Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528340 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நான் முகர்ந்து போனதாய்
 பொய் குற்றம்சாட்டும் ரோசாவே
வான்சுமந்த வெண்ணிலவை
 மேகம் விட்டுப்போனதாய்
குற்றச்சாட்டு ஏதும் கேள்விப்பட்டதுண்டா ?
தேன்சுமந்த மலர் காத்திருக்கலாம் ,இருந்தும்
தேன்சுமந்த பூக்களோடு ஒப்பிடப்படும் பூவா நீ
அல்லி மல்லி முல்லை என  மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
தேன் திருடவந்த வண்டெனவா என்னை எண்ணிவிடாய் ?
உன் வலிதிருடி ,மனம் வருடி ,கொண்டாடவைக்க
திண்டாடி நிற்கும் வண்டடி நான் வாசமலரே !
சொல்லடி,கிண்டலடி,கேலியடி , மட்டும் இல்லை
குண்டடியே பட்டாலும் உன்வரவை வரவேற்கும் வண்டடி நான் ஆசைமலரே !

   அடுத்த தலைப்பு - ஆசைமலர்

Offline RemO

இசையை தேடி அலைந்த
"ஆசை"நெஞ்சம்
வண்டாக உருமாறி
மலர் தேடி அலைவதன் மர்மமென்ன??
இசைக்கு அர்பணித்த பாடல்கள்
இனி மலருக்கு ரீங்காரமாகுமோ??
ஏன் இந்த மாற்றம்??
இசை மௌனமானதாலா ??
இல்லை
மயக்கிய மலரின் மணமா?
இல்லை பூவின் மனமா??
அழகில் மயங்கி ரோஜா மலரை
ஆசைமலர் ஆக்க ஆசை கொண்டதோ ??

அடுத்த தலைப்பு :
மௌனம்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கலைகண்ணோடு பார்க்கவேண்டிய  வரிகளை
கொலை கண்களோடு  பார்த்துவிட்டு
தலை கால் புரியாமல்  தலையில் செருப்பையும்
காலில் பூவையும் சுற்றிக்கொண்டு
தானும் குழம்பி மற்றவரையும் குழப்ப
முயற்சிக்கும்  குழப்பத்தின் தலை பிறப்பே!
எதையும் தெளிவாய் புரிந்துகொள்ளாமல்
தலையாரிதனம் தேவையா தனவானே !
மௌனமாய் இருப்பதால் நிலவை வெறுத்ததாய்
வரலாறை கண்டதுண்டா ? இல்லை எப்படியும் வாடி
சருகாகி மருகததான் போகிறதென தெரிந்து ரோசாவை 
ரசிக்காமல் போனதாய் ரகசியம் தான் உண்டா?
காணும் கண்ணோட்டத்தில் உண்டு      கவிதையின் அழகும்
கவிதை படைக்கும் கவிஞனின் மனதும் !

அடுத்த தலைப்பு  - கவிஞனின் மனம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இரு கவிகளின் சர்ச்சையில்
கருகி போனது ரோஜாவின் கெளரவம்...
சொல்லாமல் சொல்லி விட்டார்கள் ..
கருகி போய்விடும் என்று ...
 கவிஞனின் மனம்...
அதில் ரோஜாவுக்கு  கருகும் அந்தஸ்த்தை கொடுத்த
ஆண்டவன்  குற்றவாளியே ...


குற்றவாளியே 
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஏதும் அறியாமல்
எண்ணுவதை புரியாமல்
ஏதேதோ பேசி
எல்லோரும் குழம்பி
ஏன் இந்த சர்ச்சை??
ஒரு நாளில் பூத்து கருகும்
பூவாக இருப்பினும்
சூடாத பூவையர் உண்டோ??
முற்களை கீரிடமாக கொண்டவள் நீ
உனக்கு ஏன் கௌரவ பிரச்சனை
கருகி போகும் மலர் எல்லாம்
துவண்டு போனால்
மலரை கொடுத்து மயக்கும்
மன்னவர்களின் நிலை அந்தோ பரிதாபம்
 


சூடாத பூவை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பூவை சூடாத பூவையரும் உண்டே
பிறந்தது தொட்டு
பூவை சூடிய பெண்ணும்
புகுந்தகம் போய்
கணவனை இழந்து
கைம் பெண் ஆனால்
பூவை சூடாத பூவை தானே .



