Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 529986 times)

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
கன்னியவளின் சுத்தமான இதயமதை

அன்பையும் , காதலையும் பகரமாய் கொண்டு

அடிமை சாசன பத்திரம்எழுதி  மிகபத்திரமாய் கொண்டவனே !

ஒரேவொருநாள் ,எனக்கு  உரிமைசாசனம் தருவாயா  ?

உன் அன்பிற்கும் காதலுக்கும் பகரமாக

என் உதிரம் கொண்டு  உனை அபிஷேகிக்க !!!!


வாடாமல்லி ..
« Last Edit: September 27, 2012, 11:33:59 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/


நீயாக கோர்ததுவோ ?
வேறெவரும் கொண்டு சேர்ததுவோ?
சரியாக தெரியவில்லை
மதுரை மல்லியினை வெளித்தெரிய
தலையினில் சூடியபடி
தலை சாய்ந்தமர்ந்திருக்கும்
வாடாமல்லி நீ ..

சோலை பூவினை சேலையில் பதிக்க
விரும்பாதது தான் காரணமோ ?
வெற்று சேலையினில் வீற்றுக்கின்றாய்
காஞ்சி பட்டு சேலை நீ ....

வேற்றார் எல்லாம் போற்றும்படி
வரிபதிக்கும் திறன் இல்லை எனினும்
தூற்றாரும் தூற்றாதப்படி
வரிபதிக்கும் சிறு திறன் உண்டு எனில்

உள்ளீடாய் பலவரிகள் பதிக்க நினைந்தும்
வெறும் , வெளிக்கோடாய்
சில வரிகள் பதிக்கின்றேன் ....

அடுத்த தலைப்பு :
உனக்கே உனக்காக .....
« Last Edit: September 27, 2012, 12:21:57 PM by aasaiajiith »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒவொரு தடவையும்
உனக்கே உனக்காய்
உக்காந்து எழுதுகின்றேன்
பிக்காலி நீ பீராய்ந்து பார்ப்பதை
எக்காலம் நான் பார்ப்பது
முக்காலம் உணர்ந்த முதல்வனே
முன்னால் வந்து சொல்லு
அவள் முகாந்திரம் வேண்டும் எனக்கு
செத்து மடிந்தாலும் அவள்
செருப்போடாவது வாழ்வு வேண்டும் ...



வாழ்வு வேண்டும்

                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
வில்லை விட்டு விரைந்த அம்பை போல,
விரைந்து சென்று விட்டாய் பெண்ணே,
உன்னுடன் வாழ்ந்த சில நாள் வாழ்க்கை,
வண்ணமயமான நாளாக ஜனனனமாகியது,
நீ இல்லாமல் ஒவ்வொரு நாளும் மரண
நொடிகளாக நகர்கிறது,
                            பெண்ணே!!!
                    வாழ்வு வேண்டும்!!!
நான் இறந்தாளவதுஅளிப்பாயா உன்னோடு
வாழ்ந்த சில நாள் வாழ்க்கையை!!!

 

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
நின் நினைவால் , நினைவோடு
நிறைந்த ஒரு  வாழ்கையை
வரமாய் வாங்கி வாழத்தான்
தவமாய் தவமிருக்கின்றேன்
வரம் தருவாயா ?
தர வருவாயா ??

நின் நினைவால் ...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நின் நினைவால் ......

அழுவதும் கூட ஆண்மைக்கு அழகல்ல
என்பதை ஆணித்தரமாய் ஆதரிப்பவன்
இதுநாள்வரை முகப்பூச்சும் பூசாத கன்னங்களில்
வெட்கத்தை  அப்பிக்கொல்கிறேன் ,உன்னதமானவளே !
உள்ளுக்குள் உன்னை நினைக்கும் பொழுதெலாம் !

அதெப்படி?
உனக்கு மட்டும் சாத்தியம் ??
கையெழுத்து, குரல் ,கனவு,நினைவு என
ஒவ்வொன்றும் அச்சுஅசல் உனையே நகல் எடுத்ததுபோல்
அழகாய் , மிக அழகாய் ....

