Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464202 times)

Offline Global Angel

கரம் பிடிக்க
மெது நடை பயின்று
மெதுவாக ஓடி
பட்டென்று விழுந்தேன் ...
மழலை பருவம்



மழலை பருவம்
                    

Offline spince

மீண்டும் இன்னொரு ஜென்மம் வேண்டும்
  நான் பேசும் மழலை கவியை ரசிக்கும்
என் தாயை நான் ரசிக்க..

ரசிக்க

Offline Global Angel

என்னால் மட்டுமே முடிகிறது
எந்த மன கஷ்டத்திலும்
உன்னை ரசிக்க ..


என்னால்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
முன்னால் , நீ  இருந்ததும் இல்லை ,இருக்கவேண்டும் என  எதிர்பார்த்ததும் இல்லை - இருந்தும்
உன்னால், எனக்கும் தமிழ் தடை இன்றி வரும், கற்பனை  சிறகுகள் விரியும் என்று நினைத்ததில்லை
தன்னால் தடை இன்றி தமிழ் தவழ்கின்றது ,கவிதை மனம் கமழ்கின்றது
உன்னால் மட்டும் எப்படி சிந்தாமல் சிதறாமல் என் மனதை  உதற முடிந்தது ?
என்னால் இதயத்தில் உதிரம் சிதறும் பொழுதும் கதற கூட முடியவில்லையே !

  அடுத்த தலைப்பு - உதிரம்

Offline Global Angel

உதிரம் சிந்தியும்
கதற முடியவில்லைஎன்றால்
காதலா....???
காதலில்தான் கீறாமல்
கிழிக்காமல் உதிரம் கொட்டும்
உணர்வும் மழுங்கும்
வாய் விட்டு அளவும் முடியாது
வரி கொண்டு வார்தையாடவும் முடியாது ,,


உணர்வும்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உணர்வுக்கு பெயர் தேடி பழகியதில்லை -என்
உணர்வும் பெயர் வேண்டி கோரிக்கை சம்ர்பித்ததில்லை
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைத்தே பழகியதால்
உள்ளதை சில சமயம் இழந்ததுண்டு ,நல்லதை இழந்ததில்லை
கனவுக்குள் நான் தரிசிக்கும் கவிதைக்கு மொழிசமைத்து கவியமைப்பேன்
என் கவிதைக்கு உயிர் தரும் உயிர்கவிதையை உயிராக உயர்வாக
நினைவுக்குள் நீங்காமல் நிலைத்து வைத்தேன்.   ஏனோ ?
என்னை தனிமை படுத்த நினைவு கொண்டாள்,
இனி தனித்து பேச முடியாதென்று முடிவு கொண்டாள்
இனிமையாக தான் பேசினேன் தெரிந்தவரை -என்னுள்  ஏதும்
கடுமை கண்டீர்களா என்னை அறிந்தவரே !

      அடுத்த தலைப்பு - அறிந்தவரே !


Offline Global Angel


எல்லாம் அறிந்தவரே
அறிந்திருந்தும்
அறியாமையில்தான் பிதற்றுகின்றேரோ ...


அறியாமை
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உன் நேசம் கண்டு
பாசம் வைத்து
பாசம் வைத்து
பிரிந்து புரிந்தேன்
அறியாமையால் உன் நட்பை
இழந்தேன்..
தோழியே வந்துவிடு
உன் நட்பை தந்து விடு


தந்து விடு



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
புரியாத பிரியம் பிரியும் பொழுது  தான் புரியும் ..
இன்று புரிந்த பிரியத்தின் பரிவினை பெறுவாய் வருந்தாதே !
புரிதலின் பின் பிரிதலும், பிரிதலின் பின் பெரும்  வலியையும்
புரிந்தவன், அறிந்தவன் கேட்கின்றேன்
வந்துவிடு வேண்டுவதை தந்துவிடு..

அடுத்த தலைப்பு -  கேட்கின்றேன்

Offline Global Angel

கேட்பதெல்லாம் கிடைக்கும் என்றால் ...
நானும் கேட்கின்றேன்
அடுத்த உலக அழகியாக
நான் வர வேண்டும் ..


உலக அழகி
                    

Offline spince

உலகிலேயே  அழகி நீமட்டும் தான்  என்று
நினைத்த என்னை..
தன்  மழைதுலியால் நினைவூட்டியது
மழை மேகம்..
மேல் நிமிர்ந்து பார் இங்கும் அவளின் ராஜ்யமே
இந்த உலக அழகியை காண இரவில் நச்சத்திரங்களும்
பகலில் சூரியனும் என்னை விரட்டி அடிக்கின்றன அவளின் அழகை காண..
என்றது மழை ...!

மழை
« Last Edit: December 04, 2011, 10:21:02 PM by spince »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இதயத்தில் வலி
கண்களில் மழை

கண்களில்





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

இதயத்தின் வலிகளை
இழக்க ...
கண்களில் கண்ணீர் ..
வலி நிவாரினியோ...??


வலி நிவாரினி
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மனம் துக்க படும் போதெலாம்
உன்னை பார்த்து செல்கிறேன்
மனதின் வலியை
நீக்கும் வலிநீவாரிணி நீ
மனதோடு வலியை
மறக்க வை


மறக்க வை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

மறக்க வை
உன் மீது நான் கொண்ட பாசம்
உன் மீது நான் கொண்ட நேசம்
உன் மீது நான் கொண்ட மோகம் ...

இல்லையேல் என்னை மரிக்க வை ...


மரிக்க வை