Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 468478 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் வாழ்கை எனும் வனம் தனில்
வண்ணமாய் , வாசமாய் ,
வசந்தமாய் வந்த வாசமலர் நீ

பலநேரம் பாரிவள்ளலாய் பாசம் ,பரிவு
இன்பம்,இனிமை வாரி வழங்கிய சுவாச மலர் நீ

சிலநேரம் சிறு கருமியை  போல்
சீற்றம்,சிறுபிள்ளைத்தனம் ,வலி வேதனையும்
சிறிதாய் எனக்காய்  செலவிட்ட சிறு மௌவல்  நீ

இப்படியாய் உன் நினைவு ஒவ்வொன்றையும்
ஒப்பீட்டோடு  ஒப்பிட்டு ஒப்பிக்க
ஒருவகையில் ஒப்பம் தான் எனக்கு
-இருந்தும்
உலக  பூக்களின் ஒட்டுமொத்தமும்
போதாதே உன்னோடு ஒப்பிட ....
என்பதால்  இத்தோடு நிறுத்துகிறேன்
என் ஒப்பில்லா ஓவியமே ! ....

ஒப்பில்லா ஓவியமே !

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஒப்பில்லா ஓவியமே......!

பிரம்மன் படைப்பின்
ஒப்பிலா ஓவியமே....!
இயற்க்கையின் கொடைகளே
பறந்து விரிந்த கடல்

பச்சை பசேல் நிலம்
அடர்ந்த வனம்
பாய்ந்து ஓடும் நதி
சளைக்காமல் கொட்டும் அருவி

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வன சோலை
வனத்தில் துள்ளி
திரியும் மிருககூட்டம்

நதிக்கரையில் நாகரிகம்
வளர்க்கும் மனிதகூட்டம்
இவை எல்லாம் உன்
அடக்கம் ஆயிற்றே

அப்படி இருந்தும்
ஏன் ஏற்ற தாழ்வுகள்
ஏழை -பணக்காரன்
சாதி- அந்தஸ்து

மிருக கூட்டத்தில்  இல்லையே
நாகரிகம் வளர்த்த
மனிதன்  மட்டும் எங்கே கற்றான்
ஏற்ற தாழ்வு பார்க்க

நாபி கமலத்தில் வீற்றிருபவனே
படைப்பையே தொழிலாய் கொண்டவனே
கருணை கடலே

இது உன் பிழையா இல்லை
அனைவரையும் சமமாக படைத்த நீ
அவனை சுயமாக சிந்திக்க வைத்ததால்
வந்த வினையா......?



அன்புடன் -சுதர்சன்சுந்தரம்


தாங்கள் தொடரவேண்டிய தலைப்பு ஏற்ற தாழ்வு
« Last Edit: February 10, 2012, 09:11:19 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

ஏற்றத்தாழ்வு
சாதிகளுக்கு மட்டுமல்ல
இபொழுது எல்லாம்
காதலிலும் ....
அதனால்தான் பலகாதல்
கண்ணீரில் ....


கண்ணீர்
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கண்ணீர்
கண்ணீரில் முடிந்த காதல்
 எல்லாம் காவியம்
வெற்றியில் முடிந்த காதல்
எல்லாம் காப்பியம்

அப்படி  கண்ணீரில் முடிந்த பல
காதல் காவியங்களாய் 
அம்பிகாபதி- அமராவதி
ரோமியோ - ஜூலிஎட்

இறுதியாய் டைடானிக்
காதல் உள்பட
நம் காதல் காவியம் ஆனாலும்
காப்பியம் ஆனாலும்  சுகமே....


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு சுகம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

இபொழுது எல்லாம்
தனிமையை ரசிக்கின்றேன்
அமைதியை ரசிக்கின்றேன்
இரண்டுமே சுகமானது  ...



