Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464355 times)

Offline Global Angel

உன்னை நினைக்கும்
உள்ளமதில்
உன் நினைவுகள் மட்டும்
வேதனைகளை தருவானேன் ...



நினைவுகள்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னை அறியாமல்
எனக்கு நீ
விட்டு சென்றது
உன் நினைவுகள் தான்
முள்ளாய் குத்தும்
நினைவுகள் கூட
உன் முகம் பார்த்தபின்
பூவாய் மாறுவது ஏனோ


மாறுவது ஏனோ


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

அமைதியாய்
அலுங்காமல்
ஒரே வேகத்தில் துடிக்கும் என் இதயம்
உன்னை கண்டதும்
ஓராயிரம் முறை துடிக்க தவிக்குறதே ..
இப்படி மாறுவது ஏனோ
இதுதான் காதலா ....?


இதுதான் காதலா
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நினைவுகள் பெருவாரியான பொழுதுகளில்
நிஜத்தை விஞ்சிவிடுகின்றது ,
தரும் இனிமைதனின் அளவினில்.
நிஜம் தரும் இனிமையோ சில நொடிகளில்
நினைவுகள் தரும் இனிமையோ
நாம் நாடும் போதெல்லாம்
இனிமை சுகம் தேடும்போதெல்லாம்
( உன் )நினைவுகளை நீக்கி பார்த்தால்(என்) கவிதை கடல்
கடலில் இருந்து மருவி
சிறு ஓடையாய் தான் வீற்றிருக்கும்.
 இது தான் காதலோ?
« Last Edit: December 27, 2011, 08:34:09 AM by aasaiajiith »

Offline Global Angel

தினம் உன்னை தேடி
திக்குகள் எல்லாம்
என் நினைவு குதிரைகளை
முடக்கி விடுகின்றேன் ...
திசைஎட்டும் தேடியும்
உன்னை காணாத சலிப்பிலும்
கண் அயர மறுக்கின்றன ..
இதுதான் காதலா ...?



நினைவு குதிரைகளை

                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வழிபார்த்து ,விழிபூத்து,
எதிர்பார்த்து ,மனம்வேர்த்து காத்திருந்தேன்
நினைவு குதிரை மீதேறி, என் கனவுராணி
உன் கவிதை ஊர்வலம் காண்பதற்கே.
தளம்  எங்கும் இடம்பிடித்த
உன் தடம் கண்டுணர்ந்தேன்
இரு நாளும்  உன் வரவு தவறவில்லை ,
வந்தும், கிறுக்கன் இவன் கிறுக்கல்களுக்கு
பதில் ஏனோ தரவில்லை ?
உன் நினைவு குதிரைகளின் தடம் காணாமல்
என் கற்பனைகுதிரைகள் முடம் ஆனதரிவாயோ?

அடுத்த தலைப்பு - கற்பனைகுதிரைகள்

Offline Global Angel

என் கற்பனை குதிரைகள்
தடம் பதிக்க
தாங்கள் கற்பனை வித்தாம்
தலைப்பை தரவில்லையே ....
இருநாட்கள் நானும் வலம்வந்து
இறுதியில் ஒன்றை
இயல்பாய் களம் பதித்தேன்


களம் பதித்தேன்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வரி திரித்தும் ,மெய் வழிமறித்தும்
என் குணம் கரித்தும், பொய் குழி பறித்தும்
என் மனம் எரிதிட்டனர் சில கருங்காலிகள்
அக்கருங்காலிகளின் கடும் சொற்களால்
ரணம் ஆன என் மனம் தன்னை
குணம் ஆக்கிட அனுதினமும்
கவி இறகினால் மனம் வருடும் 
வரிகள்பதித்து மனம் திருடும்   
மன திருடியே ! என் அருந்தோழியே !
உன் மனம் திருடி ,தினம் வருடிட
தரமிருந்தும் திறம் இல்லாததால்
உன் வரி வருடி தளம் தனில்
களம் பதிதேன், கவிகுலமே !
குளிர் கவி குளமே!

