Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 484643 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

மலர்வாணியே !
மகராணியே !
மலர்மாடம் விட்டு,  மெல்ல மெல்ல
மயில்போல நீ இறங்க
மலர் பாதமது  நொந்திடுமோ ?
மண்ணில்பட்டு, என  துடிதுடித்து
மலரினமே  கொத்துகொத்தாய்
மயங்கி,  உன் காலடியில் மொத்தமாய் விழ
மலரினத்தின் சேவைகண்டு ,பொன்மனமயங்கி  உன்
மலர்பாதங்களால், மலர்களை முத்தமிட
மலர் பாத முத்தமதை,  பெற்ற மறுகணமே
மலரினம் அத்தனையும், மோட்சமடைந்ததை  அறிவாயோ ??

அடுத்த தலைப்பு
மலர் பாதம்


Offline Global Angel

மலர் பாதம் கண்டு
மணி மெட்டி கொண்டு
காமனுக்கு அழைப்புவிடும்
காலம் ஒன்று வாராதோ ..


காலம்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காலத்தின் கோலம்
கன்னியவள் வாழ்விழக்க
சுயநல சமுதாயமோ
கைம்பெண் என ஒதுக்கிவைத்து
வாழ்வை பறித்து
இளமை தூக்கிலிட்டு
உயிரோடு புதையும் நிலை
பாவியவள் நிலை அது மாறாதோ
பூவை அவள் வாழ்வது மலராதோ


தூக்கிலிட்டு


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
தூக்கிலிட்டு
தூக்கிட்டு
தொண்டை நெரிந்து
செத்தவனின் பிதுங்கிய கண்களில் இருந்து
வழிகின்றன உண்மைகள்
வெளி தள்ளியிருக்கும்
அவன் நாக்கில் சிவப்பாய் உறைந்திருக்கும்
பல் கடித்த காயங்களில்
காயாமல் இருக்கின்றன கடைசியாய்
அவன் பேச விரும்பிய வார்த்தைகள்/
அவன் பேச நினைத்த உண்மைகள்

பெரும்பாலான தூக்களுக்கு
பின் புலத்தில்
ஒரு பேனாவும்
ஒரு கயிறும் உடனிருந்திருக்கின்றன‌

வாழ்வின் கடைசி கணத்தில்
தொண்டை நொறுங்கையில்
ஒரு தலையறுந்த சேவலின்
கடைசி கூவலுக்கான வாய்ப்பையும்
வழங்குவதில்லை தூக்கு

சினிமாவின்
தற்கொலை காட்சிகள் போன்றோ
தண்டனை காட்சிகள் போன்றோ
சட்டென முடிந்துவிடுவதில்லை அது
தொங்கவும் முடியாமல்
இறங்கவும் முடியாமல்
அந்த அவஸ்தை
குரூர கணங்களாலானவை

தகர்க்க முடியாத‌
சுவர்களின் பின்புறத்தில் நிகழும்
தூக்கு கயிற்று மரணங்கள்
மனசிதையுற்ற கடவுளின் கைகளால்
எழுதப்படுபவவை


அடுத்த தலைப்பு

சினிமா
« Last Edit: September 13, 2012, 05:13:41 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

நிழல் உலகு
கற்பனையின் சுவர்க்கவாசல்
காலனின் பாசக்கயிறு
மின்மினிகளாய் உதிரும்
கோடி நட்சத்திரங்கள்
குப்பைகள் ஆகின்றன இங்கு
சினிமா ... சீரளியாதேம்மா


சுவர்க்கவாசல்
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நான் உயிர் துறந்து இம்மண்ணில் மாண்டாலும்
மலர் தூவி உனை வரவேற்க்க திறந்து வைத்துள்ளேன்
சொர்க்கத்தில், சொர்க்க வாசலை என் இதய வாசலாய்!!!

அடுத்த தலைப்பு
"இதயவாசல்"

Offline Global Angel

இதய வாசல் தனில்
குடி இருக்கும் பக்தை நான்
நீ இரங்காது போனாலும்
என் இதயம் என்றும் உனக்கேதான்
என்றோ ஒருநாள் கதவுகள் திறக்கும்
என் இதயம் தனுக்கு அமைதிகள் பிறகும்
 


அமைதி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உன்னை பற்றியே
வியந்து வியந்து யோசிக்கிறேன்
உன்னை யோசிக்க துவங்கினாலே
வந்து நிரம்பிவிடுகிறது
நிச்சலனம்

