வழிபார்த்து ,விழிபூத்து,
எதிர்பார்த்து ,மனம்வேர்த்து காத்திருந்தேன்
நினைவு குதிரை மீதேறி, என் கனவுராணி
உன் கவிதை ஊர்வலம் காண்பதற்கே.
தளம் எங்கும் இடம்பிடித்த
உன் தடம் கண்டுணர்ந்தேன்
இரு நாளும் உன் வரவு தவறவில்லை ,
வந்தும், கிறுக்கன் இவன் கிறுக்கல்களுக்கு
பதில் ஏனோ தரவில்லை ?
உன் நினைவு குதிரைகளின் தடம் காணாமல்
என் கற்பனைகுதிரைகள் முடம் ஆனதரிவாயோ?
அடுத்த தலைப்பு - கற்பனைகுதிரைகள்