Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 428245 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தென்றலாக வீசிக்கொண்டு இருந்த
என்னுள் புயலாய் வந்தவனே...
மின்னலாய் மறைந்து போய் விடாதே....
உன்னை பிரிந்தால்
உயிர் வாழ இயலாது என்னால்

தென்றல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

ஒவொரு கணமும்
தென்றலாய் வீசி
என் மனதை
புயல் சூழ்ந்த
பூமியாக்குகின்றாய்


பூமி
                    

Offline JS

பூமியின் மடியில்
நான் விழுந்து கிடந்தேன்
பிள்ளையாக உன்
நினைவுகளோடு...


நினைவுகள்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

உன் நினைவுகளை சுமப்பதால்தான்
என் இருதயம் இன்னும்
உசிரோடு வாழ்கிறது



சுமை
                    

Offline Yousuf

திரவியம் தேடி...

உடல் மட்டும்

திரைகடல் தாண்டி

உயிரை மட்டும்

உன்னிடத்தில் விட்டு

 

ஆண்டுகள் இரண்டு கழிய

ஆயுள்கால வேதனை.

பாலையில் நான் இருந்தும்...

வெம்மை என்னை சுடுவதில்லை.

தனிமையில் நான் இருப்பதினால்....

உன் நினைவுகள் என்னை சுடுகிறது.

 

பிரிவின் சுமையோ

இரண்டு ஆண்டுகள் தான்...

நினைவின் சுமையோ

நிமிடங்கள் தோறும்...


பிரிவு
« Last Edit: October 08, 2011, 04:52:28 PM by Yousuf »

Offline Global Angel

பிரிவுதான் உணர்த்துகின்றது
வாழ்கையின் வளர்ச்சியை ...


வாழ்க்கை
                    

Offline JS

வாழ்க்கை புயல் போல
வாழலாம் அதன் மேலே...


புயல்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
புயலாய் புழுதிகிளப்பிப்
போனது ஓர் ரதம்...
அதன் சில்லுகளிடைச் சிக்கி
நசிந்த பூக்களின் கண்ணீர்,
புழுதியை அடக்க முயன்று
தோற்றன...
பூக்களின் சிதைவுகளில்
புயல் சிரிக்கின்றது...


பூக்களின் சிதைவு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline pEpSi

காதலில் தோற்றவன் மனது
சிதைந்து போன பூக்கள்
போலதான்....
ஆனால் சிதைந்த அந்த இடத்தில
திரும்ப ஒரு பூ பூக்கும்...
அதே போல தான் மனதும்
ஒரு நாள் நம்மை புரிந்த ஒரு பூ
நம் மனதில் நிற்கும்....
அதனால் என்றும்  தளராமல் வாழ
வேண்டுமென என் நண்பருக்கு சொல்கிறேன்...


தளராமல் வாழ

Offline Global Angel

தன்னம்பிக்கை கொள்
தளராமால் வாழலாம் ..


தன்னம்பிக்கை 
                    

Offline Yousuf

கடவுள் நமது கோரிக்கைகளை
உடனே நிறைவேற்றினால் அவர் மீது
பக்தி (நம்பிக்கை) அதிகமாகிறது !

சற்று தாமதமானால் நமக்கு
நமது `தன்னம்பிக்கையை' அதிகமாக்கிறார்
என்று அர்த்தம் !



முயற்சி

Offline RemO

முயற்சி திருவினையக்குமாம்
ஆனால்
முயன்று முயன்றது தோற்கிறேன்
அவளை
புரிந்துகொள்ள

தோல்வி

Offline JS

ஒருவர் தோல்வியில்
அவரின் வெற்றி அமையும்
பிறரின் வேதனையில்
வெற்றி காண்பது
மிருக தனத்தை விட
கொடியது...


மிருக தனம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

ஒவோருத்தர் மனதுள்ளும்
உறங்கி கிடக்கிறது
மிருகத்தனம்
அது உறங்குவதும்
எழுவதும் அடுத்தவர் கையிலுள்ளது


உறக்கம்
                    

Offline JS

உறங்கும் மனிதன்
விழித்தால்...
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
போல் ஆகும்...


காடு
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை