ஆசையின் ஆசையை , பசுவின் அசை போல
ஆசையே, லேசாய் பேச ,அதே ஆசையை
ஆசை ஆசையாய் நல் ஓசையோடே
கவி இசைபாடும் கவி குயில் பேடே
" இசைபாடும் " இத்தலைப்பை கண்ட மறுகணமே
பதில் போட தயாரானது என் சிறு கவி மனமே
இருந்தும் வேண்டுமென்றே தான் தாமதித்தேன்
காரணம் தேடி குழம்ப வேண்டாம் தேன் குழம்பே !
"இசை" பாடும் என்று என்னிடம் இருந்து பதிவுவந்தால்
ஐயகோ !
ஆசைக்கும், இசைக்கும் ஏதோ விசை உண்டென்று
திக்கு திசை தெரியாமல் பசை போட்டு ஒட்டி
வசைபாடும் உயர் கயவர் கூட்டம் ஒன்று உண்டு
வெறும் வாயையே மெல்லும் வரம் வாங்கி வந்த தவில் வாயற்கு
அசைபோட தேன் அவிலை தருவானேன் ?
அடுத்த தலைப்பு - தருவானேன்