Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 459060 times)

Offline sameera

கண்ணீருடன் கரைந்து நிற்கும் என்னை,
புன்னகையால் மலர வைக்க நீ பிறந்தாயோ!
என்னுடன் கலந்தாயோ!
உன் வார்த்தைகள் அனைத்தும் மறுஉருவாய்
என் மனதில் இனிக்கிறது!!!
இன்று நீ விலகி நிற்பதும் ஏனடி?
தெரிந்தால் நீ எனக்கு பதில் புரிவாயடி!
உன் பிரிவின் கணங்கள் என் மனம் ஏற்க மறுக்கிறது!
உன் நினைவுகளால் என் மனம் இன்று துடிக்கிறது!
தனிமையில் வலியுடன் மனம் வாடுகிறது!!!



தென்றல்

Arul

  • Guest
உன்னோடு பேசிய நேரங்கள்
உள்ளமும் ஆறுதடி
உடல் நோயும் தீருதடி
கல்லாய் இருந்த மனமும் கூட
கண்ணீரால் கரையுமடி
உன்னை எதிர் பார்த்த
நேரங்களில் நீ வாராமல்
போனாலோ
உள்ளமும் கொதிக்குதடி
உயிரும் துடிக்குதடி
வந்தவுடன் உன் குரல் கேட்க
தென்றலாய் கரையுதடி
ஓடி மறையுதடி என் கவலைகள் அனைத்தும்............

உள்ளம்


Offline Gayathri

உன் குரல் கேட்டு மட்டும்
உயிர்வாழ்கிறேன்
உன் வார்தைகாய்
தவமிருக்கிறேன்
கதிருக்காக காதிருக்கும்
சூரிய காந்தி போல
உன் வருகைக்காய்
காத்திருக்கிறது
எனது உள்ளமும் உயிரும்.....


உயிர்

Arul

  • Guest
ஏனென்றும் தெரியவில்லை
என்னவென்றும் புரியவில்லை
என் உள்ளத்தை புரிந்துகொள்ள
எவருமில்லையோ பூவுலகில்
என் உயிரே உனக்கே புரியவில்லை
இனி எவர் புரிந்து என்ன பயன்
பூவுலகே உனை விட்டு போகிறேன்
வானுலகை நோக்கி அங்கேனும்
இருப்பாளோ என் உள்ளம் புரிந்துகொள்ள.............


அன்பே

Offline தமிழன்

அன்பே என்று சொல்லத்தான் 
ஏங்குது மனம்
அருகில் கூட வரும்
உன் அப்பாவை பார்க்கும் போது
வம்பே வேண்டாம் தாங்காது உடல்
என அறிவு தடை போடுகிறதே



வம்பே

Offline Gayathri

உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ
என அஞ்சி  வம்பே வேண்டாம் என்று
உன் அன்பில் கரைந்தே போனேன் ....

கரையும்


Arul

  • Guest
பாலைவனமான எந்தன் வாழ்வில்
ஒற்றை மரமாக கிடைத்த உன்
அன்பு இவ்வளவு சீக்கிரம்
பட்டு போகும் என்று கனவிலும்
நினைக்கவில்லையடி
இனி வாழ ஒன்றுமில்லை
என் உயிரும் போனதடி
என் உடலும் வேகுதடி
உள்ளமும் வேகுதடி
உலகை விட்டே போகிறேனடி
சாம்பலாகி கரைந்தும் போகிறேன் காற்றோடு காற்றாக.................


வாழ்க்கை

Offline Gayathri

தேவதை பெண்ணே!
என் கனவில் வா , கதை பேச
நினைவில் வா , நெஞ்சில் உறங்க
நேரில் வா , காலம் மறந்து காதலிக்க
வாழ்க்கையெல்லாம்
விழித்திருப்பேன் , காத்திருப்பேன்
உன் வருகையை  எதிர்பார்த்து ...


