Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 464542 times)

Offline Global Angel

கை நழுவி போனபின்
கை கூடுமோ கூடாதோ
ஆராய்ச்சி செய்வதில் அர்த்தமில்லை
அமைதியை காப்பதில் தப்பும் இல்லை
கை நழுவி போனபின்
கை கூடவில்லை என்பதில்
கண்களில் நீர்தொல்லை ..


தொல்லை
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஐயகோ !
இது என்ன கொடுமை ?
கைகூடியதா?
கைகூடவில்லையா ?
கை நழுவிப்போனதா?
நான் இந்த தீர்மானத்தையே கொண்டுவரவில்லையே ?
அதற்குள் தீர்மானமே செய்துவிட்டாயா  தூவானமே !
கட்டம் கட்டி , வட்டம் இட்டிட திட்டம் தீட்டியதில்லை   
இருந்தும் இட்டுக்கட்டி,வெட்டி வெட்டி
கண்களில்  எதற்கு நீர்தொல்லை ?
ஒன்றுமே புரியவில்லை !

   அடுத்த தலைப்பு - புரியவில்லை

Offline Global Angel

புரிதல் என்பது முழுமையானால்
தோல்விக்கே  இடமில்லை
உன்னை எனக்கு புரியவில்லை
இருந்தும் என் அன்புக்கு
தோல்வியில்லை ...



தோல்வியில்லை 
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வெற்றி, தோல்வி பெற்றிட அன்பு ஒன்றும்
போட்டியோ தேர்வோ இல்லை
அது ஒரு அற்புதமான உணர்வு
உணர்வின் வெளிப்பாடு
அன்புக்கு தோல்வி இல்லை என்கிறாய்
தோல்வி மட்டுமில்லை தோழியே !
 அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்லை

அடுத்த தலைப்பு - அன்பு

Offline Global Angel

அன்புக்கு அடைக்கும் தாள் இல்லைதான்
இருந்திருந்தால்
இத்துணை வலியும் இருந்திருக்காதே ..


வலி
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வலி
எனக்கு   வலியின் மீது உடன்பாடில்லை
சில காலம் முன்புவரை
"வாழ்கை வலி நிறைந்தது "
 வாழ்க்கைபயணத்தில் திக்கற்றவர் திக்குமுக்காடி
தன் அனுபவத்தை திணிக்க முனைந்து
புனைந்த தத்துவம் இது .
என்னை கேட்டால் " வாழ்கை வழி நிறைந்தது "
வாழ்கை பயணம்" நம்பிக்கை "எனும்  சீரான சரியான
பாதையில் இருக்கும்வரை
 திக்கும் உண்டு திசையும் உண்டு  .

அடுத்த தலைப்பு -  நம்பிக்கை

Offline Global Angel

வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்
ஒரு நாள் ....
இல்லை ஒரு நிமிடமாவது
உன் சுவாசத்தை  சுவாசிப்பேன்
என்ற நம்பிக்கையில்


சுவாசம்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சுவாசம் தனிப்பட்ட ஒன்று  என்றாலும்
 சுவாசிக்கபடும் காற்றோ பொதுவான ஒன்று 
ஒருவர் சுவாசத்தை மற்றவர் சுவாசிப்பது
சாத்தியமே ஆகையால் , நானும்
வாழ்கின்றேன் ஒரு நாள் இல்லை
 ஒரு நிமிடமாவது உன் இதயத்தில்
வசிப்பேன் என்ற நம்பிக்கையில் .

அடுத்த தலைப்பு - வசம்
« Last Edit: December 24, 2011, 05:47:45 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னிடம் என் இதயம்
என் வசம் நீ..
நான் நானாக வேண்டும்
என்னை வந்து நீ காணும் நாள்
எப்போது??
உன் வசம் நான் ஆவது எப்போது
எப்போது


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இனியவளே !
உனக்கு வரன் ஆகும் வாய்ப்பு
கிட்டாவிட்டாலும் உன் இதயத்திற்கு
அரண் ஆகும் பாக்கியம் போதும் .
எப்போது என் அன்பின்  ,
ஆசையின்  அரவணைப்பு போதாது
என் தோன்றுதோ அன்றே சொல்
உன் இதயத்தை உன்னிடமே
ஒப்படைத்து உயிர் பிரிந்து செல்கிறேன்
உன் இதயம் பிரியும் துயர் தாளாது !

அடுத்த தலைப்பு - துயர்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
துயரில் நெஞ்சம்
கண்ணீரில் நனைய
வலியோடு
விடை பெறும்நாள்
விரைவில்

விரைவில்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

விரைவில் எனை
விரல் மீட்டிவிடு
இலையேல் ..
விரகத்தில் நான்
வித்தாகி போய்விடுவேன் ...



விரகம் 
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

என் கவித்திறனால் நான் ஈட்டிய பெரும் சொத்தே !
நீ வித்தாவதில் எனக்கு உடன்பாடுதான் முத்தே !
இருந்தும், விரகம் ஒரு வகை நரகம் ஆயிற்றே
கவலைகொள்ளதே ! இதோ உனை மீட்டி
விரக நரகத்தில் இருந்து மீட்டிடதான்
வீற்றிருக்கிறேன் வீணையே !

அடுத்த் தலைப்பு - வீணையே

Offline Global Angel

என்றும் என் இனியவனே
என்றும்    உனக்காக
நான் ....
இசை பாடும் வீணையே


இசைபாடும்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஆசையின் ஆசையை , பசுவின் அசை போல
ஆசையே, லேசாய் பேச ,அதே ஆசையை
ஆசை ஆசையாய் நல் ஓசையோடே
கவி இசைபாடும் கவி குயில் பேடே
" இசைபாடும் " இத்தலைப்பை கண்ட மறுகணமே
பதில் போட தயாரானது என் சிறு கவி மனமே
இருந்தும் வேண்டுமென்றே தான் தாமதித்தேன்
காரணம் தேடி குழம்ப வேண்டாம் தேன் குழம்பே !
"இசை" பாடும் என்று என்னிடம் இருந்து பதிவுவந்தால்
ஐயகோ !
ஆசைக்கும், இசைக்கும் ஏதோ விசை உண்டென்று 
திக்கு திசை தெரியாமல் பசை போட்டு ஒட்டி
வசைபாடும் உயர் கயவர் கூட்டம் ஒன்று உண்டு
வெறும் வாயையே மெல்லும் வரம் வாங்கி வந்த தவில் வாயற்கு
அசைபோட தேன் அவிலை தருவானேன் ?

அடுத்த தலைப்பு - தருவானேன்