Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 434024 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பொதுவாய் தேவதையை தேடித்தான் தவம் இருப்பார்கள் ,
தேவதையின்  தரிசனமோ, குரல் வரமோ பெறுவதற்கு ,
மாறுதலாய், என் மனதுக்கு ஆறுதலாய்
ஒரு தேவதை என்னை தேடியதை கேள்வி பட்டதும்
கேட்கும் கானம் எல்லாம் தேவகானமாய் ,
பருகும் பானம் எல்லாம் தேவபானமாய் ,
 வசிக்கும் லோகம் கூட தேவலோகமாய் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை,
என் மனதை ஆளும் ஆளுமையே ,
என் தேவதையே !

     அடுத்த தலைப்பு - ஆளுமை

Offline spince

உன் ஆளுமையே என்னை அவலத்தில் ஆழ்த்துகிறது ..
வளர் பிறையாய் இருந்த என்னை தேய் பிறையாய் மாற்றுகிறது ..

தேய் பிறை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தேய்பிறையாய் இருக்கும்
என் மனம் உன்னை கண்டதும்
முழு நிலவாய் மாறி
குளுமையில் நிறைய
சிறு கோபத்தை வெளிக்காட்டி
வெக்கத்தை மறைக்க முயல
என் முயற்சிக்கள் அனைத்தும்
தோல்வியில் முடிய
மௌனமாய் கடந்து போகிறேன்


மௌனமாய்




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

உன் மௌனத்தை  கலைக்க
வழி தெரியாத போது..
வலியோடு
மௌனமாய் நானும் ...


வழி
                    

Offline spince



நீ வரும் வழிஎல்லாம் பூக்களை தூவும் சாலையோர மரங்களுக்கு
என்ன தெரியும்...
நீ பூக்களை விட மென்மையானவள் என்று ..
உன் காலில் மிதி படும் பூக்களுக்கு மட்டுமே அது  தெரியும்
தன்னால் தினமும் என்னவளின் பாதம் காயம் கொள்கிறது என்று...

காயம்
« Last Edit: November 22, 2011, 06:41:37 PM by spince »

Offline RemO

உடல் பட்ட காயம் ஆற
மருந்துண்டு இவ்வுலகில்
ஆனால்
உன்னால் காயம் பட்ட இதயத்திற்கு
மருந்துண்டோ ??

அடுத்த தலைப்பு:

மருந்து

Offline spince

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது அது எப்படி..!?
உன்னால் என் இதையத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து உண்டா..
தினமும் எனக்குள்ளே எரிகிறேன் நான் ஊமை குலைந்தையாய் ..

குழந்தை
« Last Edit: November 22, 2011, 10:22:01 PM by spince »

Offline RemO

தாயாகி பல ஆண்டுகள்
ஆனாலும்
என்றும் குழந்தை தான் நீ
எனக்கு

அடுத்த தலைப்பு:

தாய்

Offline Global Angel

ஒவொரு துளி இரத்தத்தையும்
பாலாக ஊட்டியவள்
.

துளி
                    

Offline spince

அன்பிற்காக ஏங்கி இருந்த என் பாலைவன நெஞ்சில்
ஒரு துளி அன்பை விதைத்து பூஞ்சோலை ஆக்கியவள் நீ
என் பூஞ்சோலை மனதில் பூக்கும் அணைத்து பூக்களும் உனக்கே சமர்ப்பணம்
நீர் இன்றி அமையாது உலகு, நீ இன்றி முடியாது என் வாழ்வு


வாழ்வு


« Last Edit: November 22, 2011, 11:22:10 PM by spince »

Offline Global Angel

வாழ்வு வசப்படவில்லை
நீ இல்லாத பொழுதுகளில் ..


பொழுது
                    

Offline RemO

கனவுகள் பிறக்கும் இரவு
ஈசலை விட ஆயுள் குறைந்த
கனவைக் கொல்லும்
இனிய காலைப்பொழுது
மயங்கும் மாலைப்பொழுது
என முப்பொழுதும்
என் மூச்சுக்காற்றை
நீ

அடுத்த தலைப்பு:


கனவு



Offline Global Angel

என் கனவுகளில் நீ வருவாய்
கண்ணே என்பாய்
ஆனால் நான்
கண்ணா சொல்வதற்குள்
காணாமல் போய்விடுகின்றாய்
கனவில் கூட அவசரம் உனக்கு ...


காணமல்
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கவிதாயினி       கவி தாயி  நீ
என் தமிழார்வ சுடர் தூண்டும் 
விந்தை  கவிதை நீ
என் சித்தம் குளிரசெய்திடும்
சிந்தை சித்தம் நீ
மடி இருந்து இறங்கிவந்த
மொந்தை பால் சுத்தம் நீ
மடிநிரம்பா மங்கையின் மடியில் அழுதிடும்
குழந்தை சத்தம் நீ
இத்துனை கவிதை  உனக்காக சொன்னபோதும்
இன்று வரை இந்த குருடன் காணாமல்  தவம் இருக்கும்  கனவு நீ ...

அடுத்த தலைப்பு - குருடன்

Offline Global Angel

வெறும் கனவுகள் அல்ல வாழ்க்கை
இலட்சிய கனவுகள்தாம் வாழ்க்கை ..
என் இலட்சியம் கூட
கனவிலும் உன்னை காண்பதுதான்
ஆனால் கனவிலும் உன்னை
தேடுகின்றேன் ....
இன்றுவரை குருடாக ..
இப்பொது புரிகிறதா என் வாழ்க்கை ...?...?


வாழ்க்கை
« Last Edit: November 23, 2011, 04:22:10 PM by Global Angel »