Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 433332 times)

Offline Global Angel

நான் உனக்கு பூமாலை
என் நெஞ்சம் உனக்கு பஞ்சு மெத்தை
தூக்கத்திலும் வலிகள் தெரியாதிருக்கும்



பூமாலை

                    

Offline thamilan

பூமாலை வேண்டுமா
பாமாலை வேண்டுமா
பூமாலை சூட ஆயிரம் பேர்
வருவர்
நான் கவிஞன்
என்னால் மட்டும் தான்
உனக்கு பாமாலை சூட முடியும்



பாமாலை

Offline Global Angel

உன்னால் சூட்டப்படும்
பாமாலை கூட எனக்கு
பூமாலைகள் தான்...



உன்னால்


                    

Offline thamilan

கலைந்த கூந்தலை
வாரிக்கொண்டிருக்கிறாய்
உன்னால்
ஒழுங்காக இருந்த என் மனம்
கலைந்து கொண்டிருக்கிறது



கூந்தல்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் கூந்தலில் நீ சூடவோ
பூத்து நிக்கின்ற பூக்கள் எல்லாம்
சூடி விடு மலர்கள் வாடும் முன்
என் மனம் வாடும் முன்



மலர்கள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

தன்னிடம் பூத்த
மலர்களை விட‌
தன் மீது கட்டப்பட்ட‌
கூட்டை பார்த்து மகிழ்கிறது
மரக்கிளை



மரக்கிளை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மரக்கிளையில் வாழும் கிளி அல்ல
உன் இதய கூண்டில் வாழும் காதல் கிளி நான்...


காதல் கிளி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

காதல் கிளிகளாக‌
காதல் வானில் சிறகடித்து பறந்தோம்
சிறகை ஒடித்து
சிறைகுள் வைத்தான்
அவளது அப்பா
காதல்கிளி இப்போது
கூண்டுக்கிளி



கூண்டுக்கிளி

Offline Global Angel

எவளவு காலம்
நீ கூண்டுக் கிளியாக இருப்பாய் ..
உன்னை சுற்றி நீயே வைத்துக்கொண்ட
சிறையை உடைத்துவிடு
உன்னை தந்துவிடு ...


சிறை

                    

Offline JS

அன்பு என்னும் சிறையில்
என்னை அடைத்தாய்
பெண்ணே உன் வலியை
மட்டும் தர மறுக்கிறாய்...


வலி
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline thamilan

எந்த வலிகளையும்
தாங்கும் சக்தி உனக்கிருக்கிறதா
நீ காதலி



காதலி

Offline Global Angel

உன் காதலியாகும்
வரம் தந்துவிடு
வாழ் நாலெல்லாம்
உன்னை பூஜித்தே வாழ்ந்திடுவேன்


பூஜை

                    

Offline thamilan

பூஜை செய்ய நான்
கடவுள் இல்லை
உன் பக்த்தன்
புன்னகை செய் நான்
புனிதம் அடைவேன்


புனிதம்

Offline Global Angel

புன்னகைத்தால் புனிதம் என்கிறாய்
அனால் என்னை புண்படுத்துவதில்
புதிரனவனாக இருப்பதேன்



புதிரானவன்

                    

Offline thamilan

புதிரானவன் நான்
உன் மனதில்
புதிது புதிதாக உணர்வுகளை
தோற்றுவிப்பதால் என்னை
புதிரானவன் என்கிறாயோ




புதிது புதிதாக‌