Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 481798 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சாய்ந்திட  தோள்களும்,
ஆசுவாசபடுத்திகொள்ள மடியும் ,
கேசம் கோதிட  விரலும்,
கன்னம் நனைத்திட முத்தமும்,
உன் பெயரையே உச்சரிக்கும் உதடும்,
உன் கனவெல்லாம் நனவாக்கிடும்
உன் மன்னவன்  வருவான்
மொத்த அன்பையும் முத்தமாய் தருவான்
சஞ்சலம் கொள்ளாதே சலனமின்றி காத்திரு
காதலனுக்காக என்பதை விட உண்மை
காதலுக்காக  காத்திருப்பதில் எத்தனை சுகம் ......!

அடுத்த தலைப்பு சஞ்சலம்
« Last Edit: June 15, 2012, 08:48:43 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Tamil NenjaN

மெல்லிய ஒரு காலைப்பொழுது
மெல்லிசையாய் உன்குரல்
திக்குத் தெரியாத திகைப்பில்
மனதில் அப்பிக் கொண்டது சஞ்சலம்

மனம்மாறி நீதான் வந்தாயாவென
துள்ளி வந்தேன் இல்லம் கடந்து..
தள்ளிப்போனது நீயல்லவென்று அறிந்து
எள்ளி நகையாடிய மனது
ஏமாந்தவனாய் என்னை நானே 
சபித்தேன்

முன்னொரு காலம்
காலைச்சுற்றிவரும் குட்டிப் பூனையாய்
உன்னருகே நானிருப்பேன்
அந்த அருகாமை
வாழ்வின் ஆனந்தமாய்
நானுனர்ந்த நாட்களது.

நீ இல்லாத வாழ்வில்
நானிளைப்பாற நிழல் இல்லை
என்றானேன்
எனக்குள்ளொரு பூவாய் மலர
நீயுமிசைந்தாய்
என்ன தவம் செய்திட்டேனென
எண்ணிக் களித்திட்டேன் நான்

இதயங்கள் முடிச்சிட்டு
புதிய உலகின் உதயமொன்றை
நாமெட்டி நின்றபோது
எட்டவிலகிப் போனாய் நீ..
காதலைத் தொடரத்தான் வேண்டுமாவென
மடலாய் வினாத் தொடுக்கிறாய் நீ..

மனது காயப்பட்ட
மெளனமான நிமிடங்களவை..
என்னிலை நீயறியாய்
தன்னகத்தே வேதனையில்
விம்மியழுதாலும்
உன்னகத்தே அதைச்சொல்லேன்
உன் மனது வேதனைப்பட
சம்மதமில்லையெனக்கு

நலமாய் வளமாய் நீ வாழ
காதல் உறவைத் கத்தரித்துக் கொண்டதாய்
உனைநாடி வந்தது என் பதில்

துடிக்கின்ற இதயத்தின் வேதனையும்
அழுகின்ற விழிகளின் செந்நீரும்
தனிமையில் வாடுமெனக்கு
எந்நாளும் சொந்தமடி

இருண்டுவிட்ட இந்த நெஞ்சில்
இனியொரு விளக்கேற்ற யாரிருப்பர்?
சஞ்சலம் கொண்ட மனதுக்கு
ஆறுதல் யாரளிப்பார்?


அடுத்த தலைப்பு
நாளைய பொழுதின் நம்பிக்கைகள்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

நெஞ்சில்  நாள்தோறும்  நீங்காத உன் நினைவுகள்
நினைக்கும் பொழுதுகளில் நிலைக்கும் இனிமைகள்
இனிமைக்கு மேல் இனிமையை தினிக்கும் சிரிப்பு
சிரிப்பின் முதல்,இடை,கடை என எங்கேனும் ஓரிடம்
வெளிப்பட்டே தீரும் சிறுசிறு முக்கல்,முனகல் 
முனகலினையே முழுங்கிவிடும் மெல்லிய மூச்சுகாற்று
மூச்சுகாற்றிர்க்கும் அர்த்தம் அறிய செய்யும் ஆத்மார்த்தம்
இப்படி அடுக்கிகொண்டே போகலாம் .
உன்னால் நான் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத
நாளைய பொழுதின் நம்பிக்கைகள்



அடுத்த தலைப்பு
ஆத்மார்த்தம்


Offline supernatural

உலகம் மறந்து...
மனம் மறந்து...
அனைத்தும் மறந்த...
அந்த சில தருணங்களை  கடந்து....
மனம் திரும்பும் பொழுதுகளில் ...
மனதில் வந்த நினைவுகளில்...
முதன்மை நினைவு....
ஆத்மார்த்தமான  உன் நேசம் மட்டுமே...

