நான்கு கண்கள் சந்தித்த அந்த முதல் நொடி,
நமது உலகம் ஒரு சிறு புன்னகையில் அடங்கி போனது..
நிழல் நிஜமாய் மாறிய அந்த திருநாள்
அக்னி சாட்சியாய் உன்னில் சரிபாதி ஆனேன்!!
முத்தங்களும், செல்ல சண்டைகளும்,
தீராத உரையாடல்களும்..
காதல் ஒரு மதுரமான கனவாக
நம்மை சுற்றி இருந்தது..!!!
வாழ்க்கை எனும் ஓட்டத்தில் ஏனோ திசை மாறினோம்,
மெல்ல மௌனங்கள் வளர்ந்து,
இமயம் போல் ஓர் இடைவெளி,
புரிதல்கள் குறைந்து பிரிவுகள் பெரிதாக தெரிந்தன..
வேண்டாம் இந்த பந்தம் என
இதயம் கதறிய தருணங்கள்
நாம் தொலைத்த காதல்,
மீண்டும் கிடைக்காதோ என ஏங்கினோம்..!!!
ஆனால் காலத்தின் கரங்கள் நம்மை
மீண்டும் பிணைத்தன,
தவறுகளை மன்னித்து காயங்களை
மறைக்க கற்று கொண்டோம்..
அன்று பார்த்த இளமையை விட இன்று பேரழகனாய்,
மரணம் வரும் அந்த இறுதி நொடி வரை
உன் விரல் கோர்த்து,
உன் மார்பில் சாய்ந்தே கிடக்க ஆசை..
மறுபிறவி என்பது உண்மை என்றால்,
நீயே என் கணவன்...நான் உன் மனைவி..!!!
காதலின் சிறப்பு என்ன தெரியுமா?
இளமையில் கொண்டாட்டமாக, இடையில் பாடமாக,
முதுமையில் ஒரு பெரும் வரமாக இருக்கும்!!
நீ துணை இருந்தால் என் இறுதி பயணம் கூட
திருவிழாவே!
முடிவே இல்லாத ஒரு பயணத்தில்,
முடிவே இல்லாத ஒரு காதலில்..
மூழ்கித் திக்குமுக்காடுவோம்..!!!
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!