என்னவென்றே தெரியவில்லை
எண்ணம் என்னவென்றும் புரியவில்லை
வழக்கமாய் வாசம் வீசும் வாச மலர்மொட்டு
ஏனோ வசை (திட்டு) வீசுது எனக்கு மட்டும் ?
என் வரிகளில் நேசம்தான் நிறைய நிறைத்து வைத்தேன் ,
பாசபூக்களை பறிச்சு வைத்தேன் ,
தூசு அளவும் வேசம் வெதைக்கலையே
இருந்தும் ஏனோ ஏசு ஏசு என ஏசுகிறது வாசமலர்? .
ஆசை ,ஆசை ஆசையாய் தானே ஆசைகளை சொன்னான்
ஓசை படாமல் ஆயிரம் ஆசைகள் தளம் முழுதும் தடம் பதிக்கும்பொழுது
அந்தோ பரிதாபம் ஆசையின் ஆசைக்கு மட்டும்
ஏன் விசேச பூசைகளோடு தடைபோடுவதாய் அடம்பிடிக்குது வாசமலர் .
ஒரு வேலை ரோசாவில் முள் இருப்பது இயற்கைதான் என்பதாலோ ?
உண்மையாய் தன் தன்மைக்கும் மாறாக மென்மையாய்
தன்மையாய் காயம்செய்தால் ரசிக்க மனம் இல்லாவிட்டாலும்
கள்ளி செடியின் முள்ளினையே அனுசரித்து தாங்குபவன் நான் .
அல்லி மல்லி முல்லை என மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
ஆசை ஆசையாய் ரோசாவை ரசிக்கும்பொழுது
முள்ளின் சிராய்ப்புகளையும் பொருட்படுத்தாது
வரிகள் பிரசவிக்கும் கவிதை காதலன் நான் .
அடுத்த தலைப்பு - கவிதை காதலன்