Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 4723 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1246
  • Total likes: 1069
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உண்மையான சில வரிகள்
« Reply #30 on: January 03, 2026, 03:27:25 PM »
*நல்லதையே செய்யுங்கள்*
  பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே செய்யும் தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்

ஒரே பொருள் தான் இருவேறு பெயர்களில் நாணயம் சில்லறை நம் தகுதியும் தரமும் நம் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படும்

தடம் மாறும் போது தட்டிக் கேட்பவர்களோடும் தடம் பதிக்கும் போது தட்டிக் கொடுப்பவர்களோடும் பயணியுங்கள் வாழ்க்கையில்

உங்கள் எதிர் காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்து தான் பிறக்கிறது

மன அமைதியும்,
பொருள்களின் மீதான பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை.
அவை இரண்டும் ஒத்துப்போகாது. உங்களுக்கு எதுதேவையோ
அதைத் தேர்ந்தெடுங்கள்.

காரணத்துடன் மட்டும் பேசுங்கள். அனைத்து விதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்
அளந்தே பேசுங்கள் களங்கமற்ற, நல்நோக்கம் கொண்ட வார்த்தைகள் சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பிரிவை உண்டாக்குகிறது. உங்களிடம் கேட்காத வரையில் எவருக்கும் புத்திமதி கூறாதீர்கள்
நமது வேலையைப் பார்ப்போம்

விவாதம் செய்யாதீர்கள்.
ஒரு பொழுதும் தர்க்கத்தில் ஈடுபடாதீர்கள் அது உங்களுக்கு எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் தராது. அது உங்கள் ஆணவத்தைப் பெருக்கும் மற்றவரைப் புண்படுத்தும், நண்பர்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும்.

நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள் ஆனால் இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள்.

நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளைக்கே மறுக்கப்பட்டுவிடும். இருந்தாலும் நல்லதைச் செய்யுங்கள்.

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் இந்த உலகத்தினர் குறை சொல்லத்தான் செய்வார்கள். நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறை கூறுவார்கள் இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்

உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.
உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு
ராஜாவைப் போல வாழுங்கள்

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான் குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.