Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 1313 times)

Offline RajKumar

உண்மையான சில வரிகள்
« on: July 19, 2025, 12:30:11 PM »
சிகரத்தை அடைவதற்கு
சுலபமான வழி கிடையாது.

வாகனம் ஓட்டுவது என்று முடிவு செய்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

ஆரோக்யம் குறித்து அக்கறை
கொண்டால் நாக்கு கேட்டதை
எல்லாம் கொடுக்க முடியாது.

வாழ்க்கையில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதோடு
ஒட்டிப் பிறந்த நன்மைகளோடும் தீமைகளோடும் தான் வரும்.

முட்களற்ற ரோஜாவைத்
தேடுவது எவ்வளவு மடத்தனம்.

பிரச்னைகளற்ற ஆனந்தமான வாழ்க்கையை மகாத்மாக்களால்கூடவாழமுடியாது.
அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.

பெரிய சாதனை செய்ய வேண்டும் என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க தயாராக வேண்டும்.

செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான் துதிக்கப்படும் ஒரு சிலையாக நாம் மாற முடியும்.

சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாக சென்றடையவில்லை.

என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றை படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?

ஒவ்வொரு மனிதன் உள்ளம் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான்.

துன்பம் அதிகம் வந்தால் மனம் தளராதீர்கள். கடவுள் உங்கள் மீது தனிக்கவனம் செலுத்துகிறார் என்று பொருள்.

வாழ்க்கை என்ற உலையில் போட்டு எரித்து, கர்ம வினைகளை நீக்கி, புடம் போட்ட சுத்தத் தங்கமாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #1 on: July 19, 2025, 12:33:53 PM »
எந்த உறவையும் கெடுத்துக்கொள்ள சிறந்த வழி, அதன் மீதான நம் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக்கொள்வதுதான்

கல்யாணத்துக்கு அப்புறம் கணவன் இப்படி இருக்கணும், மனைவி இப்படி இருக்கணும் என பெரிய எதிர்பார்ப்பில் வருபவர்கள் அப்படி இல்லை என தெரிந்ததும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள்

பிரச்சனை என வந்தால் நண்பன் கடன் கொடுத்து உதவுவான் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள், அப்படி இல்லை என தெரிந்ததும் "இந்த நட்பால் நமக்கு என்ன பலன்?" என யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் தற்சார்பு.

வீட்டுக்கு வரும் விருந்தினர் எதுவும் வாங்கிக்கொண்டு வராமல் இருப்பார்கள் என நினைத்தால், அவர்கள் திடீரென ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் வந்தால் "அடடா...ரஸ்தாளி பழமா? எனக்கு ரொம்ப பிடிக்குமே?" என மகிழ்ச்சி அடைவோம்

அதே அவர்கள் நமக்கு ஒரு லேப்டாப் பரிசாக கொடுப்பர்கள் என நினைத்தால், பதிலுக்கு அவர்கள் ஒரு கிலோ ஸ்வீட்டை எடுத்து நீட்டினால் "வெறும் ஸ்வீட்தானா?" என அதிருப்தி அடைவோம்

பிரசச்னை அவர்கள் கொண்டுவந்ததில் இல்லை. நம் எதிர்பார்ப்புகளில்..

எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் ஒருதலை ராகம் படத்துக்கு சென்றார்கள். படம் மாபெரும் வெற்றி

பெருத்த எதிர்பார்ப்புடன் மக்கள் சென்ற உச்ச நட்சத்திரங்களின் படங்கள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்தன

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால், அந்த உறவும், நட்பும் நீடிக்கும்

அதில் கிடைக்கும் சின்ன, சின்ன விசயங்கள் பெருத்த மகிழ்ச்சியை அளிக்கும்

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #2 on: August 20, 2025, 03:26:31 PM »

☕#டீ_குடிக்கிற பழக்கமே இல்லை ன்னு
சொல்றவன் : கஞ்சன்,

ஒரு நாளைக்கு இரண்டு டீ தான்
சொல்றவன் : சுயநலவாதி,

ஒரு நாளைக்கு நாலு டீ
குடிப்பவன் : படிப்பாளி

ஒரு நாளைக்கு எட்டு டீ
குடிப்பவன் : அறிவாளி,

ஒரு நாளைக்கு 12 டீ
குடிப்பவன் : அரசியல்வாதி,

யாராவது டீ வாங்கி கொடுத்தால்
மட்டும் குடிப்பவன் : குடிகாரன்,

ஒரு நாளைக்கு 15 டீ வரைக்கும்
குடிப்பவன் : உழைப்பாளி.

ஒரு நாளைக்கு 15 டீ க்கு மேல்
குடிப்பவன் : வேலையில்லாதவன்.

