Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 468331 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பனி உருகி ,மனம் உருகும் மார்கழியின்
மேகமூட்டத்தில் மறைந்திருக்கும்
பனி நிலவு வெளிவருவது போல

கனிமொழியாளின் வரி கண்டதும்
மனம் உருகி ,கவிபெருகி தான்
வடிகிறது  , இருந்தும்

ஏனோ ஒரு சில வார்த்தைகள் ,
சிறு  சில விஷயங்கள்
கவிபெருக்கத்திற்கு சுருக்கமாய்
மடைபோடாமல் தடை போடுகிறது

கவிபெருக்கம்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

தினமும் புதுப்புது
தலைப்பினை தந்து
தடையில்லாமல்
கவியலை ஓயாமல்
அடித்து கவிபெருக்கம்
கரைபுரண்டு ஓட
ஏனோ சிறு தடை இன்று..

தடைகள் பல கடந்து
இக்"கவி"யலை என்றும்
ஓயாமல் இங்கே
தொடருவேன்
ஆயிரம் தடைகள் ஏற்படினும் ;) ;) ;)



ஓயாமல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஓயாமல்

ஓயாமல் வரும் அலையே
ஏளனம் ஏன்
ஓய்ந்து விட்ட ஏன் காதலை பார்த்தா..?
 
நித்தம் வந்து செல்லும்
பெரும் அலையே
இம்முறையாவது எனை
அணைத்திடுவாய் என நினைத்தேன்
எனை அணைக்காது சென்றதேன்
உன் ஆழ் மனதில் மூழ்க
துடித்தும்  விலகி செல்வதேன்

இதே கரையில்
என்னவளின் இதயகடலில்
மூழ்கியதை கண்டாயோ....?



அன்புடன் - சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு ஏளனம்

« Last Edit: February 17, 2012, 12:25:51 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

இனி பேச மாட்டேன் என்று கூறி
பேசிவருகிறேன்
இனி பார்க்க மாட்டேன் என சொல்லி
பார்த்து வருகிறேன்
பொய்யாய் கோவம் கொண்டு
தள்ளி செல்கிறேன்..
ஒரு நாள் ஏனும்
உன்னுடன்  பேசாதிருக்க நினைத்து
தோற்று போகிறேன்...
என்னை அமைதியாய் பார்த்து
ஏளனமாய் நீ சிரிக்கிறாயே
உன்னால் முடியாதடி என்றா??



தென்றல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
தென்றல்

எனை முப்பொழுதும்  வருடிய தென்றலே
நீ புயலாய் மாறிய காரணம்
இன்று வரை விளங்கவில்லை

நீ தென்றலாக இருந்த பொழுதை
நினைத்து அகமகிழ்கிறேன்
அவ்வளவு  மிதமானவள் நீ
என்பது கனவாகி போனதேன்

நீ காட்டியது பொய் கோவம்
என நினைத்தேன்
நாளும் பார்த்து பேசி
சிரித்தது பொய்யா....
என்ன தீங்கிழைத்தேன்  நான்
தென்றலாக இருந்த நீ
கற்பனைக்கும் எட்டா புயலாய்....?


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு புயல்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
பெரும் புயல்  தான்..
நீ சென்ற பின்
பெரிய சேதாரம்
என் இதயத்திற்கு
நிவாரணம் வேண்டி
காத்திருக்கிறேன்
வந்து விடு ஒரு முறை
தந்து விடு உன்னை ;)
எனக்கே  எனக்காக மட்டும்


நிவாரணம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன்னை போல் எனக்கும்
சிற்சில, சேதாரம் தான் இதயத்தில்
பதறாதே ,பதறாதே,உன் நினைவை 
புயலேன்றும்,பூகம்பமென்றும்
பொய் புகார் வாசிக்கமாட்டேன்
உண்மையில் உன் நினைவெனக்கு
சிறு மெல்லிய பூங்காற்று
பூங்காற்றால் சேதாரமா ?
என கேள்வி எழுமே ?
உனக்குள் உத்தேசித்துகொள், என்
இதயத்தின் மே(மெ)ன்மையை
நானும் காத்திருக்கிறேன் உன்னை போல்
 நிவாரணம் வேண்டி இல்லை,
நீ வா ரணம் ------ ரணம் = (உன் நினைவு (பூங்காற்று ) மோதி பெரும் ரணம் )
வேண்டும் என வேண்டி ...!