முதன்மை நினைவு
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Tamil NenjaN

முதுமையிலும் ஒரு நினைவு
மனதில் அழுந்தப் பதிந்திருக்கும்
என் முதன்மை நினைவாய்
உன் முகம் பதிந்த இதயம்
அன்றைக்கும் மாறாதிருக்கும்

வெள்ளைக் காகிதமாய்
என் இதயம் காத்தேன்
கொள்ளை அழகில் நீ
எனைத் தொல்லை செய்தாய்
இதயமதில் வந்து
இரண்டறக் கலந்தாய்

முப்பொழுதும் உன் நினைவாய்
மூழ்கிப் போனேன் நான்
அனுதினமும் விடியல்களில்
முதன்மையாய் உன் நினைவு

அழியாத நினைவுகளை
என்னிடமே விட்டு
விலகியே சென்றாய் நீ...
வலிகள் மட்டுமே
என் வாழ்க்கை என்றானதே

துயிலும் இல்லை
ஆனால் கனவில் வருவாய்
ஊணும் இல்லை
ஆனால் பசியுமறியேன்...
விநோதங்கள் எனக்கு மட்டுமே


முதன்மை நினைவுகளாய்
நீவந்தாய்- இனி
முழுமைக்கும் நீயே
நினைவாய் இருப்பாய்
உயிரின் அசைவும்
உடலின் துடிப்பும்
அடங்கும் வரையும்
அழியாத நினைவாய்
மனதில் இருப்பாய்



அடுத்த தலைப்பு

தோற்பதற்கு அல்ல வாழ்க்கை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தோல்வியால் பலமுறை
கீழே விழுந்தாலும்
நம்பிக்கையின் கரம் பிடித்து
எழுந்து வருவேன்..
தோற்பதற்கு  அல்ல வாழ்க்கை
தோல்விகள் பல கண்ட போதும்
என்றாவது ஒரு நாள்
தோற்று வந்த பாதையை
திரும்பி பார்ப்பேன்
வெற்றி என்ற வாகை சூடி

வாகை சூடி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Tamil NenjaN

தோல்விகள் நமக்கு
தடைக்கல் இல்லை
வாழ்வில்-புரிந்து கொண்டால்
படிக்கற்கள் அவைதான்
நம் வாழ்வில்

நாளாந்த சூரியோதயம்
நமக்கானது
வெற்றியும் தோல்வியும்
நம் கைகளில் உள்ளது.

நாட்கள் நமக்காக
காத்திருக்கிறது
வாழ்வும் நமக்காக
வாய்த்திருக்கிறது

வாகைசூடத்தான்
வழி நமக்கு
தெரியவில்லை

இலக்குகள் இல்லை
நம்வாழ்வில்
மாற்றங்களை
எதிர்கொள்ளும்
திராணியும் இல்லை
ஏற்றங்களுக்காய்


வெற்றியின் போதை
தோல்வியின் துவளல்
எல்லாமே ஒன்றென்றால்
தன்னாலே வரும்
மனதிலோர் பக்குவம்

தோல்விகளை வெற்றிகளாக
தடைக்கற்களை படிக்கல்லாக
மாற்றிடத் தெரிந்தால்
வெற்றியின் வாகைசூட
வழியே அதுதான்.


அடுத்த தலைப்பு
அதிகாலைப் பொழுது

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பூக்களின்மீதும் ,செடிகளின்மீதும், பட்டும்
படாமலும் படர்ந்திருக்கும் பனித்துளிகள் .

தூசோ ,மாசோ கலவாத பரிசுத்தமான பசுமை
நிறைந்த அரும் நறும் சில்லெனும் சிறுங்காற்று

விட்டு விட்டு மொட்டு விட்டிருந்த மொட்டு
மலர்கள் வெட்கம் விட்டு மொட்டவிழும் எழில்..

ஆதவன் தன் எழுச்சியினை பறைசாற்றும் பொருட்டு
விரைவாய், இருந்தும் குறைவாய் அனுப்பும் ஒளி கீற்றுகள்

போர்வைக்கு அடியில் கிடக்கும் நம்மை எழுப்பி
விடியலின் மடியினில் இட்டிட முனையும் சேவலின் கூவல்

அழகாய் மிகஅழகாய் அள்ள அள்ள குறையாத அழகின்
அட்சயா பாத்திரமாய் அழகு அதிகாலை பொழுது

அத்தனை  அழகையும் அணைத்திருக்கும் அதிகாலைபொழுதை
கூட அலட்சியபடுத்தி, அடுத்துதான் ஆராதிகின்றேன்

ஆதிமுதல் அடிபாதம் வரை அன்றி, ஆழ்மனதில் முழுதாய்
ஆழ்ந்திருக்கும் உன் அழகு, நினைவு கடலில் மூழ்கி ....

