Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 486925 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
" என்  உயிருக்கு  உயிரானவளே  !
உனக்காக   உயிரையே  உயில் எழுதிவிட்டேன் ..
வெறும்  , இதயமாள   முனைவதேன்   ??
முழுதாய்  முழுழுதாய்  உயிரையே
உனக்காக  அடிமைப்பத்திரமாய்    கொடுத்தபிறகும்

யோசனை  என்ன  ??
ஒரு  வேளை  , இயற்கையிலே  இரக்கமானவள்  நீ  என்பதாலா  ??

அடுத்த  தலைப்பு

இரக்கமானவள்

« Last Edit: October 13, 2012, 09:50:05 PM by aasaiajiith »

Offline Global Angel

இரக்கமானவள்
இதை சொல்லியே
என்னை கிறக்கம் ஆக்கியவன்
இன்று உறக்கம் கொள்வதேனோ
உறைந்திருக்கும் அன்பும்
உதயம் கொள்வதெப்போ



உதயம்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அந்த உதயம்
திராவிடத்தோடு துவங்கியது
மண்டியிருக்கும்
மையிருட்டின்
அடர்த்தி குலைத்தொரு
விடியலுக்கு உண்டாக்குமென‌
நம்பிக்கை இருந்தது

ஹிந்தி எதிர்ப்பை
ஹிருதயம் முழுக்க‌
குருதியாய் பாயவிட்டு
குடைந்தாழ‌த்தில் விதைத்த‌து
ஆங்கில‌ ஆல‌ம‌ர‌த்தை

அழிந்த‌து ஹிந்தி ம‌ட்டும‌ன்று
த‌மிழும் தான்
த‌மிழ‌னும் தான்

அந்த‌ உத‌ய‌ம்
அந்திம‌ சூரிய‌னோடு
உதித்துவிட்ட‌து

அடுத்த‌ த‌லைப்பு

உண்டிய‌ல்

அன்புடன் ஆதி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உதயத்தைக்காண   மேற்கு  நோக்கி

மேலே   பார்த்தவனாய்  அமர்ந்திருக்க

மேலும்கீழும்   பார்த்து ,  "ஐயோ  பாவம் " என 

நீட்டாத உணடியலில் காட்டாத  பரிவினை காணிக்கையாய்

போட்டபடி  செல்கின்றார் ,எனை  கடப்பவர்கள்

உண்மையறியா  பித்தர்களை  போல ,பாவம்  !!

என்  இதயத்தை  கொள்ளைகொண்ட ,இச்சைக்குரியவள்

ஆசையின்  வாசமலராம்  ஆசைக்குரியவள்

மேற்க்கிலே  முகாமிட்டிருக்கும்  விவரம்  அறியாமலே  .......

அடுத்த  தலைப்பு

வாசமலர் ...

Offline supernatural

கண்ணாடிக்குள் காகித  மலராய் தான்
நான் இருந்தேன் காலகாலமாய்
என்னோடு காதலாக நீ வந்து சேர , நான்
வாசமலராக ஆன சேதி அறிவாயா ?
என் சுவாசம் நீ என்பதை அறிவாயா ?

சுவாசம்
.
« Last Edit: October 15, 2012, 06:25:49 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel


உன் வாசம்
என் சுவாசம்
உன் வேஷம்
ஏனிந்த மோசம்
தாசானாய் ஆவதை நீ
சரிதிரம்போல் சொனாலும்
தரித்திரமாய் நம்ப
முட்டாள் அல்ல ...
இன்று இவள் வேறு


சரிதிரம்


« Last Edit: October 15, 2012, 07:09:17 PM by Global Angel »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்னவனே
சரித்திரம் சொல்லும்
காதலாக மாறாவிடினும்
உணமைகாதல் எனும் முத்திரை
பதிக்க-முடிவில்லா காதலில்
முழுவதுமாய் வாழ
வசந்தமாக வந்துவிடு


முத்திரை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நல்லவனென்றும்
கெட்டவனென்றும்
வந்து சேர்கின்ற‌
முத்திரைகள்

முகத்திரை பல‌ கொண்டே
பழகிவிட்ட வாழ்வில்
எளிதாக அடையாளம்
காணவியலவில்லை
எந்தெந்த முகத்திரைக்கு
எந்தெந்த முத்திரையென‌

அடுத்த தலைப்பு

கண‌ம்
அன்புடன் ஆதி

Offline Global Angel

கணம்
அது கனமாக தெரிகிறது
நீ இல்லாத பொழுதுகளில்
மனம்
அது மரணித்தும்  துடிக்கிறது
மறக்காத உன் நினைவுகளில்


துடிக்கிறது
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நீ யற்ற தருணத்திலும்
நீ யுள்ள தருணத்திலும்
ஒரே மாதிரியே
துடிக்கிறது
இதயம்

உன் இன்மையும்
இருத்தலும்
எந்த மாற்றத்தையும்
நிகழ்த்திவிடவில்லை என்னில்
கொஞ்சம் தனிமையை
கூட்டி குறைத்ததை தவிர‌

அடுத்த‌ த‌லைப்பு

இன்மை
அன்புடன் ஆதி

Offline Global Angel

என்  இன்மை
உன்னை வருத்தாது போகலாம்
உன் இன்மை
எனை நெகிள்தாது போகலாம்
நம் இன்மைகளின் ஆத்மாவில்
நரம்புகளில் மீட்டப்படும்
தனிமைகளின் ராக வேள்வியில்
விஞ்சி நிற்கும் சோகத்தின் முகாரிகள்
விளம்பி நிற்கும்
இன்மையின் இயலாமைகளை


ஆத்மா
« Last Edit: October 16, 2012, 06:11:25 PM by Global Angel »
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்

நான் வரைந்த‌
கவிதையின் ஆத்மா
காதலால் வழங்க‌ப்பட்டது

நான் சிரித்த‌
தருணங்களில் ஆத்மா
உன்னால் அருளப்பட்டது

நான் அழுத‌
கண்ணீரின் ஆத்மா
உன் பெயரால் எழுதப்பட்டது

அடுத்த தலைப்பு

ரகசிய சூரியன்
அன்புடன் ஆதி

Offline Global Angel

என் உள்ள இருளில்
உறைந்து போன உணர்வுகளை
ஒவொருகனமும் உருகவைத்த
ரகசிய சூரியன்  நீ



உணர்வு
                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
புணர்வென்ற ஏற்பாட்டையே எரித்துவிடுமடி
என் ஆசைமலரே , உன் உள்ள உணர்வினை
ஒவ்வொருமுறையும்  நீ வெளிபடுத்தும் போதும்
உனக்காக ஓர்  ஆட்கொணர்வு மனுவிட்டு
உன்னை கொண்டு வருவேன் ,நாடு கடத்தி ....

அடுத்த தலைப்பு ...

உனக்காக ..


Offline supernatural

உனக்காக் தான் கவிதை எழுதி
கவிதாயினியாய் கற்பனை கொண்டு
வ்வொரு வரியையும் பதிக்கின்றேன் .
நீ என்னடா என்றால் ,கள்ளிசெடிக்கெல்லாம்
கவிவரியினை  பதிக்கின்றாய்

தலைப்பு
கவிவரி
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!