Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464320 times)

Offline Global Angel

ஒரு மூக்க‌ணாங்க‌யிற்றால்
முழுவதும் உனதானேன்


முழுவதும்



                    

Offline thamilan

என் இதயம் முழுவதும்
ஏன்
இந்த உலகம் முழுவதும்
நீயே இருக்கிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
பார்க்கும் பொருள் எல்லாம்
நீயே இருக்கிறாய்



உலகம்

Offline Global Angel

நீதான் என் உலகம்
உருளுமா உடையுமா ..?


நீதான்
                    

Offline RemO

காதலே கூடாதென்று இருந்த
என் இதயத்தில்
காதலை பூக்க வைத்தவள் நீ தான்

இன்று அந்த
பூவை
கசக்கி எறிவதின் காரணம் என்னவோ

அடுத்த தலைப்பு : பூ

Offline Global Angel

என்னை பூவாய் மதித்துத்தானே
முகர்ந்து வீசி விட்டாய்
புழுதியில் விழுந்தாலும்
உன் பூஜைக்கு வந்த சந்தோசம்
இந்த பூவைக்கு போதும் ,,


பூவை (பெண் )

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பூத்த பூக்கள் எல்லாம்
பூஜைக்கு செல்வதில்லை
அதுபோல தான்
இந்த பூவையும்
உன்னை சேர முடியாமல்
வாடி போகிறேன்


சுயநலம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

நான் மற்றவர்களுக்கு தொண்டு செய்வது
சேவைக்காக அல்ல
அவர்களின் வாழ்த்துகாக

ரத்த தானம் செய்வதும்
மூத்தோருக்கு உதவுவதும்
அநாதை இலத்திற்கு கொடை செய்வதும்
பொதுநலத்துக்கு தான்
என்று நினைத்தால்
அது
உங்கள் தவறு

அல்லலுற்ற தோழனுக்கு 
துணை இருப்பது
நட்பால் அல்ல
அவர்கள் அதை திருப்பி செய்வார்கள் என்ற
எதிர்பார்ப்பில்

வெறும் புகழ்ச்சிக்கும்,
பலன் எதிர் நோக்கியும்
நான் செய்வதை கண்டு
நான்  நல்லவன் என எண்ணும்
மூடர்களே
இது வெறும் சுயநலம் தான்
இனி ஏமாறாதீர்



அடுத்த தலைப்பு : அநாதை

Offline pEpSi

என்னை சுற்றி 1000 நபர்
இருந்தாலும்
அனாதை ஆகிறேன் உன்
பார்வை படாத போது..


பார்வை

Offline Global Angel

உன் பார்வையில்
என் பனி துளி சுடுகிறதே ..



பனித்துளி


                    

Offline JS

வெண்மை நிற பனித்துளி
என் மேல் விழுகையில்
நீல நிறமாகிறது
காரணம் உன்னைப் பற்றிய
நினைவுகள் விஷம் போல
என்னில் பரவி இருப்பதினால்...


விஷம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline RemO

புகைக்காதீர்
உங்கள் சிற்றின்பதிற்காக
என் சுவாசத்தில் விஷம் கலக்காதீர்

அடுத்த தலைப்பு : இன்பம்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று ,
கடல் எத்தனை முறை தான் அடித்து அடித்து கரையில் கொண்டு வந்து விட்டாலும்
அலை, கடலையே தேடி செல்லவது போல ,
எத்துனை முறை தான் என்னை அலட்சியம் செய்து அலைகழித்தாலும் அணு அணு வாய் உன் நினைவிலேயே
நீங்காதிருப்பதால் ,கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று.

அடுத்து  தலைப்பு = காத்திருப்பு 
« Last Edit: October 26, 2011, 10:30:09 AM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ajith adutha thalaipu sollama poiteenga ??


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

அஜித் நான் கொடுத்த தலைப்பு இன்பம் ஆனா நீங்க அதற்கு கவிதை எழுதவில்லையே??

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
]தலைப்பை காண்பதில் சிறிய தவறு நேர்ந்ததால் தலைப்பு தவறிவிட்டது
கிடைசி பக்கத்தின் கடைசி கவிதையை காண்பதற்கு பதிலாக முதல் பக்கத்தின்
கடைசி கவிதையை கண்ட குழப்பத்தில் தான் தலைப்பு தவரிவிட்டது.