டீ அவ்வளவா குடிப்பது இல்லை னு
சொன்னா : வேற ஏதாவது வாங்கி தா னு அர்த்தம்.

இப்ப தான் நான் டீ குடிச்சேன் னு
சொன்னா : காசு நான் கொடுக்க மாட்டேன்
அர்த்தம்,

உனக்கு வேணும்னா டீ சொல்லு ன்னா :
என்கிட்ட காசு இல்லை னு அர்த்தம்...





Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #3 on: August 20, 2025, 03:48:01 PM »

*😃முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்😃*
*😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*☺கோபங் கொண்டேன்☺*
*☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*👨அதிகம் பேசாமலிருந்தேன்,*
*👨" ஊமை என்றார்கள்.👨*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤சளசளவென்று பேசினேன்...!!❤*
*❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘

*💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙*
*💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚*
*💚" ஜால்ரா " என்றார்கள்.💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!💖*
*💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛*
*💛" நடிப்பு" என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁*
*🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻*
 *🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌺ஆலோசனை வழங்கினேன்,🌺*
*🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💓சுயமாக முடிவெடுத்தேன்,💓*
*💓" அதிபுத்திசாலி* "
*என்றார்கள்.💓*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥*
 *😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💕நான் சிரித்த போதெல்லாம்,💕*
 *💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்💕*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💚எதிர்கேள்வி கேட்டால்,💚*
*💚வில்லங்கம் என்றார்கள்💚*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💖ஒதுங்கி இருந்தால்,💖*
*💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.💖*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*💛உரிமைக்குப் போராடினால்,💛*
 *💛"கலகக்காரன் " என்றார்கள்.💛*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,❤*
*❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்🌻.....?*

*"🌺நாலுபேர் என்ன பேசுவார்கள்🌺......?"*
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

*✡யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.✡..!!*

*🌷தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.🌷......!!*
🌷🌷🌷🌷🌷🌷🌷

*💣அந்த நாலு பேரை கழற்றி விட்டு.......,💣*

*🔔என்னை அணிந்துக் கொண்டேன்🔔.*
🌷🌷🌷🌷🌷🌷🌷

*💖துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்...💖*

*❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக❤....,*
           *❤ நிம்மதியாக.❤*

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #4 on: August 21, 2025, 12:09:12 PM »
*_"எனக்கு நேரமில்லை":_*

பன்னிரண்டு மணி நேர பயணம் இப்போது நான்கு மணி நேரமாக சுருங்கிவிட்டது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

பன்னிரண்டு பேர் கொண்ட குடும்பம் இப்போது வெறும் இருவர்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு நான்கு வாரங்கள் எடுத்த செய்தி, இப்போது நான்கு வினாடிகளில்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

தூரத்திலுள்ள ஒருவரின் முகத்தைப் பார்க்க முன்பு வருடங்கள் ஆயின,
இப்போது வினாடிகளில் தெரிகிறது – ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வீட்டில் சுற்றிச் செல்ல எடுத்த நேரமும் முயற்சியும்,
இப்போது லிஃப்ட்டில் வினாடிகளில் முடிகிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன்,
இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான்,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள்,
இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது,
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

ஆக்டிவாவில் செல்லும்போது, ஒரு கை கைப்பிடியில், இன்னொரு கை போனில் –
ஏனென்றால் நின்று பேச அவனுக்கு நேரமில்லை.

கார் ஓட்டும்போது, ஒரு கை ஸ்டீயரிங்கில், இன்னொரு கை வாட்ஸ்அப்பில் –
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

ட்ராஃபிக் ஜாம் ஆனால், புதிய வழி உருவாக்க லேன் மாறுகிறான்
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

நண்பர்கள் மத்தியில், அவன் விரல்கள் போனில் பிஸியாக இருக்கும்,
ஏனென்றால் எங்கோ செல்ல வேண்டும் – நேரமில்லை.

தனியாக இருக்கும்போது அவன் நிம்மதியாக இருக்கிறான்,
ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியின்றி இருக்கிறான் –
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

புத்தகம் படிக்க நேரமில்லை,
பெற்றோரை அழைக்க நேரமில்லை,
நண்பனைச் சந்திக்க நேரமில்லை,
இயற்கையை ரசிக்க நேரமில்லை

ஆனால் –
ஐபிஎல்-க்கு நேரம் இருக்கிறது,
நெட்ஃபிளிக்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அர்த்தமற்ற ரீல்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அரசியல் விவாதத்திற்கு நேரம் இருக்கிறது –
ஆனால் தனக்கு நேரமில்லை...

