தேடல் தொடர்கிறதே!
நொடிபொழுதில் ஆரம்பித்து,நிமிடமாய் நீண்டு,
மணிக்கணக்காய் மாறி,வாரங்களில் கழிந்து,
மாதங்களில் மாட்டிக்கொண்டு,வருடக்கணக்காய் வாட்டிகொண்டு ,
இன்னும் சொல்லப் போனால் யுகங்களாய் தொடர்கிறதே......
இந்த தேடல்...................
எதை தேடுகிறோம்,எங்கு தேடுகிறோம்,எப்படி தேடுகிறோம்,
யாரை தேடுகிறோம்,எப்போது தேடுகிறோம்,,,,,,,
ஒன்று கிடைக்கும் வரை அதை தேடுகிறோம்,
அது கிட்டியபின் அடுத்ததை தேடுகிறோம்,
சளைக்காமல் தேடுகிறோம் ,அலுக்காமல் தேடுகிறோம்,
தேடல் மட்டும் தொடர்கிறதே!!!
தொடர்கதை