Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 16 times)

Offline RajKumar

உண்மையான சில வரிகள்
« on: July 19, 2025, 12:30:11 PM »
சிகரத்தை அடைவதற்கு
சுலபமான வழி கிடையாது.

வாகனம் ஓட்டுவது என்று முடிவு செய்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஆரோக்யம் குறித்து அக்கறை
கொண்டால் நாக்கு கேட்டதை
எல்லாம் கொடுக்க முடியாது.

வாழ்க்கையில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதோடு
ஒட்டிப் பிறந்த நன்மைகளோடும் தீமைகளோடும் தான் வரும்.

முட்களற்ற ரோஜாவைத்
தேடுவது எவ்வளவு மடத்தனம்.

பிரச்னைகளற்ற ஆனந்தமான வாழ்க்கையை மகாத்மாக்களால்கூடவாழமுடியாது.
அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.

பெரிய சாதனை செய்ய வேண்டும் என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க தயாராக வேண்டும்.

செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான் துதிக்கப்படும் ஒரு சிலையாக நாம் மாற முடியும்.

சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாக சென்றடையவில்லை.

என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றை படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

ஒவ்வொரு மனிதன் உள்ளம் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான்.

துன்பம் அதிகம் வந்தால் மனம் தளராதீர்கள். கடவுள் உங்கள் மீது தனிக்கவனம் செலுத்துகிறார் என்று பொருள்.

வாழ்க்கை என்ற உலையில் போட்டு எரித்து, கர்ம வினைகளை நீக்கி, புடம் போட்ட சுத்தத் தங்கமாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #1 on: July 19, 2025, 12:33:53 PM »
எந்த உறவையும் கெடுத்துக்கொள்ள சிறந்த வழி, அதன் மீதான நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக்கொள்வதுதான்

கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் இப்படி இருக்கணும், மனைவி இப்படி இருக்கணும் என பெரிய எதிர்பார்ப்பில் வருபவர்கள் அப்படி இல்லை என தெரிந்ததும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்

பிரச்சனை என வந்தால் நண்பன் கடன் கொடுத்து உதவுவான் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள், அப்படி இல்லை என தெரிந்ததும் "இந்த நட்பால் நமக்கு என்ன பலன்?" என யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் தற்சார்பு.

வீட்டுக்கு வரும் விருந்தினர் எதுவும் வாங்கிக்கொண்டு வராமல் இருப்பார்கள் என நினைத்தால், அவர்கள் திடீரென ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் வந்தால் "அடடா...ரஸ்தாளி பழமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே?" என மகிழ்ச்சி அடைவோம்

அதே அவர்கள் நமக்கு ஒரு லேப்டாப் பரிசாக கொடுப்பர்கள் என நினைத்தால், பதிலுக்கு அவர்கள் ஒரு கிலோ ஸ்வீட்டை எடுத்து நீட்டினால் "வெறும் ஸ்வீட்தானா?" என அதிருப்தி அடைவோம்

பிரசச்னை அவர்கள் கொண்டுவந்ததில் இல்லை. நம் எதிர்பார்ப்புகளில்..

எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் ஒருதலை ராகம் படத்துக்கு சென்றார்கள். படம் மாபெரும் வெற்றி

பெருத்த எதிர்பார்ப்புடன் மக்கள் சென்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தன

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால், அந்த உறவும், நட்பும் நீடிக்கும்

அதில் கிடைக்கும் சின்ன, சின்ன விசயங்கள் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கும்