Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528261 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆசை அதிகமானால்
அவதிப்பட வேண்டுமாம்
அவதியின் வடிவில்
இன்று என் நண்பனை  பார்க்கிறேன் ..
ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதீர்
அவலங்களே மிஞ்சும் வலைத்தளங்களில் .


வலைத்தளம்
« Last Edit: November 25, 2011, 06:09:23 PM by Global Angel »
                    

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
வலைத்தளம் நவீன மாயஜால உலகம் ..!!
விரும்பியதை கண்முன்னே நிறுத்தும் இரண்டாம் கடவுள்
நம் அறிவை வளர்க்கும் நவீன சரஸ்வதி
நண்பணே உஷார் நீ எதை விரும்புகிரையோ அதை கொடுக்கும் பிரம்மன் இவன்
நல்ல வரத்தை மட்டும் கேல் நன்மையிலே முடியும்
மனிதன் படைத்த இந்த கடவுளை வைத்து அறிவை மட்டும் வளர்த்துகொள் அநாகரீகத்தை  அல்ல

அநாகரீகம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நாகரீகம் என்ற பெயரில்
கட்டவிக்கபட்ட அநாகரீகம் .
சமுதாய சீர்கேடாகி
சந்ததியை சீர் அளிக்க முன்னர்
சாட்டை அடி கொடுத்து
அதை சவக்குழியில் தள்ளுவோம் வாரீர்


சாட்டை
                    

Offline Rainbow

ஒவொரு வார்த்தைகளும்
சாட்டைகளானாலும்..
தானாக சிந்திக்கும் பக்குவம் இல்லையென்றால்
சமுதாயம் திருந்தாது ..


வார்த்தைகள்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன் வரத்தை சிறையில்
என் இருதயம்
சிக்கி தவிக்கும் போது
எங்கிருந்து
வார்த்தைகள் பிரசவிக்கும் ...


பிரசவிக்கும்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என்னவென்றே தெரியவில்லை
எண்ணம் என்னவென்றும் புரியவில்லை
வழக்கமாய் வாசம் வீசும் வாச மலர்மொட்டு
 ஏனோ வசை (திட்டு) வீசுது எனக்கு மட்டும் ?
என் வரிகளில் நேசம்தான் நிறைய நிறைத்து வைத்தேன் ,
பாசபூக்களை பறிச்சு வைத்தேன் ,
தூசு அளவும் வேசம் வெதைக்கலையே
இருந்தும் ஏனோ ஏசு ஏசு என ஏசுகிறது வாசமலர்?  .
ஆசை ,ஆசை ஆசையாய்  தானே ஆசைகளை சொன்னான்
ஓசை படாமல் ஆயிரம் ஆசைகள் தளம் முழுதும் தடம் பதிக்கும்பொழுது
அந்தோ பரிதாபம் ஆசையின் ஆசைக்கு மட்டும்
ஏன்  விசேச பூசைகளோடு தடைபோடுவதாய் அடம்பிடிக்குது வாசமலர் .
 ஒரு வேலை ரோசாவில் முள்  இருப்பது இயற்கைதான் என்பதாலோ ?
உண்மையாய் தன் தன்மைக்கும் மாறாக மென்மையாய்
 தன்மையாய் காயம்செய்தால்  ரசிக்க மனம் இல்லாவிட்டாலும்
 கள்ளி செடியின் முள்ளினையே அனுசரித்து தாங்குபவன் நான் .
அல்லி மல்லி முல்லை என  மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
ஆசை ஆசையாய் ரோசாவை ரசிக்கும்பொழுது
முள்ளின் சிராய்ப்புகளையும் பொருட்படுத்தாது
வரிகள் பிரசவிக்கும் கவிதை காதலன்  நான் .

அடுத்த தலைப்பு -  கவிதை காதலன்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சேற்றில் இருந்தாலும்
செந்தாமரை அழகுதான்
முற்களுக்கு நடுவே இருப்பதால்
ரோஜாவின் குணம் முள்ளோ என
கருதி வெறுக்கலாமா??

