Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 458704 times)

Arul

  • Guest
அதி காலை சூரியனைக்
கண்ட பூக்கள் மலர்வதை
போன்று உன் முகம் பார்த்த
என் கண்கள் அழகான
பூக்களாய் மலருதடி
அன்பொழுக பேசும்
உன் பேச்சுக்கும் நான்
தவியாய் தவிக்கிறேனடி
நீ பேசியும் பேசாமல்
போன காரணமும் ஏனடியோ.................

உன் கண்கள்

Offline Gayathri

உன்னில் பிடித்தது எதுவென கேட்டால்
உன் கண்கள் என்றே சொல்வேன்...
நீ சொல்லாத வார்த்தைகள் எல்லாமே
உன் கண்கள் எனக்கு சொல்லிவிடுகிறது ...!!

நான் மண்ணோடு போகும் வரை
உன் கண்ணுக்கு கண்ணாக இருப்பேன்...!

தொலைந்து போன என்னை
தேடுவதை மறந்து தொலைவாய் போன
உன்னை தேடுகிறேன்...!
தொலைந்து
போனது உனக்குள் இருப்பதாய்...!

இன்னும் ஒரு ஜென்மம்
எடுத்தாலும்
என் கண்ணில் பட்டு விடாதே
இனியும் எனக்கு
இன்னும் ஒரு ஆயுள் தண்டனை வேண்டாம்!!!


 ஆயுள் தண்டனை

Offline முருகன்

உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
இந்த ஆயுள் தண்டனையை  அனுபவிக்கிறேன் 
இன்று நானிங்கு.


"அவள் புன்னகை"
« Last Edit: October 23, 2013, 10:29:48 AM by முருகன் »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
முன்பெல்லாம் சிறம் தாழ்த்தி அளவாய்
மிக அழகாய், அமைதியாய்
முகவாய் மலரும்
அந்த அர்த்தமுள்ள அவளின்
புன்னகையை கண்டு
அகம் மகிழ்ந்தவன்
புருவம் உயர்த்தி
ஏளனமாய் அவள் நகைக்கும்
நகையை கண்டு அஞ்சுகிறேன்.!
அந்த மந்தகாச புன்னகை மறைத்து
பரிகாச புன்னகை  ஆணதேனடி...? 


ஏளனம்
« Last Edit: November 01, 2013, 09:14:31 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline sameera

கரை படிந்த அழுக்கு துணிகளுடன் சிலர்!
அழகிய புத்தாடைகளுடன் சிலர்!
எவ்வித வேறுபாடுமின்றி விளையாடினர்!
இருவரும் தோல் சேர்ந்து இருந்தனர்!
பெற்றோரின் வறுமை வேறுபாடால் பிரித்தனர்...!

ஏளன பார்வைகளும் வார்த்தைகளும் எப்பொழுது உடையுமோ!
தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும்...,
பெரியவர்களே வேறுபாட்டை காட்டினாள்,
செல்ல குழந்தைகள் என்னாகுமோ!


குழந்தைகள்!

Arul

  • Guest
அந்திப் பொழுதில்
அழகான மேகக் கூட்டங்களுக்கிடையில்
ஒளிந்து விளையாட சென்ற கதிரவனை
பார்த்துக் கொண்டே நம் இருவரும்
கடற்கரையில்  அலைகளில் நனைந்துகொண்டே
குழந்தைகளாய் மாறி விளையாடியதை
மறந்துவிட்டாயோ என்னவளே
காலம் ஒரு நாள் நினைவூட்டும்
காத்திருப்பேன் உன் நினைவுகளோடு ...................