உலகம் எளிமையாகிவிட்டது, வேகமாகிவிட்டது,
தொழில்நுட்பம் நெருங்கிவிட்டது, தூரங்கள் மறைந்துவிட்டன,
வசதிகள் பெருகிவிட்டன, வாய்ப்புகள் வளர்ந்துவிட்டன..
ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்து விலகிச் சென்றான்.

அமைதியாக உட்கார,
தன்னோடு பேச,
தன்னைப் புரிந்துகொள்ள,
அல்லது சில நிமிடங்கள் மனமார சிரிக்க –
நேரமில்லை என்கிறான்.

**பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. அந்த இறுதி நொடியில் அவன் உணர்கிறான் – நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிட்டேன்.**

*_எனவே இன்றே முடிவு செய் – உனக்காக கொஞ்சம் நேரம் வை,_*

*_உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு,_*

*_உன் இதயத்திற்காக, உன் அமைதிக்காக, வாழ்வின் சாராம்சத்திற்காக கொஞ்சம் வாழ். ஏனென்றால் நேரமில்லை என்பது உண்மையல்ல – அது வெறும் பழக்கம்... அதை மாற்ற வேண்டும்._*


Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #5 on: August 22, 2025, 04:55:14 PM »
மிதமிஞ்சிய காலம்னு ஒரு காலம் இருக்கும்.
அதுல திட்டமிடல் இல்லைன்னா அவசரகாலம்னு வருகிற காலத்துல நிறைய பேருகிட்ட கையேந்தற நிலை வரும்.

இப்ப இல்ல,
Sorry ,
எனக்கும் அவசரம்,
முடியாது ,
என்கிட்ட இல்ல,
கேட்டு பார்க்கிறேன்,
முடிஞ்சா செய்யறேன்,
உனக்கா அவசரம்,
கொஞ்சம் வெயிட் பண்றீயா,
உன் நேரம் தான் போல,
சமாளியேன்...
இப்படி பதில்கள் வருமே தவிர உதவிகள் வராது.
ஏன் நீங்க செஞ்ச உதவி கூட திரும்பாது.

இதற்கெல்லாம் தீர்வு 
திட்டமிடல்,
சேமிப்பு,
வரவு எட்டணா செலவு பத்தணா,
உங்களுக்குனு எடுத்து வச்சிட்டு மீதம் போக தானம் தருமம்,
பகட்டு வாழ்க்கை இல்லாத ஒரு வாழ்வு..
அவ்வளவு தான்.

இருந்த காலம் போயி இருக்குமா னு காலம் எல்லாம் வரும்..
இருக்கும் போது இருப்பை தக்க வச்சிக்க சுயநல வாழ்க்கை தான் உங்களை நிம்மதிப்படுத்தும்..
ஆசுவாசப்படுத்தும்...
இதான் இயல்பு.
இதான் நியதி..

திட்டமிட்டு வாழுங்க.
அதுவே நிம்மதியான வாழ்க்கை.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #6 on: August 23, 2025, 10:59:09 AM »
சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.

————————————————-

`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

————————————————-

`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!

————————————————-

கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள்.

ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள்.

#ஐடி பூங்காக்கள்.

————————————————-

டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.

————————————————-

திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில்

`தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.

————————————————-

மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்!

எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

————————————————-

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

————————————————-

எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்.

————————————————-

முத்தத்தில் முடிக்காமல் குழந்தைக்குத் தலை சீவ அம்மாக்கள் பழகவே இல்லை.

————————————————-

தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.

( அயல் நாட்டில் தினம் இதைத்தான் நான் செய்கிறேன்! )

————————————————-

`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!

நூலகம் செல்வோரை வித்தியாசமாய் பார்க்கிறது சமூகம்.குடிப்பவர்களை இயல்பாக பார்க்கிறது.

வசதியா இருக்கிறவன் தண்ணி அடிச்சா நல்லா வாழறான்னு சொல்றாங்க. வசதி இல்லாதவன் தண்ணி அடிச்சா கெட்டு ஒளிஞ்சிட்டான் அப்படின்னு சொல்றாங்க
 

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #7 on: August 24, 2025, 02:48:19 PM »
*திரும்பிப் பார்க்கிறேன்!!*

எங்கோ பிறந்து, வளர்ந்து,
இல்வாழ்வில்
 அடியெடுத்து வைத்து,

பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தை (கள்) பிறந்து, ..

அவர்களும் வேகமாக வளர்ந்து   விட்டார்கள்

பள்ளி, கல்லூரி என அவர்களுக்குப் பிடித்த கல்வியைக் கற்று,

அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். இனி நம்மையும் மறந்தும் துறந்தும் விடுவார்கள்.

