Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 460224 times)

Arul

  • Guest
அவள் கூறிய ஒற்றை வார்த்தையில்
உலமே என் காலடியில்
சந்தோசத்தின் எல்லை வரை
நான் மெய் மறந்து பறக்கின்றேன்
இத்தனையும் ஒரு நொடிப்பொழுதில்
கனவாய் இருக்குமோ என்று எனை
கிள்ளித் தான் பார்கின்றேன்
உண்மை என உணர்ந்த போது
நான் எனை மறந்து கொடுத்த முத்தத்தில்
அவள் வெட்கித் தான் தலைகுனிந்தாள்
அவளை அன்போடு தழுவுகிறேன்
எங்கள் இருவருக்கு மட்டுமே கேட்கிறது
எங்கள் உயிர் உருகும் ஓசை....................
மெளனமாய் இருவருமே மயங்கி தான் போகின்றோம்............


மெளனம்

Offline PiNkY

மௌனம் காதலின் மொழி தான்..
அதற்காக என்னை மௌனத்தால் வதைக்காதே..!
உன் காதோரம் சரியும் கூந்தலில் கூட..
சிறு சலனம் இருக்கிறது..
உன் புன்னைகை பூக்கும் இதழ்களில் கூட..
சிறு சலனம் இருக்கிறது..

அனால்.. உன் இதயம் எனக்காக சரிகிறதை ..
நான் உணர்ந்தும் எனக்கு மறைப்பதேன்.?
பெண்ணே..!
ஒரு முறையாயினும் சொல்வாயா.?
உனக்காக என் இதயம் இல்லை என்றாலும்..
உன்னை நினைத்து ஒரு முறை ஒரே முறை துடித்ததேன்று..

சொன்னால் போதும்..
மறுகணம் என் இதயத் துடிப்பை நிறுத்துகிறேன்..


இதயத் துடிப்பை நிறுத்துகிறேன்..

 

Arul

  • Guest
பழுதுபட்ட இதயத்தை பலப்படுத்த
ஓடி வந்தேன் அழகான வரவேற்பு
அன்பான உபசரிப்பு
முகமரியா உறவுகளூம்
அற்புதமான கொஞ்சல்கள்
உண்மை என்று நம்பி தான்
உற்சாகமாய் நான் இருந்தேன்
அன்பு என்ற வட்டத்துள்
காரணமின்றி வேறுபாடு
எல்லாம் பொய்மையாக
போனவுடன் பொருமை
இழந்து தவிப்போடு
என் இதய துடிப்பை நிறுத்துகிறேன்...............ஆம் அனைத்தையும் நிறுத்தி கொண்டேன்



பொய்மை
« Last Edit: September 12, 2013, 04:37:43 PM by அருள் »

Offline PiNkY

பொய்மைக்கு  மறு பெயர் தான் அழகோ.??
வாய்மைக்கு மறு பெயர் தான் இறைவனோ.??
காதலுக்கு மறு பெயர் தான் மௌனமோ..??
நட்புக்கு மறு பெயர் தான் நீயோ.?
என் இனிய தோழியே..!


என் இனிய தோழியே..!

Offline sameera

என் அருகாமையில் நீ இன்றி...
நினைவுகளால் நீ என்னுள் வாழ்ந்திட..
சில நேரங்களில் கண்ணீர் துளியாய் நின்றிட....
உன் பிரிவு தூரத்தில் மட்டும் இருந்திட...
உன்னை காணவிருக்கும் நொடிகளை எண்ணி பார்க்க...
நட்பின் சுவை அதிகரிக்க...
மனமது உன்னால் நெகிழ்ந்திட...
என்றும் நீ நலம் வாழ...
உன் அன்பு தோழியின் வாழ்த்துக்கள்..
என் இனிய தோழியே!!!


வெண்மேகம்

Arul

  • Guest
உன் முகம் காண நான்
முயற்சிக்கும் பொதெல்லாம்
ஏனோ நீ மறைந்து கொள்கிறாய்
வெண் மேகங்கள் இடையினிலே
உன் முழு மதியை நான் காண
முப்பொழுதும் முயற்சிக்கிறேன்
வருவாயோ எனைக் காண
வெண் மேகங்களைத் தகர்த்தெரிந்து.............