அடுத்த தலைப்பு - கவிகுலமே

Offline Global Angel

கவி குலமே என்று விளித்து
கவிபாடும் உங்கள் அளவு திறமை
எனக்கில்லை தோழரே ...
இருந்தும் உங்கள்
கவிமழையின் முன்
நான் ஒரு சாரல்


சாரல்  
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கவிமழை நான் என்றும்
 வெறும் சாரல் நீ என்றும்
 உளறும் உளறலை
ஊக்குவிக்கபோவதில்லை  நான் .
உன் உளறல்படி நான் கவிமழை என்றால்
மழையின் அழகும் ஆளுமையும்  குறிபிட்ட  காலமே
என்பதை ஒப்புகொள்வாயா சாரலே?
சாரலின் அழகை நான் சொல்லவேண்டியில்லை
சாரலின் ஆளுமை நான் அறிந்தவரை சொல்கிறேன்
இனிமையும் ,குளிர்மையும் , அழகையும்
அள்ளி தருவதே சாரல் .,உதாரணம் வேண்டுமா ?
கவி சாரல்.தேன் சாரல் .மழை சாரல்.
இன்பச்சாரல் ,முத்துசாரல் ,மழலை வாய் வடியும் உமிழ் சாரல்
இப்படி சாரலின் ஆளுமையை எண்ணிலடக்க முடியுமா?

அடுத்த தலைப்பு - முடியுமா?

Offline Global Angel

முடியவில்லை
சாரலின் புகழ் கேட்டு
சத்தமாகவே சிரித்து விட்டேன்
உங்களுடன் போட்டியா...?
கவி காளமேகம் நீங்கள்
முடியுமா என்னால்
முன்னால் நிற்க ...?


போட்டியா
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
போட்டியா ?
பூவோடு, நார் (நான்)  போட்டியா?
தேனோடு கஷாயம் போட்டியா ?
கடலோடு குட்டை போட்டியா?
பட்டுபுடவையோடு கிழிந்த சட்டை போட்டியா?
காளமேகம் நான் என்றாய் , நீல  மேகம் நீ .
ஒன்றில் மட்டும் உன் கருத்தில் உடன்படுகின்றேன்
முடியுமா என்னால்
முன்னால் நிற்க ...?
முடியவே முடியாது ,
கண்ணாடி முன்னாடி நீ நின்றால்
உள்ளிருக்கும் பாதரசமே
தயாராய் இறக்கும்
உன் பாதம் தொட
முன்னிருந்து நகரவேண்டாம் என்று !

அடுத்த தலைப்பு - நகரவேண்டாம்

Offline Global Angel

அயஹோ நகர வேண்டாம்
நான் ஒன்று சொல்லவேண்டும்
நான் ஒன்றும் அழகியல்ல
பாதரசமும் பாதம் பணிய
சாதரணமான ரோஜா
அன்று பூத்து
அடுத்த நாளே வாடும்
அன்றலர்ந்த பூதான்.


அன்றலர்ந்த
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அன்றலர்ந்த பூவா ?
நன்று மலர்ந்த பூ நீ !
அழகை முகத்தில் , தேகத்தில் பாராமல்
அகத்தில் பார்ப்பவன் நான்
ஆகையால்  தான் என்னவோ இப்படி
என்னை பொறுத்தவரை அழகு
காணும் கண்ணோட்டத்தில் உள்ளது .
" காக்கைக்கும் தன் குஞ்சு ,பொன் குஞ்சு "

அடுத்த தலைப்பு - கண்ணோட்டம்

Offline Global Angel

ஒவ்வொரு தடவையும்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நீ எனக்கு புதிராகவே உள்ளாய் ...
காரணம் ஏனோ ..?
உன் மேல் தப்பா
இல்லை என் கண்ணோட்டத்தில் தவறா ...?


தவறு