Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 461190 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இருவரும் ஜோடியாய் இணைந்து நடந்த சாலையில்
நான்மட்டும் நடக்கிறேன் தனிமையில் தவிக்கிறேன்
வழிபார்த்து காத்திருந்த கண்கள் இன்று
உன்முகம் பார்க்க காத்துகிடக்க
பறந்துபோன கிளியே உன்
பார்வைக்காக காத்திருக்கிறேன் ...........



தவிக்கிறேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

கனவுக்குள்ளே உந்தன் நினைவாலே
உன்னை மறந்து தவிக்கிறேன்,
நீ என்னை மறந்து சிரிக்கிறாய்..


நினைவாலே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இதயங்கள் எரியும்
நெருப்பாய் கண்கள் வடிக்கும்
நீராய் உயிர் வலிக்கும்
உன் நினைவால்




இதயங்கள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

இதயங்கள் இணைத்த

முடிவில்லா நம் அன்பின் முடிவு

நிச்சயம் என்னிடம் இல்லை....

என்னால் அமைய போவதும் இல்லை!

ஆனால்...

எல்லா முடிவும் புதிய நட்பின் தொடக்கம் தானே

காத்திருக்கிறேன் புதிய நட்புக்காக .....


நட்பு
« Last Edit: August 04, 2013, 10:11:45 PM by Gayathri »

Offline sameera

உனது அன்பு...
என் நெஞ்சினில் புகுந்தது,,,
தனிமை அன்று மறைந்தது,,,
நாமென்று உள்ளம் நெகிழ்ந்தது,,,
இரு உள்ளமும் துள்ளியது,,,
துன்பம் அதனால் உருகியது,,,
இன்பம் என்றும் இறுகியது,,,
உன்னால் நெஞ்சம் மகிழ்ந்தது!!!

இதுவே நட்பின் அழகோ!!!



கண்கள்


Offline Gayathri

உன்னருகில் நானிருக்க
என்  கண்களோடு
உன் கண்கள் சேரும் போது
ஏழு ஜென்மம்
வாழ்ந்ததுபோல்
நொடியினில்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு.


என்னருகில் நீ....

Offline sameera

உன் அருகில் நான் காணும் நொடி அனைத்தும் அழகோ!
நீ என்னுடன் சேர்ந்திருக்க,,,
நான் உன்னுடன் கை கோர்க்க,,,
நீ என்மேல் தலை சாய்க்க,,,
நான் உன் விழி பார்க்க,,,
அன்பால் இருவரும் இணைந்து,,,
அழகிய நாட்களை இருவரும்,...
ஒன்றாகவே கடப்போம் என் உயிரே!!!


மழை துளி!

Offline Gayathri

என்னை விட்டு நீ
பிரிந்ததை வானத்திற்கும்
சொல்லியது யார் ?
என்னை போல் அதுவும்
கண்ணீர் சிந்துகிறதே
மழை துளியாய் ....



கண்ணீர்

Offline sameera

நெஞ்சினுள் உள்ள துயரங்கள் யாவும்,,,
கண்ணீர் துளியாய் வெளி வர...
கண்ணீரை துடைத்த என்னவனே!!!
நீயோ என்னை பிரிந்து விட்டாய்,,,
அதாலால்,,
மனமது துயர்வுற்று கல்லாய் இருக்கிறது....
கண்ணீராய் வடிகின்றது...
யார் என் கண்ணீரை துடைக்க வருவாரோ!!!
அதை சிறகாய் விரிக்க வருவாரோ!!!


பெண்



Offline Gayathri

பெண்ணே !
வெட்டிப்பயன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோ
தயக்கம் தடுக்கிறது...
உன்னை நினைத்து ஏங்கும்  எனக்கு
எங்கும்  எதிலும் நீயே தெரிகிறாய்
என் நினைவெல்லாம்
நீயே வாழ்கிறாய்....



நினைவெல்லாம்


Arul

  • Guest
நாம் இருவரும் முகம் பார்த்து பழகவில்லை
குரல்களும் பரிட்சயமில்லை
எழுத்துக்களால் ஒன்றானோம்
என்னில் தோன்றும் எண்ணங்கள்
உன்னிலும் வெளிப்பட இருவரும்
தோழமையாய் பயணித்தோம்
தினம் தினம் எழுத்துக்களால்  சந்தித்தோம்
எண்ணங்களை பதிவு கொண்டோம்
எளிதில் புரிந்து கொண்டோம்
எங்கள் பயணம் எதுவரை என்றும் தெரியாது
என்று முடியும் என்றும் தெரியாது
எங்களுக்கு பிரிவுகளும் வரக்கூடும்
ஆனால் பிரிந்தாலும் பயணிப்போம்
எங்கள் நினைவெல்லாம் எங்களோடு
என்றென்றும் பயணிக்கும்
இறுதி மூச்சு இருக்கும் வரை
அன்பு பயணம் தொடர்ந்திருக்கும்.............




அன்பு
« Last Edit: August 10, 2013, 11:41:44 PM by அருள் »

Offline Gayathri

அம்மா
அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல ...
அது நம் அன்பின்  தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்


பாசம்...

Arul

  • Guest
உன்னை விட்டு வெகு தூரம்
செல்கிறேன் என்றதும்
போய் வா என்று சொல்லிவிட்டு
மெளனமாய் நின்றாயே
என்னை பார்த்துக்கொண்டே
உன் கண்களில் நீர் வழிய
அந்த பாசத்திற்கு ஈடு இணை
இந்த உலகில் ஏதடி என் உயிரே...............


உயிர்


Offline sameera

உயிரே என்னை பிரிந்து சென்றாலும்....
 நினைவுகளாய் விழியில் நிற்பதும் ஏன்?
என் ஆருயிர் என்று நினைத்து...
என்னை உன்னிடம் கொடுத்து விட்டேன்!
அதனாலோ என்னவோ!
என் மனம் எனக்கே துரோகம் செய்கிறது...
இருப்பதோ என்னிடம்...
துடிபதோ அவளுக்காக...!!!



நினைவுகள்

Arul

  • Guest
உயிரை பிரிந்து நடை பிணமாய்
இங்கே உன் வார்த்தைகளை கேட்க
ஏங்குகிறது என் மனது
சரணம் கொண்டு உன் விரல்களால்
மீட்கப்பட்ட இசைக் கோர்வைகள்
ராகங்களக என் மனதில் இசைக்கின்றது
நம் நினைவுகளை
விரல்கள் அள்ள மறுக்கிறது உணவை
இமைகள் மூட மறுக்கிறது உறங்க
அழுகின்ற மனதை ஆறுதல் படுத்த இயலாமல்
மெளனமாய் அழுகின்றேன் உன் நினைவுகளோடு தனிமையில்......................



தனிமை