அடேங்கப்பா ! வா வா !
எத்துனை நாட்களுக்குத்தான் நானும்
வாச மலர்களை வசம் வைத்திட
வசியம் வைப்பதாய் வரிகள் சமைப்பது
வேறுத்திடவில்லை,மறுத்திடவில்லை
மாற்றாய் ஒருமுறை மாற்றான் ஒருவனை
தேற்றி,போற்றி ,வர்ணனை தேன் ஊற்றி
வரிசமைப்போமா, என நேற்றில் இருந்து
மாற்றி மாற்றி வரி சமைக்க முயல்கிறேன் !
முயல்கிறேன் !