தனிமை
                    

Offline RemO

இனிமையாய் இருந்த தனிமை கூட
கொடுமை ஆனது  உன் பிரிவால்

அடுத்த தலைப்பு:
கொடுமை 

Offline Global Angel

உன்னால்
சந்திப்பது ஏமாற்றம்
இருந்தும்
நான் உன்மேல் கொண்ட
காதலில் இல்லை தடுமாற்றம்
உன்னோடு வாழ இல்லை கொடுப்பினை
வாழாது போனால் அதுதான் கொடுமை


தடு மாற்றம்
« Last Edit: February 12, 2012, 04:46:52 PM by Global Angel »
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
தடுமாற்றம்

உன்னோடு இருக்கும் போது
நிம்மதி  அடையும் மனம்
உன்னை பிரியும் போது
ஏன் இந்த தடுமாற்றம்
உன்னோடு பழகிய நிகழ்வுகளை
அசை போட்டும்
இதயம் கனமாகி
போனதேன்
என்னுள் ஏன் அச்சம்
பிரிவு நிரந்தரமாகி போகும்  என்றா ...?



அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு அச்சம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

என் காதலில்
எனக்கு துளியேனும் அச்சமில்லை
ஆனால் என் காதல்
உன்னிடம் எத் தருணமும்
தோற்று போகலாம்
என்ற அச்சம் எந்நாளும் ...



எந்நாளும்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அச்சமில்லை அச்சமில்லை

அடிப்படையில் என் அடிமனதில்
அச்சமென்பதே நிச்சயம் இல்லை

அச்சமென்பதை மிக துச்சமாக
கருதிவந்தேன் குறிப்பிட்ட கட்டம்வரை

உன் விரலின் வழியே வரையப்பட்ட
வரிகள், அது என் விழிகளுக்கு கிட்டும்வரை

அந்நாளில்
கவிதை என்பதே படிக்கத்தான் என
உத்தேசமாய் உத்தேசித்திருந்தேன்

பின்னாளில்
பொன்னாளாய், நன்னாளாய்
மின்னல் உன் வரிகளின்  அறிமுகம்
உன் வரிகளின் அறிமுகத்திற்கு பிறகு

இந்நாளோ ,
கவிதை என்பது படைக்கத்தான் என
உணர்ந்து ,உணர்த்தி பதித்து  வருகிறேன்

எந்நாளும் ,
என் வாழ்வில் கவிதை நிறைந்திருக்கும்
கவி விதை விதைத்தவள் நீ என்பதால் !

 அடுத்த தலைப்பு  - கவிதை நிறைந்திருக்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கவிதை நிறைந்திருக்கும்

சமுகத்தில் ஒரு மாற்றம் என்னால்
நினைக்கும் போதே
என்னுள் கர்வம்
ஆனால் எனக்கு சமுகம் குடுத்த
பட்டம்
இருமாப்புடையவள்
இரக்கமில்லாதவள்
இதயமில்லாதவள்
இன்னும் பல........

நான்  செய்தததில்
பிழை என்ன இருக்கிறது
அனைவர் நினைவிலும்
கவி விதை விதைக்க
பட்ட பாடு
அப்பப்பா.......

எத்தனை இன்னல்கள்
எனக்கு துளியேனும்
வருத்தம் இல்லை
கவிதை நிறைந்திருக்கும்
விருட்சங்களாக
இப்பூவுலகை மாற்ற
எனக்கு கிடைத்த ஒரு
வாய்ப்பாகவே கருதுகிறேன்.


அன்புடன் -சுதர்சன்சுந்தரம்

தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு வாய்ப்பு
« Last Edit: February 16, 2012, 11:01:48 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

வாய்ப்பு ஒன்று தந்துவிடு
உன்னோடு வாழ
இல்லை உன் நினைவுகளோடு வாழ



எந்நாளும்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வானத்தை விட்டு நீங்காத
மேகமாய் உன்னுளிருக்க
எங்கும் உள்ளம்
உன்னோடு இருக்கும்
பொழுதுகள் எல்லாம்
எந்நாளும் பொன்நாள்தான்

திரும்பி பார்க்கிறேன்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

திரும்பி பார்கிறேன்
உன் கனிவு எனக்கு தெரியவில்லை
உன்னால் நான்பட்ட
கடினமான தருணங்கள் தெரிகின்றன ..


தருணங்கள்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

வெக்கத்தில்
முகத்தை மறைக்க
நிலவு போல மேகத்தில்
ஒளிந்து கொள்ள
உன் மார்பை தேடி
நான் தவித்துபோகிறேன்
நீ முத்தமிடும்
தருணங்களின் போது  ;)  ;)



நிலவு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்