கண்திருஷ்டி   மீது கடுகளவும் உடன்படாதவன்
கனகாலமாய், என் கவிதைகளுக்கு கவின்கூட்டிட
உனை பற்றி, எக்கச்சக்கமாய் வரி வரைந்துவிட்டேன்
என் வரிபடிப்போரின் பாராட்டினால், இதோ
இன்று நானும் , என் கரிக்கோலும் கடும் கண்திரிஷ்டியில்
எதற்கும் சுற்றிபோட்டுக்கொள் முன்னெச்சரிக்கையாய்..



மிக அழகாய் ........
« Last Edit: October 03, 2012, 10:47:44 PM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் இதழோர புன்னகையும்
விழியோர கண்ணீரையும்
சில நேர நாணத்தையும்
மிக அழகாய் புரிந்தவனே
என் முன் புரியாமல் நடிக்கும்
வித்தையை கற்று தருவாயா
உன்னை போல் நானும் மாற


புரியாமல்



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

துவக்கத்தில்  அணுஅணுவாய்  என்னுள்
கற்பனையாய்    உள்நுழைந்து

கவிதையாய்   என்  மனம்  நிறைந்திருப்பவளும்

இன்று  ஒர்.. ( கவிதை ) அணுமின்  நிலையத்தையே

என்னுள்  நிர்வகிப்பவளே    நீயென

புரியாமல்  எதேதோ  புலம்புகின்றாய்

புரிந்துவிட்டால்  உடனடியாய்  தடையிடுவாயோ  ??

என்   கிறுக்கல் கவிதைகளுக்கு  ....

அடுத்த  தலைப்பு

தடையிடுவாயா ??
« Last Edit: October 12, 2012, 05:00:03 PM by aasaiajiith »

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
என்னவன் என் மெய்தீண்டி  காதல் மழையில்...
உள்ளுயிரை மறுமுறை  நனைக்க  நினைக்கையில் ...
நாணமே உன் குடைக்கு தடையிடுவாயா...

காதல் மழையில்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline ME IDIOT

நிமிடங்கள் nagarthi vazhvatharkkum
ninaithu ninaithu saavatharkum
kadavualal padaikka patta arputha pokkisham "ninaivu"

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
உயிர்துடிப்பு  நின்று..
உதிரம் உறைந்து...
உடலைவிட்டு உயிர் ..
முற்றிலுமாய் பிரியும் ...
அந்த நிமிடம் கூட ..மனம் எதிர்பார்க்கும் ..
நீ வருவாய் என ...

உயிர்த்துடிப்பு
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் இதயத்தில் ,
ஓர் இடம்பெயர்ந்தவளாய்(அகதி ) 
இடம்பிடித்த , இனியவளே !

இனிக்கும் நினைவுகளை  நிதம் இறைத்து
இன்று ,உயிர்த்துடிப்பாய் இனம்மாறி
இதயத்தில் குடியுரிமை பெற்று
நிரந்தரமாய் குடியேரிவிட்டாய் .....

இனியவளே !
நீ என்ன , அமெரிக்காவிடம்
பாடம் கற்ற மாணவியோ ??

அடுத்த தலைப்பு

குடியுரிமை


Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
ஒளி உடைந்து...
எழு வண்ணங்களாய்  ..
உருவெடுக்கும்  வானவில் அதில் ...
குடியுரிமை பெற்று குடியேறி ...
வண்ணங்கள் சூழ வண்ணமயமாய் ...
வாழவேண்டும் ...

வானவில்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வானவில்லின் வண்ணத்தினில் மனமயங்கி
வானவில்லாய் மாறிட  வரம் கோரிடும்
வண்ண நிலவே !

மேகமாய் நானிருக்க , அதில் படர்ந்திருக்கும்
நீலமாய், கருமையாய்  நிறம்மாறும்
வரம் கோரினால் , பகலும் , இரவும்
பிரியாமல் இருப்போமே !

அடுத்த தலைப்பு

மேகமாய்

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
வானமாய் நீ இருக்க..
அதில் சூழும் மேகமாய்
உன்னையும் உன் இதயத்தையும் ..
முழுமுழுதாய் சூழ்ந்து ..
ஆட்கொண்டு...
இதயம் ஆளும் மகாராணியாய்..
ஆட்சிசெய்ய வேண்டும் ..
என்றும் என்றென்றும்...

இதயம் ஆளும்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!