உன் சூன்யத்தின் நிலத்தில்
சூன்யமாய் மாறி
தவளையல்ல‌
பெரும்யானை குதித்தாலும்
சலனிக்காத குளமாய் மாற‌
மெனக்கெடுகிறேன்

காதலியின் மென்பார்வை போல‌
விழுந்தது ஒரு இறகு
மிக மகிழும் காதலனுள்ளமாய்
பெருமதிர்வுற்று
அமைதி இழந்தது குளம்

நீ மட்டும் அப்படியே அமைதியாய்

அடுத்த தலைப்பு :

இறகு
அன்புடன் ஆதி

Offline Global Angel

உதிரும் இறகுகள்
உன் நினைவுகள் கொண்டு
வருடி செல்வதால்தான்
வாழ்கின்றேன் அன்பே
இழப்பு இறகேன்றாலும்
வரவு உன் நினைவு என்பதில் கோடி  சுகம்


கோடி  சுகம்
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நித்தமும் தொடரும் நினைவுகள்
எங்கோ ஒரு மூலையில்
பின்னாளின்  சந்தோஷத்திற்காக
இந்நாளில் என்னை பிரிந்து
தீராத சோகத்தை பரிசாக தந்து
இளமையை கொன்று பணம் தேடி
காலம் சென்று வாழ்வது வாழ்வோ?
என்னவனே வந்து விடு...
வறுமையை கொன்று
இனிமை காணும் வாழ்வினை
வாழ்ந்து பார்ப்போம்...
கோடி சுகம் காண்போம் இணைந்திருந்து...
கோடியில் சோகம் இல்லை
கூடி வாழலாம் வா...


இளமை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

என் இளமையின்
கனவுகள் அனைத்தையும்
இரக்கம் இல்லாது ஆள்பவனே
உந்தன் இளமை நான் ஆள்வது எப்போது


இரக்கம்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அஞ்சி தவிக்கும் நாய்
சாலை கடக்க‌
வழிவிட்டு வேகம் குறைக்கும்
வாகனங்களை காண்கையிலெல்லாம்
மனம் நம்புகிறது
இரக்கம் இன்னும் வாழ்கிறதென‌

அடுத்த தலைப்பு :

சாலை
அன்புடன் ஆதி

Offline Global Angel

சாலை ஓரத்து
பிச்சை காரர்களை பார்க்கும் போது
மனதும் ஏங்குகின்றது
பிச்சை என்பது என்று மரணத்தை சந்திக்கும் என்று



பிச்சை
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எந்த கைகளால்
'கை'யிற்கு ஓட்டோமே
அதே கைகளை
இனி நீட்ட தயாராகி கொள்ளுங்கள்
நாளை முதல்
நாம் பிச்சைக்காரர்களாகும்
திட்டாங்கள் பல‌
பாராளுமன்றம்
ஊரார கேட்க நினைவேற்று

சர்க்கரை கூடி
தலைசுற்றல் வந்தது போய்
சர்க்கரை விலை கூடி
தலைசுற்றும் காலம் வந்துவிட்டது

நானிய அக‌ங்பாவ‌ம் கொண்ட‌
மத்திய அரசு
மானிய‌ங்களை
பிச்சையென்று நினைத்துவிட்டது

ஒவ்வொரு சலுகையாய்
இனி கொய்யப்படும்
ஒவ்வொரு சக கட்சிகளாலும்
இனி அறிக்கைக‌ள் பெய்ய‌ப்ப‌டும்

அண்ணாட‌ங்காசிக்களுக்கெல்லாம்
அண்ணாட‌ங் காட்சிக்கு வ‌ரும்
அர‌சிய‌ற் பொய்முக‌ங்க‌ள்

க‌ண்ணேங்க‌ இனி ச‌ர்க்க‌ரை
பார்க்க‌ போகும் ச‌கோத‌ர‌ரே
தேநீரில் இனி க‌ச‌ப்பை
ப‌ழ‌கி கொள்ளுங்க‌ள்
தேர்த‌லில் அதே க‌ச‌ப்பை
அவ‌ர்க‌ளுக்கு ப‌ந்தி வைப்போம்

பி.கு : டெல்லியில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரேசன் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்படுகிறது, அதனை கண்டித்து எழுதியது

அடுத்த தலைப்பு :

தேர்தல்
அன்புடன் ஆதி

Offline Global Angel

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை
நயவஞ்சகங்களின் சீட்டு கட்டு
வென்றவன்   வேந்தாகின்றான்
விழுந்தவன் நீயாகின்றாய்
உன்னை களவாட
நீ அளிக்கும் உரிமை சாசனம் -தேர்தல்



உரிமை சாசனம்