Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528045 times)

Offline thamilan

நல்ல நண்பர்கள்
காயப்படுத்த மாட்டார்கள்
அது நல்ல நண்பர்களாய்
நடக்கும் வரை தான் நண்பா

நேரடியாக சொல்வதை விட
மறைமுகமாக சொல்வதும்
நல்லது தான் நண்பா
ஒரு சபையில் நேரடியாக
ஒருவன் செய்த பிழையை சொல்வது
அவனை சபை முழுவதும்
குற்றவாளியாகவே பார்க்கும்
அதை விட‌
மறைமுகமாக சொல்வது
பிழை செய்த ஓருவனுக்கு மட்டுமே
உணர்த்தும்
மற்றவர் முன்னால்
அவமானப் படுத்தாமல்
பிழை செய்த நண்பனுக்கு மட்டும்
அவன் பிழையை உணர்த்துவதும்
நல்ல நண்பனுக்கு அழகு தானே



குற்றவாளி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இதயத்தை திருடியது நீ
குற்றவாளி நான்
ஆயுள் தண்டனையை
உன் இதயசிறையில் பூட்டிவிடு
;) ;)

ஆயுள் தண்டனை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன்னை காதலித்த குற்றத்திற்காகவா
உன் இதயம் எனும்  சிறையில்
எனை ஆயுள் தண்டனை கைதியாக்கினாய்


குற்றம்

                    

Offline thamilan

நான் உன்னை பார்த்தது
என் குற்றமா
எதற்காக உன் கண்களால்
என்னை கைது செய்கிறாய்




கைது செய்

Offline JS

என்னை கைது செய்தாய்
உன் கண்களால்
உன்னை வழி மறித்தேன்
என் காதலால்..


கண்கள்
« Last Edit: August 22, 2011, 08:18:46 PM by JS »
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
உன் வில் போன்ற கண்ணில்
அம்பு போன்ற பார்வையில் வரும்
காதல் அம்புகள் என்னை கொல்லுதடி


அம்புகள்

Offline JS

நீ விடுத்த அம்புகள்
என்னை கொல்வதில்லை
என்னுள் இருப்பது நீயல்லவா!
அதற்கு தெரியும் உன்
வாசம் என் நெஞ்சில் உள்ளதென்று...


வாசம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
வண்டுகள் அனைத்தும்
பூக்களின் வாசத்தை  விட்டுவிட்டு
உன் பின்னே அலைகிறதே..
உன் பெயர் தேன் என்பதாலா...



வண்டுகள்

Offline JS

ஆடி பாடும் வண்டுகள்
உன் கூச்சல் கேட்டதும்
ஓடுவது ஏன்?
நீ விடும் ரீங்காரத்தில்
மயங்கி விடுவோமோ
என்ற பயம் போலும்...


ரீங்காரம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
என்றும் உறங்க ஆசை படுவேன்
கனவில் உன் ரீங்காரம் கேட்டால்
அங்காவது மனம் விட்டு திட்டி (பேசி)
செல்வயானால்...



உறக்கம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உறக்கத்திலும் உன் நினைவுதான்
வலிக்கும் கனவுகளாக ...


வலி

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இதயத்தில் வலி
கண்களில் கண்ணீர்
துடைக்கும் கரங்களாய்
உனது கரம் வேண்டும்
துடைத்துவிடு
துடிக்கும் இதயத்தை
உன் பார்வையால்
அணைத்துவிடு...


கரம்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

கரம் கூப்பித் தொழுதேன்
நான் செய்த பாவங்களுக்கு
தண்டனையை இந்த உலகத்திலேயே
தா என‌
அனுப்பி வைத்தான் உன்னை
ஆயுள் தண்டனையாக‌




ஆயுள் தண்டனை


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உனக்கான மனச்சிறையில்
எனக்கான ஆயுள் தண்டனை
எப்போது தருவாய்



மனச்சிறை

                    

Offline thamilan

என் மனச்சிறை
ம‌ல‌ர் இத‌ழ்க‌ளால் ஆன‌
ப‌ஞ்சு மெத்தை
நீ ஆயுள் முழுவ‌தும்
ஆன‌ந்த‌மாக‌ இருக்கலாம்
வா



ப‌ஞ்சு மெத்தை