நின் நினைவால் ......
அழுவதும் கூட ஆண்மைக்கு அழகல்ல
என்பதை ஆணித்தரமாய் ஆதரிப்பவன்
இதுநாள்வரை முகப்பூச்சும் பூசாத கன்னங்களில்
வெட்கத்தை அப்பிக்கொல்கிறேன் ,உன்னதமானவளே !
உள்ளுக்குள் உன்னை நினைக்கும் பொழுதெலாம் !
அதெப்படி?
உனக்கு மட்டும் சாத்தியம் ??
கையெழுத்து, குரல் ,கனவு,நினைவு என
ஒவ்வொன்றும் அச்சுஅசல் உனையே நகல் எடுத்ததுபோல்
அழகாய் , மிக அழகாய் ....
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்படாதவன்
கனகாலமாய், என் கவிதைகளுக்கு கவின்கூட்டிட
உனை பற்றி, எக்கச்சக்கமாய் வரி வரைந்துவிட்டேன்
என் வரிபடிப்போரின் பாராட்டினால், இதோ
இன்று நானும் , என் கரிக்கோலும் கடும் கண்திரிஷ்டியில்
எதற்கும் சுற்றிபோட்டுக்கொள் முன்னெச்சரிக்கையாய்..
மிக அழகாய் ........