Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 448935 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் மனதின் முழுமுதற்
ஆளுமை நீயடி ...

இந்த தேக கப்பலின்
ஒற்றை மாலுமியும் நீயடி ....

இந்த இன்பத்தொடர் பயணம்
இன்பமாய் தொடர்ந்திட

துணை விட்டுசெல்லாது
எங்கு வேண்டிடினும் எனை
இட்டு செல்

உன் அருகாமை நிழலில்லாது போயினும்

நின் நினைவுகளோடு
என் உயிரையும் முழு முழுதாய்
தொட்டு செல் ..



தொட்டு செல் ..
« Last Edit: July 01, 2014, 10:04:50 AM by aasaiajiith »

Offline supernatural

சுமார் 92கோடியே சொச்ச மைல்கள்
உச்சத்தில் இருந்தும் கூட
தன் ஒளிக்கீற்றுகளை கொண்டு - சொல்லாமல்
தொட்டு செல்வான் கதிரவன் 

எல்லை ஈதென்றே  இல்லையென்றான
கொள்ளை குளிர் எழிலுடன் 
தன் அலை கைகள் கொண்டு - கரை
தொட்டு செல்வாள் கடல் மகள் ...

இங்ஙனம்,எங்கோ இருந்தும்
தன்மனம் கவர்ந்ததை தொட்டு செல்லும்
வித்தகர்கெல்லாம்  வித்தகனே ...

வரிவரியாய் வரி வரைந்து 
வரையும் வரிகளால்
என் உயிர் கயிறை தினம் திரிக்கும்
கவிதை  காதலனே ...

எழுதுகோல் தாங்கிடும்
நின்எழில் கைகளால் இல்லாதுபோயினும்
நின் சுட்டு விரலின் நுனி கொண்டேனும்
ஒரேமுறை என் உயிர் தொட்டு செல் ....

உயிர் தொட்டு செல் ...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

முழு இரவினில் முக்கால் பங்கு
உன் இனி நினைவினில்
உன் இனி பெயரையே
உளற வைத்தவளும் நீ ....

ஒருவழியாய் முக்கால் இரவு
கழிந்திட ,மீதம் கால் இரவு
தூங்கிட முனைந்தால்
திடுப்பென்ன அரும் பொழுதினை
புலர வைத்தவளும் நீ ....

நின் நினைவின் மகிழ்வினில்
நான் கிறங்கி கிடக்கையில்
நிலையாய் நின்னை நினைப்பதற்கு
இணை பகரமாய்
நின் குளிர்பார்வையினை
இடம்மாற்றி என்னில் பரிமாற்றி
என் பார்வை பட்டும் கூட
சோலை மலர்களினைமெதுவாய்
மலர வைத்தவளும் நீ ...

இப்படி
பாசத்தின் சுகந்த வாசத்தை
நுகர்ந்திடாமலே
அறியச்செய்தவள் நீ ,

ஒரே முறை நின் சுவாசத்தால்
என் நுரையீரல் தீண்டி
உயிர்தொட்டு செல்வாயா ??


நுகர்ந்திடாமலே

Offline supernatural

தொலைதூரம் தான் எனினும் 
கரையின் நிறை மணமதை
கடல் அறிந்துகொள்கிறது 
அலையாடி விளையாடிடும்
அலைகளின்  துணைகொண்டு  .....

தொலைதூரம் தான் எனினும்
மண்ணின் மயக்கும் மணமதை
வானம்  அறிந்துக்கொள்கிறது
வந்துவிழும் மழையின் மூதலான
முதல் துளியின் துணைக்கொண்டு .....

எங்கோ
தொலைவினில் தான் எனினும்
பேதையிவள் மனதின் மணமதை
நான் பகர்ந்திடாமலே
நீயும் வந்து நுகர்ந்திடாமலே
அறிந்துணர்ந்து கொ(ல்) ள்கிறாய்  ....

மாயன் நீ 
கொண்டிருக்கும் 
மாயம் தான் என்ன???

அடுத்த தலைப்பு - தொலைவினில்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Tamil NenjaN

தொலைவினில் வானம்
தொடுவானமாய்..
தொட்டுத் தழுவிடும் பூமி..

திசைதவறி..
அலைகளோடு போராடி ...
கரையினைத் தேடும் கப்பலாய்..
சுழன்றடித்த துயர சூறாவளியில்
சுக்குநூறாகிப்போனது மனது..

வசந்தங்களே மலர்ந்திருந்த
வாழ்வில்..
துயரங்கள் மட்டுமே
இன்று துணை எனக்கு...
வசந்த நினைவுகள்...
ஞாபகங்களில் மட்டும்
தாலாட்டும்..