அலைகள்

Offline sameera

அழகிய கரையை தொட துணிந்தவள் நீயோ...
மெல்லிய சாரல் துளிகள் கலப்பதும் உன்னோடு தானோ!
இரவு நேர வெண்ணிலா படுவதும் உன்மீது தானோ!
சிறு குழந்தை போல் அனைவரும்,
உன்மடியில் விளையாடுவதும் ஏனோ!
ஏழுநிறம் கொண்ட வானவிலும்
உன்னோடு கலப்பதும் ஏனோ!
கடல் தாயே நீ இன்றி அனைவரும் வாழ்வதும் எவ்வாறோ!
அக்கடளையே இக்காலத்தினர் மாசுபடுத்துவதும் துன்பமோ!!!


அன்பு

« Last Edit: February 02, 2014, 10:26:26 AM by sameera »

Offline NasRiYa

நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்..
ஆனால்,
நம் இருவருக்கும் அன்பு எனும்
காதல் ஒன்றாகப் பிறந்தது...


இருவருக்கும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
அன்பே அன்பை அடைகாக்க மறுக்கிறது!

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த
இருவருக்கும் பிறந்த காதல்!

பெற்றெடுத்த இருவருக்கு காதலை
விடுத்து கனலை கொடுத்து!!!


கனல்




Offline NasRiYa

நெஞ்சுக்குள் நித்தம் கோப கனல் மூட்டும்
உன் காதல் என்னில் எப்போதுமே
எரிந்துகொண்டிருக்கும் தீபம்



உன் காதல்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வார்த்தை வரிசை
பேச்சுக்களோ
விழிப்பார்வை நேரெதிர்
வீச்சுக்களோ
வேண்டியதில்லை

வெள்ளி நிலவே !!

நின் கொள்ளை எழில்மனதை
அள்ளி அள்ளி பருகுதற்கு .

நீ மெல்ல மெல்ல
வெளிவிடும்
மெல்லிய சிறுமூச்சே போதும்
நின் எழில் மனதுடன்
முழுமையாய் உன் காதல்
கொண்டவனுக்கு !!



வெள்ளி நிலவே !!

Offline NasRiYa

அழகாய் வலம்வரும் நிலவே
அமாவாசையிலும் வேண்டும்
விரும்பி அழைக்கிறேன்
உன்னை வெள்ளி நிலவே
வந்துவிடு எனதருகே...


அழைக்கிறேன்

Offline supernatural

அழைத்ததில்லை
கவிதைகளை
இருந்தும்
கொட்டிக்கொண்டுதான்
கிடக்கின்றது
கட்டுகடங்கிடா
கற்பனை குதிரைகளை
பின்தொடர்ந்து ...

அழைத்ததில்லை
எண்ணங்களை
இருந்தும்
நிரப்பிக்கொண்டுதான்
இருக்கின்றது
மனதோடு நாட்களையும்
நீங்கா நின் நினைவுகளை
பின்தொடர்ந்து ...

இப்படி,
அழையாதவையெலாம்
அணியணியாய் அணி சேர்ந்து
செவ்வென பணி செய்திட

அழைக்கிறேன்  உனை
இருந்தும்,
தனியேதான் தவிக்கவிட்டு
கண்ணாமூச்சி   ஆடுகின்றாய்
என் கண்ணா !!


கண்ணாமூச்சி
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கண்ணாமூச்சி  ஆடுவதாய்
காச்சு மூச்சென  எனை
கடு காய்ச்சி எடுக்கின்றாய் - என்
காதல் வன வண்ணத்து  பூச்சியே!

நின் மிளிர் எழில் வண்ணமதை
முன்வருடி, பின்  திருடிடும்
எண்ணமில்லை ...

நீ தேனெடுக்கும் தீம் பொழுதுகளில்
பச்சிலையாய் நான் கிடந்து 
நின்  இறகுகளின் சிறு படபடப்பினில்
நிரமேற்றிடும் வரம் வேண்டும் .....
தருவாயா ??


தருவாயா ??
« Last Edit: July 01, 2014, 10:05:58 AM by aasaiajiith »

Offline NasRiYa

உனக்காக உயிரையும் தருவேன்.
என் உயிருக்கு விலையாய் தருவாயா..?
உன் உண்மை காதலை...


உயிரையும்