உன்னை போல் எனக்கும்
சிற்சில, சேதாரம் தான் இதயத்தில்
பதறாதே ,பதறாதே,உன் நினைவை
புயலேன்றும்,பூகம்பமென்றும்
பொய் புகார் வாசிக்கமாட்டேன்
உண்மையில் உன் நினைவெனக்கு
சிறு மெல்லிய பூங்காற்று
பூங்காற்றால் சேதாரமா ?
என கேள்வி எழுமே ?
உனக்குள் உத்தேசித்துகொள், என்
இதயத்தின் மே(மெ)ன்மையை
நானும் காத்திருக்கிறேன் உன்னை போல்
நிவாரணம் வேண்டி இல்லை,
நீ வா ரணம் ------ ரணம் = (உன் நினைவு (பூங்காற்று ) மோதி பெரும் ரணம் )
வேண்டும் என வேண்டி ...!
நீ வா