வழி மேல் விழி வைத்து

Offline sameera

வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...
என்றும் நீ என்னுடன் நடந்த பாதையில்...
தனியாய் இருக்க..
மனமோ ஏங்குதடா!!
உள்ளமோ நோகுதடா!!!
உன் நினைவில் மனம் இன்று..
என்னையே வெறுக்கிறது..
உன்னை காண முடியவில்லை என்று..
உன் நிழல் கொண்ட பாதை,,
இன்று தனியாய் தவிக்கிறது...
பூக்கள் புட்கள்லாக மாறுகிறது..
என் மனமோ வாடுகிறது...
ஆனால் விழி மட்டும் ஏனோ ஏங்குகிறது,,,
உன்னை காண!!!



வானவில்
« Last Edit: August 20, 2013, 06:42:43 PM by sameera »

Offline தமிழன்

பல வர்ணங்கள் ஜொலித்திட
மனதை மயக்கி
மறைந்து போகும் வானவில் காதல்.
வானவில் மறைந்தாலும்
அதன் சுவடு இருக்காதது.
 மறைந்த பின்னும்
அதன் வடுவையும்
மாறா வலியும்  விட்டுச்  செல்லும் காதல் 



வடு

Arul

  • Guest
மடைதிறந்த வெள்ளம் போல்
பொங்கி வந்த வார்தைகளை
கண்களில் நீரோடு பேசத் தான்
ஓடி வந்தேன்
அடக்கி வைத்த மனதுக்கு
அளவில்லா ஆனந்தம் என்ன
பேச ஏது பேச என்று அறியும்
முன்னே பேசும் போதே
ஏனோ காணாமல் கடந்துவிட்டாய்
செல்லும் போது ஏனோ
என் இதயத்தில் வெட்டப்பட்ட
வடு............
உன் நினைவுகளோடு நான் மெளனமாய் கண்ணீரோடு ...........

கண்ணீர்

Offline DharShaN

நினைவு

எங்கங்கோ உன்னை தேடினேன்
நீ கிடைக்கவில்லை
கல்லறை தேடி உறங்கினேன்
என் இதயம் சொன்னது
நீ என் பக்கத்தில்

நிலா

Offline sameera

வானில் எங்கோ ஒரு இடத்தில நீ...
பௌர்ணமி நிலவாய்,,,
அமாவாசை இருட்டாய்....
உன்னில் கரை ஏற துடிக்கும் மனிதர்களுக்கு...
நீ குளிர் பிரதேசம் என்று மட்டுமே தெரியும்...
ஆனால்,,
உனக்கே நீ நெருப்பாய் துடிப்பது தெரியும்..
உன் உயிரை காண வருகிறாய்...
அந்தி சாயும் பொழுதில்...
அவளுக்காக உன் வெளிச்சத்தை தோளாய் தர!!!



கல்லூரி
« Last Edit: August 28, 2013, 05:12:18 PM by sameera »

Arul

  • Guest
உன்னை விட்டு பிரியுமுன்னே
உள்ளம் வலியாய் துடிக்குதடி
உயிரும் பிரிந்து போனதடி
பேசிய வார்த்தைகள் அனைத்தும்
பொய்யாய் இங்கே ஆனதடி
நீ இல்லை என்று சொன்னாலும்
என் நினைவும் உன்னை பின் தொடரும்
நீ பயிலும் கல்லூரிக்குள்ளும்
பறந்து வரும் .........................என் நினைவுகள்



என் அன்பே





Offline Gayathri

நீ  பூமி
நீ ஆகாயம்
நீ நெருப்பு
நீ  காற்று
நீ  ஊற்று
என்றெல்லாம்
உன்னை வர்ணித்து
இயற்கையுடன் சேர்க்க விரும்பவில்லை

என்னுடன் சேர்க்க ஆசைபடுகிறேன்
என் உயிரே நீ தானே  என் அன்பே....

உயிர் உருகும் ஓசை