Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 463786 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.

முன்னூறு நாள்
சுமந்ததால்
அவள் அன்னை!
அதற்கும் மேலாக
உன்னை சுமக்கிறேன்
என் மனதில் - நான்
யார் உனக்கு?
மாயமாய் பொன்னாலே

யார் உனக்கு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

யார் உனக்கு
நான் யார் உனக்கு
நல்லது சொல்லும் தோழியா
நாணம் கொள்ளும் சரி பாதியா
பிற ரத்தம் என்றாலும்
பிரியாமல் இருக்கும் சகோதரியா
யார் உனக்கு ?
நான் யார் உனக்கு ?


நாணம்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நாணம் உன்னைக் கண்டதாலே
வானம் மெல்ல நகருதே..
எந்தன் பக்கம் வருகுதே..
காய்ந்த பூவும் மணக்குதே..
எல்லா செயலும் பிடிக்குதே..
உன்னை நானேக் கண்டதாலே..!

கண்டதாலே.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline NiMiSHa

முன்பு மரணத்தை கண்டு அஞ்சினேன் ...
தற்பொழுது...
 உன்னை கண்டதாலே...
 அந்நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
என் மரணம்கூட உன் மடியினில் என்பதால் ..!!

மரணம்...
« Last Edit: March 21, 2013, 10:28:17 AM by NiMiSHa »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நான் சுவாசிக்கும் மூச்சு காற்று
இந்த நொடியே என்னை விட்டு
சென்றாலும் - என் உயிர் மட்டும்
என்னோடு தான் உள்ளது!
நீ என்னை விட்டு செல்லும்
தூரம் மலர்கள் சூடிய என் மரணம்
பாதையை காட்டுகிறது!


சுவாசிக்கும் மூச்சு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

நீ சுவாசிக்கும் மூச்சு
உதிர்கின்ற பேச்சு
அனைத்துமே நானாக
அரும்பாகும் ஆசைகள்
கரும்பாகி இனிக்குமா
கருகித்தான் போகுமா


அரும்பாகும்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நாம் அருகருகிலில்லை - ஆனால்
உன் நினைவுகள் என்னருகில்..
உன் குரலிங்கு கேட்கவில்லை - ஆனால்
உன் வார்த்தைகளே என்னிதயத்துடிப்புகள்..
உன் முகம்பார்க்கவில்லை - ஆனால்
உன் முகமே பார்க்கும் ஒவ்வொரு முகங்களிலும்..
எப்பொழுதும் உன்னோடு
உன்னருகிலிருந்திடும் ஆசையில்லை..
உன்னோடிருந்த சிலமணித்துளிகள்
என்றும் என்னோடு.. அரும்பாகும்
உன்னோடிருக்கும் சிலமணித்துளிகளுக்கான
ஏக்கங்களோடு காத்துக்கிடக்கும் இந்தயிதயம்..




உன்னோடிருக்கும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

உன்னோடு இருக்கும்
ஒரு நிமிடத்துகாய்
பல மணித்துளிகளை
பாழாக்கிய ஒருத்தி
உன்னோடு வாழும்
ஒரு நிமிடத்துக்காய்
ஒரு ஜென்மம் என்ன
பல ஜென்மத்தையும்
பாழாக்க காத்திரிக்கிறாள்


ஒரு ஜென்மம்
                    

Offline User

'ஒரு ஜென்மம் போதாது' என
உன்னிடம் கூறியதில்லை....

அதனை
கூறும் நொடிகளைக்  கூட
காதலின் தருணங்களில்
வீணாக்க விரும்பாததால்...


நொடி
« Last Edit: March 26, 2013, 09:34:21 PM by User »
:)

Offline ammu

கடந்த  நொடியை  விட  நாம் 
 இழந்த  செல்வம்  வேறில்லை 
திரைகடல்  ஒடி  தேட  நாம் 
  விழைந்த  சொர்க்கம் 
என்  ஐந்து  விரலிடையில் 
உன் விரல்  பூக்கும்  நொடியை  விட 
வேறில்லை  .
இல்லை 

Offline User

இல்லை என உன் இதழ்கள் கூற
ஆம் என உன் விரல்கள் ஊர
விடையறியாமல் விழி பிதுங்கி
வார்த்தையில்லாமல் மொழி பதுங்கி
வியர்த்து நிற்கிறேன் நான்...


மொழி
:)

Offline Global Angel

உன் கண் அசைவின்
மொழிகள் புரிந்த கணங்கள் பல
உன் உதட்டசைவின்
மொழிகள் புரியாத கணங்கள் சில
ஆனால்
உன் மௌன மொழி
புரியாத ரணங்கள் பல ...


ரணங்கள்
                    

Offline User

உந்தன் மெல்லிடை மேனி கண்டு
காம்பிலிருந்து தாவி குதித்து
தற்கொலை செய்யும் மலர்களின்
இறுதி கணங்கள்
ரணங்கள் இல்லா மரணங்கள்


மெல்லிடை
:)

Offline Global Angel

மெல்லிடை மேனி தழுவி
கை இடை நாணிக் கோணி
சொல்லது தாளம் போடும்
கள் வலி காதல் கொள்ளும்
அக்கணம் வாராதோ
எக்கணமும் ஏங்குகின்றேன்


ஏங்குகின்றேன்
                    

Offline User

 உந்தன் மடி சாய ஏங்குகின்றேன்
 உந்தன் விழி மேய ஏங்குகின்றேன்
 உனக்காக  முள்ளிலே தூங்குகின்றேன்
 ஏக்கம் தூக்கம் யாதுமாய் நீயடி
 மோகம் தீர்க்கும் மாதுவாய் நீயடி


விழி
:)