பெண்
                    

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
நெற்றி கண் திறப்பினும்  குற்றம் குற்றமே 
என்று சொல்லிய கவிங்கனை பற்றி கேள்விபட்டுளேன்
ஆனால் இன்றுதான் ஒரு ரோஜா சொல்லி பார்கிறேன்..!!
அன்று கவிகன் சொன்னதில் தவறேதும் இல்லை
இன்று இந்த ரோஜா சொல்வதில் தவறென்ன என்பதை யாமறியேன்..
வால் சண்டை,குத்து சண்டை,சொல் சண்டை என கண்டு இருக்கிறேன் நான்..
இருபாலர் ஒருபாவயர்க்காக  கவிதை சண்டை போடுவதை கண்டு வியக்கிறேன்..!
காரணம் ஏதும் தெரியாமல்..
முள்ளின் மேல் சேலை விழுந்தாலும் சேலையின் மேல் முள் விழுந்தாலும்
கிழிவது என்னமோ சேலை தான் ..
இது சேலைக்கு மட்டும் அல்ல ரோஜாவிற்கும் பொருந்தும் கவிஞரே..
செடியில் இருந்து  பறிக்கும் ரோஜா கருகும் 
தோட்டங்கள் சேர்ந்து செடியோடு  அளிக்கும் ரோஜா கருகுமோ.. !
சிரிக்கும் ரோஜாவை பறிக்க நினைக்கும் அனைவரும் குற்றவாளியே

நினைக்கும்
« Last Edit: November 28, 2011, 08:21:05 PM by Global Angel »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

அந்தோ புது கவியே
ரோஜாக்கு சண்டை இல்லை
கற்பனையில்தான் சண்டை
எல்லாம் நாம் நினைக்கும்    நினைவுகள்தான்
நிங்கள்  வேறு அல்லவா ...?
கவிங்கர்களுக்கு அழகே
கவிச்சமர்தானே ..


கவிச்சமர்
                    

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
ரோஜாவே புது கவிகன் என்பதால் தான் புரியாமல் நின்றேன்
இருந்தும் புது கவிஞனின் கவித்துவம் எப்படி ..?
தங்களின் கவி சமர்தியர்திற்கு என்னுடைய கவியும்
கவிச்சமர் செய்கின்றதா..!
புதுகவிங்கன் நான் தவறேதும் இருந்தால் மன்னியும்..

புதுகவிங்கன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புதுமைகள் படைப்பதுதான்
கவிங்கனுக்கு அழகு
புதிதாக இணைந்திருக்கும்
உங்கள் கவிதைகளின்
படைப்பும் புதுமையானவையே ...
என் கவிதைக்கு உன் கவி ஒன்றும்
சளைத்ததில்லை புதுக் கவிஞ்சனே ...


சளைத்ததில்லை
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வரிவரியாய்  உனக்கு வரிசமைத்து பதிவு செய்தேன்,
இருந்தும் ஒரு முறையும் சரிவர என் வரிகளை
சரியாக புரிந்துகொள்ளாமலே விரிவாக
 அதுவும் விரைவாக பதில் வரையும் பனிமலரே
காஷ்மீரின்  தனிமலரே !
" எப்படியும் வாடி
சருகாகி மருகததான் போகிறதென தெரிந்து ரோசாவை 
ரசிக்காமல் போனதாய் ரகசியம் தான் உண்டா"
வரிகள் புரியாமல்தான் பதில்களை  வாரி சொறிகிறாயா ?
இல்லை புரிந்தும் புரியமாலே எரிகிறாயா?
 இருக்கட்டும் இப்போது சங்கதிக்கு வருவோம்,
தனவான் ரெமோ அக்கறையோடு சக்கரையாய்
இனிக்க இனிக்க ஒரு விமரிசனம் வினவினாரே
அதை வழிமொழிய விழைந்தாயா?
அல்லது பிழைதிருத்த விழைந்தாயா?
 கவி வரைவதில் கவிஞ்சனாக  நான்
சளைத்தேனா சளைத்ததில்லையோ  தெரியவில்லை
 ஆனால் அறிந்தவரை தெரிந்தவரை
 குணத்தில் நான் சளைத்ததில்லை !

அடுத்த தலைப்பு - குணம்

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
மனம் கொண்ட மல்லிகை ஒரு நாள் வாழ்ந்து
பிறருக்கு மானும் தரும் பொழுது ..
மனிதனாய் குணம் கொண்டு நூறு வருடம்
வாழ பிறந்த நாம் ..
ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்..!

மனிதம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனிதன் வாழ்கின்றான்
மனிதம்தான் எங்கே வாழ்கிறது தெரியவில்லை ...


வாழ்கிறது
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நயம்பட உரைக்கும் ஒவ்வொரு கருத்துகளும்
 நியாயமே இல்லாமல் கவனிக்கபடாத பொழுதும்  ,
நம்பிக்கையின் நரம்பு நாளங்கள்,
 பதில்பெற மறுக்கப்பட்டு நறுக்கப்பட்ட  பொழுதும்
 மனமும் எண்ணமும் வாடினாலும்
,நம்பிக்கை இன்னும்
 உயிர்வாழ்கிறது

அடுத்த தலைப்பு - நம்பிக்கை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நம்பிக்கை மேல்
நம்பிக்கை வைக்க துணிவில்லை
நம்பியவர்கள்
நம்பிக்கை துரோகம் செய்து
நம்பிக்கை குறைய வைக்க
நம்பிக்கை கை நழுவி போக
நம்பிக்கையை இன்று கரம் பிடிக்க
நம்பிக்கையில்லை


கரம் பிடிக்க


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்