காத்திருக்கிறேன்

Offline sameera

உன் பிரிவின் துளிகள் நீல..
கண்ணீர் துளிகள் கசிய..
மனமது என்றும் உனக்காய் இருக்க..
என் முகமது வாடிய மலராய்..
மழை நேரத்தின் இருட்டினில் நான்...!
ஏன் என்னை தனிமையில் வதைக்கிறாய்?
உயிருடன் கொன்று புதைக்கிறாய்..
உன் மௌனம் உனக்கே சுகமாய் இருக்க...
எந்தன் நரகமாய் அமைய...

உன் தோல் சேர்வது நானாய் இருக்க,,
காத்திருக்கிறேன்,,காத்திருப்பேன்,,,
என்றும் உருகி கொண்டே இருப்பேன்...
அந்த நொடிக்காக..!


தனிமையின் வலிகள்!

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
உன் தோல் சேர்வது நானாய் இருக்க,,
காத்திருக்கிறேன்,,காத்திருப்பேன்,,,
என்றும் உருகி கொண்டே இருப்பேன்...
அந்த நொடிக்காக..!

தனிமையின் வலிகள்!
nice line manadhai thotta varigal

Arul

  • Guest
என் இதயத்தை ஆயிரம் கழுகுகள்
ஒன்றாக குத்திக் கிழிக்குதடி
உன்னை விட்டு பிரிந்த ஒவ்வொரு
நொடிகளும்

நீ விதைத்த விதையினிலே
மலர்ந்து வந்த பூஞ்செடியை
ஒரு நொடியில் பொசுக்கி விட்டாய்
உன் வார்த்தை என்ற சொல்லாலே

நீ கொடுத்த வலிகளிலே
மிக கொடிய வலி இந்த வலி
தனிமையில் ஓலமிடும் என் மரணத்தின் இறுதி வலி.................ஆம் என் தனிமையின் வலி



காவியம்

Offline Gayathri

நான் உன்னை  விட்டு
பிரிந்து போனாலும்
என் கண்ணீர் தடயங்கள்
காட்டி கொடுக்கும்
நான் சென்ற  இடத்தை..
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை  பின்தொடர்ந்து வா ..!
காத்திருப்பேன் ...
உன்னுடன் சேர்ந்து புதிய காவியம் படைக்க


காத்திருப்பேன்
« Last Edit: September 21, 2013, 02:27:14 PM by Gayathri »

Arul

  • Guest
உன் முகம் காண துடிக்கின்றேன்
நீயோ மறைந்து மறைந்து
விளையாடுவதும் ஏனோ
என் மனம் நோக வைப்பதும் ஏனோ
காத்திருப்பேனடி
காலன் வரும் வரை
காற்றாய் வந்து என்
காதோரம் கவி பாடுவாய் என்று........................


மனம்

Offline PiNkY

உன் பார்வையில் உருகும் ஒன்று..
உன் தொடுகையில் கரையும் ஒன்று..
உன் விழி அசைவில் வீழும் ஒன்று..
ஆம் ஒன்றே ஒன்று என் மனம் மட்டுமே..!!
என் மனதை முழுவதுமாய் சரித்துவிட்டாயடா..!!


பார்வையில் உருகும்

Offline Gayathri

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை.

ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று..

தினம் தினம்
பார்வையில் உருகும்
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்...

நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை....


மௌனம் சம்மதம்

Arul

  • Guest
உன் மந்திர புன்னகையில்
நான் சொக்கிதான் போகிறேனடி
மாய விழிகளை சுழல விட்டு
உன் பின்னே சுற்ற வைக்கிறாயடி
அனைத்தையும் செய்துவிட்டு
நான் கேட்ட ஒற்றை வார்த்தைக்கு
மட்டும் ஏனோ மெளனம் கொள்கிறாயடி
உன் மெளனம் சம்மதம் தானோ
தெரியாமல் தவிக்கிறேனடி
மெளனம் சம்மதமோ...............???????


உன் பார்வை

Offline Gayathri

உன்னுடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்...
உன் பாரவையோ !
என்னை பேச விடுவதில்லை .


பேசாமல்