உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்கும்
உன்னத பழக்கம் உள்ளவன் நான்.
தொன்றுதொட்டு என்னை உற்று நோக்குவார்
உணர்ந்திருப்பார், உண்மை ஈதென ,ஒருவேளை
தவறினாலும் ,நிச்சயம் நீ அறிவாய் அவ்வுண்மையை !
ஆகையால் ,சொல்லி தெரியவைக்க ஒன்றுமில்லை
செல்ல கிளியே ! கிள்ளை மொழியே !
முடியுமானால், ஒரேவொரு குழப்பம் தெளிவுபடுத்து. !
இனி உரைக்கும் தகவலை,பொதுப்படையற்று
தனித்துவமாய் தெரிவி ! இல்லையேல்
என் பதிப்புக்கள் எதற்கும் பதில் வேண்டாமென அறிவி !
அடுத்த தலைப்பு
அறிவி !