பூக்களின்மீதும் ,செடிகளின்மீதும், பட்டும்
படாமலும் படர்ந்திருக்கும் பனித்துளிகள் .
தூசோ ,மாசோ கலவாத பரிசுத்தமான பசுமை
நிறைந்த அரும் நறும் சில்லெனும் சிறுங்காற்று
விட்டு விட்டு மொட்டு விட்டிருந்த மொட்டு
மலர்கள் வெட்கம் விட்டு மொட்டவிழும் எழில்..
ஆதவன் தன் எழுச்சியினை பறைசாற்றும் பொருட்டு
விரைவாய், இருந்தும் குறைவாய் அனுப்பும் ஒளி கீற்றுகள்
போர்வைக்கு அடியில் கிடக்கும் நம்மை எழுப்பி
விடியலின் மடியினில் இட்டிட முனையும் சேவலின் கூவல்
அழகாய் மிகஅழகாய் அள்ள அள்ள குறையாத அழகின்
அட்சயா பாத்திரமாய் அழகு அதிகாலை பொழுது
அத்தனை அழகையும் அணைத்திருக்கும் அதிகாலைபொழுதை
கூட அலட்சியபடுத்தி, அடுத்துதான் ஆராதிகின்றேன்
ஆதிமுதல் அடிபாதம் வரை அன்றி, ஆழ்மனதில் முழுதாய்
ஆழ்ந்திருக்கும் உன் அழகு, நினைவு கடலில் மூழ்கி ....
அடுத்த தலைப்பு
பின்தொடர்வதாய்