியோட்டம்
கவிதை தளத்தில் கவிக்கூட்டம் !

கவிகூட்டம்

Offline Global Angel

கவிகூட்டம் கூடி
கவிகளால் களம் ஆடினாலும்
என் மனது ஏனோ
உன் நினைவுகளால் மட்டுமே
ஆட்டம் கொள்கிறது ..
ஆட்டம் போக்கி
என் வாட்டம் நீக்கி
மனவோட்டம் நிறைவுக்கான
காத்திருக்கிறேன் வா



காத்திருக்கிறேன் வா
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கற்றை கற்றையாய் பலவகை பூக்கள்
அப்பப்பொழுது வந்து வந்து சென்றாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கவிசோலையில்
வாச(க)ங்களை வசம் விட்டு சென்றாலும்
ஒற்றை பூவாய் தலைப்(பு)பூ  பி(வி)ட்டுசெல்லும் இடத்தே
தனக்கு நிகர் யார் என்று, எனக்கும் சவால் விட்டே
கொஞ்சும் கவிதை தேசம் முழுதும் ஆளுமை செய்யும் மலர்மொட்டே !

நீ ஆளும் தேசத்தில் நானும் ஆளுமை செய்ய நினைத்ததுண்டு
காரணம் ,தமிழ் மீதும் உன்னை போல்
எனக்கும் தொன்று தொட்டு  காதல் உண்டு
சில நாட்களாய் ,சில பூக்களின்
திடீர் வரவு தொடர் வரவு
அல்லியோ, முல்லையோ , மல்லியோ ??
இல்லை ரோசாவை விஞ்ச வந்த வில்லியோ ??

சரி, இனி கொஞ்ச(சு)ம் வர்ணனை உனக்காக

கவிச்சோலையின் உயர் ரோசாவே ,
அடியே, உயிர் ரோசாவே

கவிதை ஆட்சியின் கவின்மிகு காட்சி நீ
கவிதாஞ்சலியின் வாழும் உயிர் சாட்சி நீ
பூலோக பூக்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த பேச்சி நீ
என் தம்பி ரெமோ வுக்கு மச்சி நீ - மச்சினி

எங்கே சென்றுவிட்டாய் சில நாட்களாய் ?
உன் இருப்பு இருக்கும் வரை புதுபூக்கள் 
வாசம் வீசாதேன்று எண்ணியோ ?
தளம் விட்டு தொலைவாய் இருந்தாய் ?

காத்திருக்கிறேன் வா என கவிகுழந்தையாய்
நானும் காத்திருக்கிறேன் !

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உனக்காகவே காத்திருக்கின்றேன்
வர மறுக்கின்றாய்
நீ வரும் போது ஒரு வேளை
நான் உனக்காக
காத்திருக்க முடியாமல் போகலாம்
அன்று எனக்காக
நீ ஒரு நொடியேனும்
காத்திருக்காதே
ஏனெனில் இறந்தவர்கள்
மீண்டும் வருவதில்லை....:


மீண்டும் வருவதில்லை.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

தனக்கு நிகர் யாரென்று
துளியேனும் எண்ணமில்லாத
தூய உள்ளம் கொண்ட பூவை
பார்ப்பவர் கண்களில்
பல முரணான எண்ணம் தந்தாலும்
பழகியவருக்கு  பக்குவமான உள்ளம் தெரியும் ..

எந்த பூவுக்கும்  பூக்கள்  போட்டியல்ல
எல்லாம் ஓர்வகை அழகுதான்
ரோஜாவில் இல்லாத நறுமணம்  மல்லியில்
மல்லியில் இலாத இதழ் அடுக்கு செவந்தியில்
இவற்றை எல்லாம் அளவில் மிஞ்சிய தாமாரை ...
இப்படி தனியே தமக்கென்று தகுதிகொண்டு
தனையை தரணியை அழகூட்டும் மலர்களே ..
மலருக்கு மலர் போட்டியல்ல ...

இம்மலர்கள் எல்லாம்
அதன் மரங்களில் இருந்தால்தான் அழகு
மரம் விட்டு உதிர்ந்தால்
மீண்டும் அதற்க்கு வருவதில்லை
வசந்தமும் வாழ்வும் ..


வசந்தவாழ்வு 


                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தேடி பார்த்தேன்
எங்கே என் வசந்தம் என்று
உன்னுள் இருக்க
வசந்தத்தை தேடும்
எண்ணம் இனியில்லை
ஒரு முறை
வந்துவிடு என் வாழ்வை
வசந்தமாக்கி விடு போ...
வசந்தவாழ்வு உன்னோடு தான்

எண்ணம்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

நினைவுகளை
பார்வைகள் எனும் நெய் ஊற்றி 
வளர்த்தவனே ...
என் எண்ணம் எனும்
சிந்தனைக்கு
சிறுக தீனி போட்டு வளர்கின்றாய்
என்று அதை எரிஊட்டுவதாய் இருகின்றாய்
சொல்லிவிடு ....



