சட்டம் ஒரு இருட்டரை
என்று சொன்னான்
ஒரு பேரறிஞன்
சட்டத்தின் தீர்ப்பு
மனிதனுக்கு மனிதன் மாறும்
காலமிது
சட்டம் ஒரு சிலந்தி வலை
என்று சொன்னான்
இன்னொரு அறிஞன்
பலவீனமான ஈக்கள் மட்டுமே
அதில் மாட்டிக் கொள்கின்றன
பலமிக்க வண்டுகள்
வலையை கிழித்துக் கொண்டு
தப்பித்து விடுகின்றன
சிலந்தி வலை