Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 480845 times)

Offline Global Angel

உன்னை தேடி  நகரும்
கால்களுக்கு அறிவி
உன் பாதைகள்
எனக்கு சொந்தமில்லை என்று...
அப்பொழுதும் என் கால்கள்
உன் பாதை தேடி பயணமாகிகொண்டே இருக்கும்


சொந்தமில்லை
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சொந்தமில்லை என்று தெரிந்தும்
உன்னை நேசிக்கிறேன்
சொந்தமாக நீ வராவிடினும்
என் சொந்தமாய்
எனக்கே சொந்தமாய் நீ... :-[ :-[


எனக்கே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

எனக்கே உரித்தான   ...
உன் மனதில் என்றும் ..
உனக்கே உரியதாய் நான்..
நமக்கே  நமக்கென
சொந்தமாய்  நம்  மனம் ...
சொந்தங்களையும் .... பந்தங்களையும் ....
தாண்டிய தெய்வீக  பந்தம் ......

தெய்வீக பந்தம்


« Last Edit: May 23, 2012, 07:16:27 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பிரிவின் மீது அவ்வளவாய்
பரிவு இருந்ததில்லை
உன் பிரிவையே அவ்வளவாய்
நான் அறிந்திருந்ததில்லை என்பதாலோ ?
பொதுவாய், பேசுவது என்பது
பொதுவான ஒன்று தான் ,நமக்கோ
பேசுவதென்பது மிக பெரிதான ஒன்று
அறிந்தவரை இரு நாட்களுக்கு மேல்
பேசாது இருந்ததில்லை , இருந்தும்
இரு நாட்களுக்கு மேல் பேசாமல் ஒரு
நொடியும் இருக்கமுடியாதென ,உன்
மனமார நீ சொன்னதும் , உள்ளே
கர்வபடாமல் இருந்திட முடியவில்லை
இது என்ன தெய்வீக  பந்தமோ ????.

அடுத்த தலைப்பு
பரிவு இருந்ததில்லை

Offline Global Angel

என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..


நினைவு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நேசிக்கும் இதயத்தை
துடிக்க வைத்து
மறக்க நினைத்தாய் ...

நானும் மறக்கக் நினைத்தேன்
இன்னும் முயன்று கொண்டே
என் நாட்கள் நகர
உன்னை  பற்றிய என் நினைவின்
நாட்கள் ஒரு பக்கம்
தானாக அதிகமாகி
அளவில்லாமல்
நீண்டு கொண்டே போகிறது

அளவில்லாமல்





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
எத்தனை வேலை இருந்தாலும்
கவலை மறந்திட
இதயங்களை இனைத்திடும்
இனையத்திற்கு ஓடோடி வந்திடுவேன்...!
இனையத்தில் பாசமாக நேசிக்கும்
அன்பு சொந்தங்கள் மீது
அளவில்லாமல் கொண்ட அன்பினால்...
ஆணால் இப்பொழுதோ
பாசமாய் நேசித்த
 அன்பு சொந்தங்களே
விலகி நிற்பதை கண்டு
இனையத்திற்கு
வரவே யோசிக்கிறேன்...!

அடுத்த தலைப்பு அன்பினால்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

அன்பினால் கட்டுண்டால்
அகத்தினில் தெளிவிருக்கும்
அடுத்தவர்கள் பேச்சினில்
இதயம் கலங்காது
இணையத்திற்கு
இடைவிடாது நீங்கள் வரவேண்டும்
இடர் படாது இதயங்களுடன் இணையவேண்டும்


இணையவேண்டும்
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அன்பினால் கட்டுண்டதால்
இடர்கள் பல வந்தாலும்
அன்பு இதயங்களுடன்
இணையவேண்டும் என்ற காரணத்திற்காக
இடையிடையே வந்திடுவேன்.....!
இடைஇடையே வந்தும்
இடைவிடாது வந்தும்
அன்பு சொந்தத்திடம் இருந்து
வாய் வார்த்தைக்கூட
வரவில்லை என்பதில்தான் வருத்தம் ....?

அடுத்த தலைப்பு  வருத்தம்

 

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

வருத்தம் வேண்டாம்
வருவது வரும்
வாழ்கையின் தத்துவம்
வஞ்சியும் வருவாள்
உங்கள் அன்பினை தேடி



தத்துவம்
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
வஞ்சியிடம் இருந்து வரும் 
வார்த்தை அன்பாய் வேண்டாம்
வஞ்சிக்கும் வார்த்தையாய் கூட
வருவது வரட்டும் என
வந்து வந்து போகிறேன்......
வஞ்சி அவள் ஓர பார்வை மட்டும்
வீசிவிட்டு  ஒதுங்கி செல்வதால்
வஞ்சிக்கபட்டவன் ஆகிவிட்டேனா என
அஞ்சி ஒடுங்கி போகிறேன்.....!
வஞ்சிக்கபட்டவன்  ஆன பிறகு
வஞ்சிக்கபட்டவனுக்கு 
வாழ்க்கை தான் ஏது..?
வாழ்கையின் தத்துவம்தான்  ஏது..? 

அடுத்த தலைப்பு   வரவேற்ப்பு
« Last Edit: May 28, 2012, 08:09:05 AM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
காதலெனும் பூந்தோட்டத்தில்
பூந்தோட்டத்தின் பூச்செடியில் பூக்கும் மலராய்
அடுத்த காதலின் ஜனனம் - அதை
நாம் ஆவலுடன் "வரவேற்ப்போம்"


அடுத்த தலைப்பு "ஜனனம்"

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.

பாராமல் இருந்து
என்னை மரிக்க செய்துவிடாதே
உன் பார்வையால்
ஒவ்வொரு கணமும்
ஜனனம் தருகிறாய் நீ...
பார்வையின் ஊடலோடு
பாவியின் காதல்
வாழட்டுமே


ஒவ்வொரு கணமும்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline supernatural

மரித்த காதலுக்கு ..
ஜனனம் இல்லை....
உன்னதமான...
உயர்வான ...
உண்மையான காதல் ..
மரிப்பது  இல்லை..
ஒவ்வொரு  கணமும்...
புத்துணர்வுடனும் ...புது உணர்வுடனும்..
 முதிர்ந்து... வளமாய்  வளரும்...

மரிப்பது இல்லை



http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

உன்னதமானவளே  !!
உன்னிடம்  ஒரு  சிறு  கோரிக்கை  !!!
உதவுவாயா  ???    உண்மையில்   பூக்களின்  தீரா  காதலன்  நான்
உதகைக்கு  ஒருமுறை  சென்றால்
உன்னால்  முடிந்தவரை  அங்கிருக்கும்  பூக்களை
உன்  கவின்  மூக்கினால்  முகர்ந்து  விடு ....!
உன்னால்  முகரபட்ட  பூக்கள்  ஒரு  பொழுதும்  மரிப்பதும்  இல்லை ... உதிர்வதும் இல்லையாமே  ???

அடுத்த  தலைப்பு

கவின்  மூக்கு