ஓரிரு வரிகளிலே கவி சொல்லும் திரு நிலவே !
வரிகளின் வறுமையில் உயிர்வலிதான் தரு நிலவே !
மறு முறையேனும் வரி கூடும் என காத்திருப்பேன் ,
மறுபடியும் மறுபடியும் , ஓரிரு வரிகளே வரக்கண்டு வலி கூடும்,
இருந்தும் காத்திருப்பேன் .
புத்தியில், இவன் பித்தனோ என்று கூட எண்ணம் தோன்றலாம் ?
புத்தனும் என்னோடு பொறுமையில் போட்டி இட்டால் தோற்று போகலாம் ?
உன் வரவு இல்லாவிட்டால் வாடிபோவது நான் மட்டும் தான் என்றிருந்தேன் ,
சொன்னால் நம்பமாட்டாய் கவிதை தொகுப்பிலே வறட்சி...
யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சது அது உன் தனி புரட்சி ..
அடுத்த தலைப்பு - புரிதல்