Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 480558 times)

Offline Global Angel

அன்பும் அறிவும்
அழகான பேச்சும்
பண்பும் எனை கவர
அடிபடையில் ஒரு கரணம்
உன் பால் நான் கொண்ட காதல்தான்
அன்புக்கு உரியவனே
வம்பு பண்ணாது வந்துவிடு
வாழ்கையின் சந்து பொந்துகளை
துளைத்து எறிந்துவிடு




வம்பு


                    

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

வந்துவிடுகிறேன் ஆசை மலரே வந்துவிடுகிறேன்
தடை ஏதுமில்லை உன்னை வந்தடைவதற்க்கு
ஓசை படாது ஆசை போல உனைதேடி
வந்துவிடுகிறேன் !

வந்தடைய தங்குதடை இல்லாத பொழுது
வாழ்கையின் சந்து பொந்துக்களை
வீணாய் தகர்த்து எறிவானேன்  ??
வந்துவிடுகிறேன்,வந்துவிடுகிறேன்

உந்தன்  நினைவின் நீட்டம் அது நீண்டபொழுதேல்லாம்
எந்தன் சிந்தையது  நொந்தும் வெந்தும் சிதைந்து
கந்தை கந்தையான  பொழுதுகளில்
மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாட்டை   போல
சந்துகளிலும் பொந்துகளிலும்தான் உந்தன்
தரிசனம் தேடி திரிந்தேன் ...

அதன் கரிசனம் கருதி வாழ்கையின் சந்து
பொந்துகளை வம்பு செய்யாமல்,
விட்டுவிடுவோமே !

அடுத்த தலைப்பு
விட்டுவிடுவோமே !
« Last Edit: May 15, 2012, 12:18:55 PM by aasaiajiith »

Offline Global Angel

உன்னை நானும்
என்னை நீயும்
உளமார நேசிக்கும்போது
நமக்குள் ஏன் இந்த ஊடல் அன்பே
விட்டு விடுவோமே
நம் அன்பை எண்ணி
 


 
ஊடல்

                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
கண்ணே....!
கூடலும், ஊடலும்
காதலர்க்கு புதிதல்லவே
ஊடல் என்பதே
கூடலின் வெளிப்பாடு
கூடல் என்பது
ஊடலின் உச்சம் என்பது
உனக்கு தெரிந்தும்
ஏன் இந்த விண்ணப்பம்?

அடுத்த தலைப்பு கூடல்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
 
"உம்" என்று நீ சொன்னால் போதும்
விட்டு விட்டு துடிக்கும் இதயம் அதையே
பொட்டு நொடியும் வீணாக்காமல் அப்பொழுதே
விட்டு விட தயார் நான்
 
வெறும் ஒப்பிர்க்கும்,மற்றோர் கண்துடைப்பிர்க்கும்
கட்டுக்கோப்பாய்,கட்டுபாடாய் கடைபிடித்த
ஊடலினை விட்டுவிடவா யோசிப்பேன் ??
 
கூடுதலாய் கருதாவிடில் கூடலையே
கூட விட்டு விடுவேன், உன்னதமான
உண்மையான அன்பின் தேடல் பொருட்டு !
 
அடுத்த தலைப்பு
தேடல்
« Last Edit: May 17, 2012, 04:03:50 PM by aasaiajiith »

Offline supernatural

அன்பின் தேடல் ...
தேடலின் இறுதியில்..
அறுதியாய் .....
அருமை பரிசு...
உன் இதயம்...

அறுதியாய்
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/

எனக்கும் தமிழ் தெரியும் எனும்
மனகனத்தை கொடுத்து
தமிழில் சில கிறுக்கல்களையும்
கொடுத்து,ஒரு சில ஓவியங்களுக்கு
உயிர் கொடுத்துவந்ததனால்
எனக்கும் தலைகனம் இருந்தது
யானும் இறைவன் என்று .....
(நான் படைப்பதனால்   என் பேர் இறைவன்)
என்ன ஆயிற்று அப்பகுதிக்கு ??
அறிந்தவர்,தெரிந்தவர் யாரும் கூறலாம் ....
அப்பகுதியில் உறுதியாய் என் பதிப்பு
நிலைக்கின்றதோ  ? இல்லையோ ? ஆனால்
அறுதியாய் நிலைப்பது என் பதிப்பே !

அடுத்த தலைப்பு
என் பதிப்பு

Offline supernatural

மனம் விரும்பிய விஷயங்களை..
மனம் விரும்பும் தருணத்தில்...
நான் அறிந்த ...
தமிழின் துணையால்..
தெரிந்த வார்த்தைகள் இட்டு...
சில வரிகள் சமைத்து ...
சிறு பதிப்புக்கள் பதித்தேன்..
என் பதிப்பையும் .....
ரசிக்க சில இதயங்கள் ...
மன்றத்தில் இருப்பதை ..
அறிந்தேன் பாராட்டுக்களின் ...
வருகையால்...

