பொதுவாய் தேவதையை தேடித்தான் தவம் இருப்பார்கள் ,
தேவதையின் தரிசனமோ, குரல் வரமோ பெறுவதற்கு ,
மாறுதலாய், என் மனதுக்கு ஆறுதலாய்
ஒரு தேவதை என்னை தேடியதை கேள்வி பட்டதும்
கேட்கும் கானம் எல்லாம் தேவகானமாய் ,
பருகும் பானம் எல்லாம் தேவபானமாய் ,
வசிக்கும் லோகம் கூட தேவலோகமாய் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை,
என் மனதை ஆளும் ஆளுமையே ,
என் தேவதையே !
அடுத்த தலைப்பு - ஆளுமை