நான் முகர்ந்து போனதாய்
பொய் குற்றம்சாட்டும் ரோசாவே
வான்சுமந்த வெண்ணிலவை
மேகம் விட்டுப்போனதாய்
குற்றச்சாட்டு ஏதும் கேள்விப்பட்டதுண்டா ?
தேன்சுமந்த மலர் காத்திருக்கலாம் ,இருந்தும்
தேன்சுமந்த பூக்களோடு ஒப்பிடப்படும் பூவா நீ
அல்லி மல்லி முல்லை என மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
தேன் திருடவந்த வண்டெனவா என்னை எண்ணிவிடாய் ?
உன் வலிதிருடி ,மனம் வருடி ,கொண்டாடவைக்க
திண்டாடி நிற்கும் வண்டடி நான் வாசமலரே !
சொல்லடி,கிண்டலடி,கேலியடி , மட்டும் இல்லை
குண்டடியே பட்டாலும் உன்வரவை வரவேற்கும் வண்டடி நான் ஆசைமலரே !
அடுத்த தலைப்பு - ஆசைமலர்