நீ வா


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காதல் வரம் வேண்டி
தவித்திருந்தேன்
காதலை தந்தாய்
நேசத்தை கூட நெகிழ்வாய்
முற்றிலும் நிறைவாய் தர
உன்னை தவிர யாரால் முடியும்
கனவில் நீ வா
உன்னுடன் கனவிலும்
தொடருவேன்
என் காதலை


தொடருவேன்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

என் காதலே ..
நீ இல்லை என் அருகில் ...
உன் நேசம் உண்டு என் மனதில் ...
தொடருவேன் இந்த காதலை ..
ஒளிந்திருக்கும் உயிர் மோதலை ..
காலம் பல கடந்தாலும் ..
அழியாத கல்வெட்டாய் ...
மனதில் தொடருவேன் ...
நம் உணர்வை (உறவை )

                                     
                                            உயிர்
« Last Edit: February 19, 2012, 01:54:34 AM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உடலை மட்டும் நேசிக்கும்
உலகில்
உள்ளதை நேசித்த
உறவு நீ
உயிர் உள்ள காலம் வரை
உறவாய் என் உறவை
உறவுக்கொள்ள
உன்னதமான காதலை
உண்மையாய் தந்துவிடு ;) ;)

உறவுக்கொள்ள



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
உறவுகொள்ள உற்றவள்

உணர்வுகளாய் யார் இருப்பினும்
உரிமையான
உறவு .....நீ
உண்மையின் இருப்பிடமே
உறவுகளாய் பலர் இருந்தாலும்
உதட்டளவில்தான்
உடலாலோ உள்ளத்தாலோ
உறவுகொள்ள
உற்றவள் நீ
உள்ளதை
உண்மையாக கூற வேண்டுமானால்
உள்ளத்தால் என் உடல் நீ


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு உள்ளம்
« Last Edit: February 19, 2012, 11:06:20 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

உள்ளம் உன்னிடதிலிருக்க
உன்னதமான காதலை நீ தர
உண்மையாய்
உன் நேசத்தில்
உள்ளம் மகிழ
ஊமையாய் என்னுள்ளம்
உன்னை தேட
உணர்சிகளின்
உச்சத்தில் நான்....

தலைப்பு

ஊமை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஸ்ருதி
உங்கள்
உள்ளத்தில் இவ்ளோ
உ  ...வா என வாயடைத்து
ஊமையாகி போனேன்

அருமையான வரிகள்
ஸ்ருதி விட்டு சென்ற தலைப்பு(ஊமை)
தலைப்பு இன்னும் முற்று பெறவில்லை
கவிதை எழுத முயற்சிங்க  நானும் முயற்சிக்றேன் 
« Last Edit: February 20, 2012, 02:42:06 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
(ஊமை)யானாய்

உன்னோடு சிறு
ஊடல் ..... அதற்கா
ஊமையானாய் (மௌனமானாய்)
உனதுள்ளம்
ஊமை என்றதும்
ஊசலாய்  என் மனம்
ஊசியை காட்டிலும் புத்தி கூர்மைஉடையவளே
உண்மையான நேசம் காட்டிய
உணக்கா மனதில்
ஊனம்
உள்ளம் தளராதே
ஊன்றுகோலாய்....
ஊக்கம் கொடுக்கும்
ஊழியனாய்.... எப்பொழுதும்
உன்னருகில் இருப்பேன் நான் ...



அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு  ஊக்கம்
« Last Edit: February 20, 2012, 09:31:53 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ooviya

கணவன் மனைவிக்கு ஊக்கம் கொடுத்து இருந்தால்
இன்று அவள் சமையல் அறையில் புல்லாங்குழல் ஊதமாட்டாள்

கண்களே ஆண்களை நம்பாதே