மனம் விரும்பிய

« Last Edit: May 17, 2012, 05:57:31 PM by supernatural »
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
மனம் விரும்பிய  ஒரு விஷயத்தை
காணவில்லையே, எனும் ஏக்கத்தில்
மனம் உருகி ,கேள்வியை கேட்டு விட்டு
பதில் வரும் என காத்திருந்தால்
நன்றி பாராட்டு வருகிறது
பதிலுக்கு பதிலாக .....

அடுத்த தலைப்பு
பதிலுக்கு பதிலாக

Offline Global Angel

பதிலுக்கு பதிலாக
பலதடவை பேசினாலும்
பலதடவையில் ஒரு தடவை கூட
உன்னை பற்றி பேசுவதை நிறுத்தவில்லையே



உன்னை
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பெண்ணே.....!
உன்னை பற்றி பேசுவதை
ஏன் நிறுத்த சொல்கிறாயோ?
உன்னை பற்றி
 பேசுவதை நிறுத்திவிட்டால்
உன்மீது கொண்ட அன்பை
மறந்துபோவேனென
அச்சபட்டே பேசிகொண்டிருக்கிறேன்
நீ இருந்தும் இல்லாமலும்
ஒருதடவை என்ன
ஓர்ஆயிரம்தடவை பேசுவேன்
உன்னை பற்றி பேசுவதில்
எத்தனை ஆணந்தம்...!

அடுத்த தலைப்பு ஆணந்தம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
பல்சுவைகளை  பின்னுக்கு தள்ளிடும்
பால் சுவையினையே ,சற்று தள்ளி
முன் வந்து நிற்கும் பல சுவைகளில்
முதலாமது  என கேட்டால்
பல சுவைமிகுந்த சுளைகளை சுவை
சுவையாய் உள்ளடிக்கிய பலாபழ
சுவைதான் ..
அப்பலாவினை காணும் பொழுதுகளில்
முன் வந்து நிற்கும் உன் நினைவின்
ஆனந்தமே !
விளக்கம் வேண்டின் வினவலாம் !
தகும் விளக்கமும் பெறலாம் !

அடுத்த தலைப்பு
வினவலாம் !
« Last Edit: May 18, 2012, 06:02:50 PM by aasaiajiith »

Offline Global Angel

உன்னை பற்றி
உன்னிடமே வினவலாம் ...
உனக்கு பிடிக்குமா
உள்ளதை சொல்வாயா...
என்ற எதிர்பார்ப்பு நீங்க
உன்னை பற்றி உள்ளதை சொல்லிவிடு 



சொல்லிவிடு
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என்னை பற்றி அறிய
இவ்வளவு ஆவலா பெண்ணே...........!
நீ கேட்டு மறுத்தால்
நான் மடையன் ஆகி போவேன்
என்னை பற்றி உன்னிடம்
உள்ளதை உள்ளபடியே
சொல்லிவிடுகிறேன்
என்னைப்பற்றியும் 
எனக்கு பிடித்ததை பற்றியும் 
முழு  நீள பட்டியல் இட்டுவிடலாம்
எதை முதலில் கூற
என்பதில்தான் மனபோராட்டம்.......
எளியவன் இவனுக்கு வந்த
பணபோராட்டம் கூட தீர்ந்து போகும்
மனபோராட்டம் தீர்ந்தபாடில்லை
எதை தெரிந்து கொள்ளவேண்டும்
உன் எதிர்பார்ப்பு
எதுவென தெளிவுபடுத்து....?


அடுத்த தலைப்பு தெளிவுபடுத்து...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்கும்
உன்னத பழக்கம் உள்ளவன் நான்.
தொன்றுதொட்டு என்னை உற்று நோக்குவார்
உணர்ந்திருப்பார், உண்மை ஈதென ,ஒருவேளை
தவறினாலும் ,நிச்சயம் நீ அறிவாய் அவ்வுண்மையை !
ஆகையால் ,சொல்லி தெரியவைக்க ஒன்றுமில்லை
செல்ல கிளியே ! கிள்ளை மொழியே !
முடியுமானால், ஒரேவொரு குழப்பம்  தெளிவுபடுத்து. !
இனி உரைக்கும் தகவலை,பொதுப்படையற்று
தனித்துவமாய் தெரிவி ! இல்லையேல்
என் பதிப்புக்கள் எதற்கும்  பதில் வேண்டாமென அறிவி !

அடுத்த தலைப்பு

அறிவி !