உருண்டோடும் உலகில்
எல்லாமே மாறும்..
புதுவசந்தம் கண்டு
எந்தன் வாழ்வு
மீண்டும் மலரும் ஒருநாள்


அடுத்த தலைப்பு- மீண்டும் மலரும்

Offline TheeN

 என் அன்னையின் கருவில் நான் வளரும் போது சிந்திக்கவும் இல்லை
       தெரியவும் இல்லை இன்னும் சில மாதங்களில் ஒரு அழகான 
       இயற்கைகள் நிறைந்த பூமியில் வந்து விழ போகிறேன் என்று

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சோதனைக்கூடத்து சிறுமுயலாய்
சிக்குண்டு சிறைபட்டிருக்கும்
இக்கவிதை பகுதி சிறப்புற்று
அகமும்புறமும் நீ வாய்மலர
மீண்டும் மலரும்

அடுத்த தலைப்பு - சிறைபட்டிருக்கும் 
« Last Edit: March 12, 2016, 04:25:51 PM by aasaiajiith »

Offline supernatural

உன்நினைவு அதில் கலந்த நம்காதல்...
மனதில் சிறைபட்டிருக்கும் ஆசைகள்...
உருபெற்றன அதிகாலை அற்புதகனவாய்...

உருபெற்றன
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நின் நினைவினில் ஓயாதுள்ளோடும்
நினைவலைகளை
மனம்விட்டு வெளியே பாயாதிருந்திட
 
நிலையாய் நிலைத்திடும் பொருட்டு
கவியாய்வடித்திட   
முனைகையில் கருவாய் உருப்பெற்றன

இதோ இத்திருவரிகள் !!

அடுத்த தலைப்பு - இத்திருவரிகள் 


Offline supernatural

இதோ இத்திருவரிகள்
புத்தம்புது பெருவொளிபெற்று
புதுவரி சமைத்திடல் வேண்டி
என் சிறு மனம் நாடியவை  ....

மன்னவனான என்னவன் தன்
குளிர் நினைவுகளின் நீரோடையில்
உள்ளிறங்கி நான் காதல் நீராடிட  
புதுப்பொலிவினில் பனிப்பொழிவாய்
அவன்தம் நினைவுகள்

செயற்கைக்கோள்களும் அறிந்திடாத
என் மன ஆசைகளை பாசையில்லாதும்
ஓசையின்றி சுவாசத்தால வாசித்தவனவன்

வள்ளியிவள் உள்மனதில் பள்ளிகொண்ட  
சிறு ஆசையினை சொல்லுவேன் கேள்  
சொல்லில் நற்கவிகளாய் சொல்லிச்சொல்லி
துள்ளிஎழுந்திடும் கவிக்கொலுசிட்டவன்
அல்லியென் பூம்பாதங்களை மடியேந்தி
வெள்ளிக்கொலுசிட ஏந்தியவளாய்
துள்ளிக்குதித்தோடிடுவேன் புள்ளிமானாக ....

வெள்ளிக்கொலுசு 
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பட்டப்பகல் வெட்டவெளியினை
கட்டங்கட்டமாய்  சட்டமிட்டு 
கொட்டகையாய் விட்டம் மறைத்த
 
உள்ளரங்க நீச்சல் குளத்தினில்
நீந்திப்பழகிக் கொண்டிருக்கையில்

நன்றாய் நனைந்து நெளிந்தபடி
நீரில் நமக்கிட்டமான வட்டநிலா

பிம்பம் கலைக்க முயலுமுன்
வெள்ளிக்கொலுசு 

துளியும் நனைந்திடாமல்
என் நினைவினில் நீ  ....

நீச்சல் குளம்

Offline KuYiL

                                         வரம்

                  அன்னை தந்தை கலவி கொடுத்த வரம் "நான் "!
                  கல்வி தந்த வரம் "அறிவு"!
                  அறிவு கொடுத்த வரம் "ஆற்றல்  "
                  ஆற்றல் அளித்த வரம் "தன்னம்பிக்கை "
                  தன்னம்பிக்கை தந்திட்ட வரம் "இந்த உலகை ஆளும் திறன் "
               
                  இத்தனை  வரம் உனக்கிருந்தும்  நண்பா !
                  ஏன் வாழ்வை சாபமாய் நினைக்கிறாய்!

                   வாழ்க்கை ஒரு வரம்!
                   வாழ்ந்து காட்டுவதே திறம் !


என்றும் அன்புடன்
உங்கள் குயில் ......

Offline JerrY

இறந்துபோன பிணங்களின் மீது
இன்னும் ஒட்டி நிற்கும் பாசம் ..

கண்ணீர் வற்றிய இமை ஓரத்திலே
இன்னும் தேடும் அந்த உறவு ..

நினைவு ....

இவன் ..

இரா.ஜெகதீஷ்


பிணம் ...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
உயிர் இருந்தும் பிணமாக
வாழ்கிறேன் .....இயந்திரமாக
இயங்கும் இவ்வுலகினிலே !!!!

உறவுகள்  சூழ்திருந்தும்
அனாதையாக வாழ்கின்றேன் ......
வஞ்சமும் நஞ்சமும்
நிறைந்த மனிதரின்
மனதிற்கிடையினிலே ....!!!!!

~ அனாதை ~
« Last Edit: August 09, 2016, 03:18:43 PM by ரித்திகா »


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வாடையில் வாடிய வனத்தினுள்
வசந்தமாய் உள்நுழைந்து
வாசமாய் கடந்து போவது போல்
காதல் அனாதையாய்
கிடந்துவந்தவன் 
இவன்தம் வாழ்வினில்
குளிரோடையாய்
         நீ .......

   $ குளிரோடை $