கவிதைக்கு காதலனோ
கவிதையின் காதலனோ
கவிதையை நேசித்து
கவிபடைப்பதில்
வல்லவனோ
கவிதை படைத்திடு தினமும்
உன் கவிதைக்காக
பல விழிகள் காத்துகிடகின்றது
இங்கே ;) ;) ;)




« Last Edit: November 26, 2011, 02:17:03 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
சேற்றில் இருந்தாலும்
செந்தாமரை அழகுதான்..
தலை சாயாமல் இருக்கும் வரை

முற்களுக்கு நடுவே இருப்பதால்
ரோஜாவின் குணம் முள்ளோ என
கருதி நான் வெறுக்கவில்லை..
காற்று பலமாக வீசி உன்னுடைய
முற்களே உனக்கு பாதகமாக அமையுமோ என்று
பயம்கொல்கிறேன்..

கவிதைக்கு காதலியே ..!
கவிதையின் காதலியே  ..!
நான் கவிபடைத்த கவிதையை
ரசிக்க வந்த அழகியே ..
என் கவிதைக்காக தினமும் பல
விழிகள் காத்துக்கிடந்தாலும் ..
உன் ஒரு விழி என் கவிதையை ரசித்தால்
என் கவிதை முழுமை பெரும் அல்லவே..
உனக்கேன் புரியவில்லை என் கவிதையை
ரசிக்கும் நீயே ஒரு கவிதை தான் என்று...!!
(இப்படிக்கு  கவிதை) ;) :)

குறிப்பு: கவிதையை கவிதையாய் மட்டும் பாருங்கள்
வீறு எந்த உள்நோக்கமும் இல்லை.ஸ்ருதி தலைப்பை விட்டு
செல்லாததால் பதில் கவிதை கொடுக்க வீண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன்.
அடுத்த தலைப்பு  கவிதை   
« Last Edit: November 26, 2011, 01:23:24 PM by spince »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கவிதை நான் எழுதியது இல்லை
என்னுள் காதல் தோன்றும்வரை
கவிதை தவிர வேறேதும் தோன்றவில்லை
கன்னி இவள் உண்மைக் கதை .


கதை
                    

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun
என் அம்மாவின் கதையால் நான் கற்றது பாசம்
என் தந்தையின் கதையால் நான் கற்றது விவேகம்
என் தாத்தாவின் கதையால் நான் கற்றது வீரம்..
இவை மூன்றும் செயலற்று போனது உன் முன்னே
மீண்டும் குழந்தையாகவே மாறி நின்றேன்
அனைத்தையும் மறந்து ..
என்னோடு காலம் முழுதும் வருவாயா..!
என் வாழ்கை துணையாக அல்ல என் வாழ்வின் அர்த்தமாக...

அர்த்தம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எப்போது வருவாய்
எப்போது உணர்வாய் 
என்றுதான் தருவாய்
உன்னை உன் இதயத்தை
அன்றுதான் என் வாழ்வும்
அர்த்தமாகும் ...


என்று தருவாய்
                    

Offline Rainbow

என்று தருவாய்
என் இதயத்தை ...
வேண்டாம் என்று மறுத்த பின்பும்
வீணாக ஏன் என் இதயம் உன்னிடம்
வீசிவிடு வெளியே ..


இதயம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
துடிக்கிறது  என் இதயம்
உன்னால் துண்டாக்க பட்டும்
என் இறுதி முடிவை நீ
பார்க்க வருவாய் என்ற எதிர் பார்ப்புடன் ..


துடிக்கிறது
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
துண்டாக்கப்பட்டு ரெண்டாக்கப்பட்ட  உன் இதையத்தை
ஒன்றோடு ஒன்றாக ஒன்றாக்கி - உள்
உண்டாக்கப்பட்ட வலியை மட்டும் ரெண்டாக்கி - மலர்
செண்டான உன் மனதின் வலி குறைக்க .
ரெண்டான வலியின் இரு பகுதியில்
ஒன்றான பெரும்பகுதியை தான்  கொண்டு -உன்னை
கொண்டாடவைக்க  துடிக்கிறது  ஓர் வண்டு ..எனினும்
செண்டான உன்னிடம் இருந்து திட்டு வாங்கவேண்டிருக்குமோ என
திண்டாட்டமும் வண்டிற்கு நிறைய  உண்டு.
 
    அடுத்த தலைப்பு - வண்டு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

வண்டாக நீ என்னை
முகர்ந்து போன பின்னும்
உன்னை கொண்டாடி மகிழ்றது
இந்த ரோஜா ...
ரோஜாக்கு தெரியாது ..
நீ வரமாட்டாய் என்று ..
அடுத்த மலர் ஒன்று
உனக்காய் தேன்சுமந்தபடி
காத்திருக்கும் ....


தேன்சுமந்து