அடுத்த தலைப்பு

பின்தொடர்வதாய்
« Last Edit: June 10, 2012, 06:36:13 PM by aasaiajiith »

Offline supernatural

அதிகாலை பொழுதில்..
பனி காற்று வீச...
வியர்க்க ஓடிய உடலும் ..
புத்துணர்ச்சியுடன் மனமும் ..
இருக்க...அனிச்சையாய் ...
மனதில் ஒரு உணர்வு ...
நீயும் ...உன் உணர்வும்...
என்னை பின்தொடர்வதாய் ....

பின்தொடர்வதாய்..


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Tamil NenjaN

பின்தொடர்வதாய்

எனக்குள் ஒரு பிரமை
ஆதரவுக்கரம் நீட்டவும்
ஆறுதல் வார்த்தை பேசவும்
யாருமில்லா உலகில்
உன் நினைவுகள் மட்டுமே
என்னைப் பின்தொடர்வதாய்

சேர்ந்திருந்து களித்திருக்க
நான் தேடிவந்த உறவு நீ
பிரிந்திருந்து தவித்திருக்க
விலகிப்போன துரோகியும் நீ

மனது வெறுமையாகி
வாழ்வும் வெறுத்துப் போனது
உன் நினைவுகள் மட்டும்
இன்னும் பின்தொடர்வதால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

வாழ்க்கைப் பயணத்திலெனக்கு
வழித்துணை யாருமில்லை
ஆறுதல் தந்து அரவணைத்திட
எந்தத் தோள்களும்
என்னருகே இல்லை
துன்பங்கள் பின்தொடர்ந்தாலும்
உன்நினைவுகள் மட்டும்
மாறாத வடுக்களாய் மனதில்

காலங்கள் தாண்டி
படர்ந்திருந்த என் சிந்தனைகள்
எதிர்காலம் நீயாகவே
என்கற்பனைகள்
எல்லாமே கலைந்துபோன
அதிர்ச்சியில்
இன்றைய பொழுதுகள்
மனம் முழுக்க வேதனைகள்

இருந்தும் பின்தொடரும்
உன்நினைவுகளின் துயரங்கள்
வாழ்வில் நான் நகர்ந்திட
துணையிருக்கும் உந்துதல்கள்

நலமாய் நீவாழும் சேதி
காதில் எட்டும்காலம்வரை
என்வாழ்வு தொடரும்
உன் நினைவுகள் தரும்
துயரங்கள் பின்தொடர
என் வாழ்க்கை கழியும்


அடுத்த தலைப்பு
இணைந்திருந்தால் வாழ்க்கை இனிக்கும்

Offline Mr.CuTe

nainthu eerunthal valkai inikum



avalidam serthen pala varudangal piragu.....

  aval ponal sila varudangal piragu.....

serthathu nijathil illai indrum en kanavil thaan....

avalodu inainthu irunthal indrum.. nan kanavil moolgi iruka maten... kalarai thookam..!!
« Last Edit: June 16, 2012, 03:16:04 AM by Global Angel »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இணைந்திருந்தால்  வாழ்கை இனிக்கும்
இம்மி அளவும் இடைஞ்சல் இல்லா
இனிமை கருத்து தான்.இருந்தும்,
இணையாதிருந்தாலும் எல்லையில்லா
இன்பத்தினை இன்பமாய் சுகித்திட முடியும் .
இருளும்,ஒளியும் இணைந்தே இருந்தால் ??
இமையும் ,இமையும் இணைந்தே இருந்தால் ?
இதழும், இதழும் இணைந்தே இருந்தால் ??
இரு தண்டவாளங்களும் இணைந்தே இருந்தால் ?
இன்பம் ஏது?? இனிமை ஏது ??


அடுத்த தலைப்பு

இன்பம்

Offline supernatural

காலை பொழுதின் வேளையில்..
அந்நாளின் பணிகளை நேர்த்தியாய் ..
திட்டமிடும் சமயம்...
என் இதயம் நிறைந்த ...
குரல் அதை  கேட்க மனம் விரும்ப...
அலைபேசியில்  நான் அழைக்க ...
என்னவன்  தந்த எதிர்பாரா முத்தம்....
இன்பத்திலும் பேரின்பம்...

முத்தம் .
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Mr.CuTe

oru pattampoochi  poovil then edukkum alagu...!!!

ennaval kolanthaiku kodukum muthathin alagu ..!!!

alagu

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

நிலவுக்கு  குளிர் அழகு...
சோலைக்கு பூ அழகு...
பூவிற்கு வாசம் அழகு..
கடலுக்கு அலை அழகு...
அலைக்கு நுரைகள் அழகு...
உயிருக்கு சுவாசம் அழகு...
சுவாசத்திற்கு நீ அழகு...
உலகின் அழகான அழகிற்கு எல்லாம்...
அழகான நீ அழகு..

நீ அழகு...