எந்த தருணத்தில்
எங்கிருந்து
எவ்வாறு விழுந்தது அறிகிலேன்
அது துகளா
துளியா
பொறியா
வெளியா
காற்றா
அறிகிலேன்
அது உருவம்
அருவம் யாதும் அறிகிலேன்
அது ஆத்திகமா
நாத்திகமா தெரியாது
அது நல் நம்பிக்கையா
மூட நம்பிக்கையா தெரியாது
அறிவேன் ஒன்று
அது உன்மீதான் என் தீரா காதல்
அடுத்த தலைப்பு
கால்சுவடு