பார்வைகள்

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கழுகு பார்வைகளுக்கு
மத்தியில் உன் காந்த பார்வையில்
கவரப்பட்டு
கலவரப்பட்டு கலங்கி இருக்கும்
நெஞ்சம்
கோப பார்வைகள் பார்த்துவிடாதே
துடித்து போவேன்...


பார்த்துவிடாதே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

பார்த்து விடாதே
உன் பாழாய் போன கெளரவம்
குறைந்து விடும்
பேசி விடாதே
பெருந்தொகையில்
முத்து சிதறி விடும் ..
என்னை காதலிக்காதே
காதல் கூட கண்காணாமல் ஓடிவிடும்
அதிஸ்டம் அவளவு எனக்கு


கெளரவம்

                    

Offline Global Angel


சுதர்  வாருங்கள் நல வரவு  உங்கள் கவிதை நன்று .... ஆனால்     கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு கவிதை கொடுக்க வேண்டும் ... அடுத்து வரும் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு தலைப்பை கொடுக்க வேண்டும் இதுதான் இந்த கவிதை விளையாட்டு.. இங்கே கொடுக்கபட்ட தலைப்பு கெளரவம்... முயற்சி செய்யுங்கள் நண்பரே ...
« Last Edit: February 04, 2012, 09:47:54 PM by Global Angel »
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கெளரவம்

பூவையே !
உன் காந்த பார்வை
என்னை சுட்டி இழுக்கிறது
உன் கருங்கூந்தல்
என்னை  கட்டி வைக்கிறது
உன் நிலா முகம்
என்னை பித்தன் ஆக்கியது
உன் தேகம்
என்னை கிறங்க வைத்தது
என்று பலமுறை பொய்யுறைக்கும் பொது இல்லையே
இருவரும் ஒன்றாக கை கோர்த்து
ஊர் சுற்றிய நாளில் இல்லையே
உன்னிடம்
இந்த பாழாய் போன கெளரவம்
இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது
நீ மேல் சாதிக்காரன் என்ற ஆணவமா....
உனக்கு எவ்வாறு சொல்லி புரிய வைப்பேன்
நான்காம் தலைமுறையில் நாவிதனும் உறவுக்காரன் என்று........?



உங்கள் -சுதர்சன்சுந்தரம்

 தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு ஆணவம்...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

நீ கொண்ட ஆணவத்தால்
இழந்தது என் அன்பை மட்டுமல்ல
அகிலத்து நல் உறவுகளையும்தான்
என்னுள் நீ வாழ்ந்தும்
ஏன் என் இனிமை உன்னை சேரவில்லை
என் காதலில் தவறா
இல்லை என் கல்லறையில்தான்
உன் கனிவு வெளிப்படுமா
சொல்லிவிடு
உன் இனிமைக்காக எதையும் செய்வேன் ....



கல்லறை
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கல்லறை

பெண்ணே
 நான்  கல்லறை செல்வது
உன் விருப்பம் என்றால்
உனக்காக  எத்தனை முறை  வேண்டுமானுலும்
செல்ல தயார்.....
நீ
 எதையும் செய்வாய்
என்று எனக்கு தெரியும்
எனக்காக என் கல்லறை மீது
உன்கையால் ஒரே ஒரு மலரை
மட்டும் விட்டு செல் .........
உன்னையே இதயத்தில் சுமந்தவன்
உன் கரம் பட்ட சிறுமலரை
சுமக்க மாட்டேனா.....??

உங்கள் -சுதர்சன்சுந்தரம்


தங்கள் தொடர வேண்டிய தலைப்பு சுமை

« Last Edit: February 05, 2012, 04:00:32 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

இடம் மாறிய
என் இதயம்
இரும்பு சுமையாக இன்று
உனக்காக நான் எனக்காக நீ
நீ கூறிய இந்த வார்த்தை ஜாலம்
எங்கு போனது ...
என்னைவிட ஒருத்தி
உயர்வாக கிடைததாலா ....
இமைகளின் சுமை
இன்று இதயத்திலும்



இமைகளின் சுமை
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இமைகளின் சுமை

என்னை கடற்கரை வர சொல்லி
எவ்வளவு நேரம் ஆயிற்று
உன்னை பார்க்கத்தான்   கடல் அலை
மேலே எழும்புகிறதோ என்று
சுற்றி சுற்றி பார்கிறேனடி
உன்னை காணாது என்
கண்ணே பூத்துபோயிற்று
ஒவ்வொரு கடல் அலை வரும்போதும்
வந்திடுவாய் என்று பார்த்து பார்த்து
இமைக்க மறந்து இமை வீங்கி
என்விழிக்கு இமையே சுமையாகி
போனது பெண்ணே......!

உங்கள் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு மறதி

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்