Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 463996 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
ஏற்றுக் கொள்வேன் பெண்ணே,
என் மரணத் தருவாயிலும் கூட,
உன் பலகோடி வார்த்தைகள் கொண்ட
மௌனத்தை...

மௌனம் சம்மதம்!!!

என் மரணத்தறுவாய்


Offline Bommi

நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல,மரணத் தருவாயிலும்
 கூட ..பேசும் என் மனம்...



நினைத்து

Offline User

நினைத்து பார்த்து வருந்தாதே

         நம் நினைவுகளை என்றாய்!!!

மறக்க முடியாத நினைவுகளை

தந்தவள் நீ என்பதை நினைத்து பார்க்க

ஏன் மறுக்கிறாய்???



நினைவுகள்



« Last Edit: February 27, 2013, 05:51:05 PM by user »
:)

Offline Bommi

பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்
என் நினைவுகள் மறந்து விட்டதாகச்
சொல்கிறாய்! பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்?



உன் கண்ணில்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிர‌ம் கொட்டுத‌டி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ண‌ம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி

 கரம் பிடித்தேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
கோடியுகம் ஓடியும் பூமி காதலெனும்
கவின்மிகு அழகியை விடவில்லை,
மயங்காத ஆணுமில்லை பெண்ணுமில்லை,
மயக்கத்தில் நீயும் நானும் திளைத்து
அக்கினியை வலம் வந்து உன் கரம்
பிடித்தேன், உன்னை என் வாழ்வின்
துணையாய் வலம் வரத்தான் பூமியைப் போல!!!

கோடியுகம்

Offline Bommi

மெல்ல முடியா உணர்வுகள் கோடியுகமாய்
சொல்லதெரியா நிமிடங்களாய்
தேடி அலைகிறேன்
சொல்லமுடியா சோகங்கள் கோடியுகமாய்
தள்ளத் தெரியா நிமிடங்கள்
தேடி அலைகிறேன்



அலைகிறேன்

Offline Gotham

விழுதாய் மாறிய விதைகளின்
வேர்வரை சென்று பார்க்கிறேன்
விஷங்களோ விதம்விதமாய்
பதம் பார்த்திருக்க காண்கிறேன்
தேடிய இடமெல்லாம் நீலம்
பாரித்திருக்க நீலகண்டனைத்
தேடி அலைகிறேன்
பூவுலகில் ஆலகால் விஷமுண்டு
அமிர்தம் காண

-------------

விஷம்

Offline Bommi

இவ்உலகில் அனைத்தும் நேர்த்தியாய்
நிகழும்போது, உன் தனித்த
பார்வைமட்டும் ஏன் ? என்னை விஷம்
கொடுத்து ஊமையாக்கப்பார்க்கிறது ...


நேர்த்தியாய்

Offline Gotham

நேர்த்தியாய் என்ற சொல்லே
நேர்கோடாய் இல்லையே
நேர்த்தி என்பது காட்சிப்பிழையால்
நேர்வதே
நேர்த்திக்கடன் மிச்சமுண்டி
நேர்ந்த பிழைதீர்க்க
நேராகுமோ இந்த கேள்விக்குறியும்?

------------

காட்சிப்பிழை

Offline Bommi

நேர்ந்த பிழைதீர்க்க விடை
காண நேரமின்றி கடந்து
போகின்றன சில கேள்விகளும்
வெற்றிடம் நோக்கிய
பயணம் என்றாலும்
மறக்க வைக்கும்...சில பிழைகளை
காட்சிப் பிழையாக நீண்டு போகும்
வாழ்க்கை



வெற்றிடம்

Offline Gotham

ஆடி ஓடி களைத்து
அயராது திட்டமிட்டே
இயன்றன் போய் சேர
வெற்றியிடம்
ஆயின் யார் செய்த
வினையோ
சேர்ந்துவிட்டான்
வெற்றிடம்...

--------

ஓடி

Offline Bommi

ஆடி ஓடி களைத்து
கவிதை படிக்கும் போதே
மனசு கனக்கிறது.... ஓடி உதைத்து
விளையாடுகிறது !-தமிழ் .... மீண்டும் மீண்டும்
படித்து மகிழத்தக்க கவிதை ...என்றும்
தொடரனும்



மனசு கனக்கிறது

Offline Gotham

தேடித் தொலைத்தவன் நானோ
தொலைந்ததைத் தேடி மீண்டும்
வாழ்க்கைப்பயணத்திலே
வெறுமயான பாலைவனப் பரப்பிலே
கூடயாரும் துணையின்றி
கால்கள் தடுமாறி
கண்கள் சொருக கண்டேன்
பாலைவன சோலையை
இளைப்பாற என்றெண்ணி
கண்ணயர்ந்துவிட்டேன்
குளுமையான காற்றின்
அன்பிலும் பாசத்திலும்
விழித்துப்பார்க்கின்றேன்
விழுந்துக்கிடக்கின்றேன் சுடும்
வெண்மணற்பரப்பில்
சோலையெனக் கண்டது
வெறும் கானல்நீரோ யன்றி
சேர்ந்த பழங்கள் பையிலே
இருக்கின்றனவே
மாயமாய் போனதோ
சோலையும் என்னைவிட்டுவிட்டு
மனது கனக்கிறது
மீண்டும் தொடங்குகிறேன்
அகண்ட வெளியிலே எந்தன்
பயணத்தை..
அரிதாய் கிடைத்த பேரிச்சைப் பழங்களுடன்
பேர் இச்சைப் பழங்களை விட்டுவிட்டு..
சமயம் வாய்த்தால் சந்திப்போம். நன்றி!!!
------------
சமயம்

Offline Bommi

அகண்ட வெளியிலே உந்தன்
பயணத்தை தொடர்ந்தாலும்
சமயம் பார்த்து
பேசுவதாக.... எண்ணி
சமயோசிதமாக
கதைப்பதாக.... நினைத்து.....
மாயமாய் போக நினைத்து
வார்த்தைகளை விட்டு...
போகும்..... சிலரில்
நீயும் நானும்.....!!நம்
பாதைகளில்



மாயமாய்