மலர்வாணியே !
மகராணியே !
மலர்மாடம் விட்டு, மெல்ல மெல்ல
மயில்போல நீ இறங்க
மலர் பாதமது நொந்திடுமோ ?
மண்ணில்பட்டு, என துடிதுடித்து
மலரினமே கொத்துகொத்தாய்
மயங்கி, உன் காலடியில் மொத்தமாய் விழ
மலரினத்தின் சேவைகண்டு ,பொன்மனமயங்கி உன்
மலர்பாதங்களால், மலர்களை முத்தமிட
மலர் பாத முத்தமதை, பெற்ற மறுகணமே
மலரினம் அத்தனையும், மோட்சமடைந்ததை அறிவாயோ ??
அடுத்த தலைப்பு
மலர் பாதம்