நாம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக முதுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். Retired but not tired என்று வீர வசனத்துடன்.

வயதுக்கேற்ற சின்னச் சின்ன உடல் உபாதைகள் நமக்கு இருந்தபோதும்......

 ஆரோக்கியத்தை காத்துக்கொண்டு(?) நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வினை திரும்பிப் பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது!

எத்தனையோ
சந்தோஷங்கள்,
சிரிப்புகள், பாராட்டுகள்

எத்தனையோ
துக்கங்கள்,
கண்ணீர் துளிகள்...

எத்தனையோ ஏமாற்றங்கள்,  கோபங்கள்,
சபலங்கள்...
எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம்!

நம் மீது அன்பைப் பொழிந்த, நாம் அன்பு செலுத்திய நிறைய பேர் including பெற்றோர்கள் இன்று நம்மிடையே இல்லை.

இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள்,
விபத்துக்கள், covid போல்
கொடிய மற்றும்
கொள்ளை நோய்கள், பஞ்சங்கள், வெள்ளம்,
போர்கள்,
தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து இதுவரை தப்பித்துக் கொண்டோம் இதுவரை.

நாம் ஆசையாய் நினைத்த சில விஷயங்கள் கைகூடாததாலும்,
நல்லதோ கெட்டதோ,
நாம் கொஞ்சமும் நினைத்தே பார்த்திராத சில விஷயங்கள் நடந்தேறியதாலும் ....

மனம், வாக்கு, செயல் என அனைத்திலும் மாற்றங்கள் கண்டோம்.

பெரியவர்களின் பல ஆசீர்வாதங்கள்,
சமயங்களில் சில காயப்படுத்திய சொற்கள் இரண்டையும் ஏற்றுக் கொண்டோம் .

யாரெல்லாம் நம்மை உண்மையாய்  நேசிப்பவர்கள்,

யாரெல்லாம் உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசுபவர்கள்,

 யாரெல்லாம் பாசமாய் இருப்பது போல நடிப்பவர்கள் என்பதை...

 சற்று தாமதமாக என்றாலும், இப்போது கண்டுகொண்டோம்.

சில நண்பர்கள்,
சில உறவுகள்...
 பிரிந்து போனதையும்,

சில நண்பர்கள்,
சில உறவுகள்...
 நம்மை மறந்து போனதையும்...

வேறு வழியின்றி இயல்பாய் எடுத்துக் கொண்டோம்.

புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்த்தும்,

விதவிதமான உணவுகளை ருசித்துப் பார்த்தும்

மகிழ்ந்த தருணங்களை நினைவில் பதியவைத்துக்
கொண்டோம்.

வாழ்வின் இக்கட்டான நேரங்களில், ஆத்மார்த்தமான நண்பன் அல்லது தோழியிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று அதிலிருந்து மீண்டு வந்தோம்.

வேறு வேறு இடங்களில்,
வேறு வேறு மனிதர்களுடன், வேறு வேறு சூழ்நிலைகளில் பழகி, நிறைய அனுபவங்களை சேகரித்துக் கொண்டோம்.

பிறந்தநாள்,
திருமண நாள்,
சுப நிகழ்வுகள்,
விழாக்கள், Get-togethers,
புதுவருடம் போன்ற
விசேஷ தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடி மகிழ்ந்தோம்.

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என அறிந்து
கொண்டோம்.

பணம்,
 பட்டம்,
பதவி,
புகழ்,
வீடு,
தோட்டம், .
நகை,
கார்,
சொத்து,
சுகம்,
உறவுகள் என

எதுவும் நம்முடன் கடைசிவரை வரப்போவதில்லை எனப் புரிந்து கொண்டோம்.

நிம்மதியை வெளியில் தேடிப் பயனில்லை,

அது நமக்குள்ளே தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம் மிகவும் தாமதமாக.

எல்லாவற்றையும் மன்னித்துவிடவும்,

சிலவற்றையாவது மறந்துவிடவும் கற்றுக்கொண்டோம்.

எல்லாமும் கடந்துபோகும் எனவும்,
எதுவும் நிரந்தரமில்லை எனவும் புரிந்து கொண்டோம்.

புத்தகங்களை வாசிப்பதும், இயற்கையை ரசிப்பதும்,
இனிய இசை கேட்பதும், இறைவனிடம் பிரார்த்திப்பதும், சில பல பயணங்களும், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதும் மனதுக்கு ஆறுதலான விஷயங்கள்.

காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும்! (ஆனால் தழும்புகள் சுலபமாக மறைவதில்லை).

எனவே,

 *இக்கணத்தில் வாழ்வோம்!*

*வாழ்க்கையே  திருவிழாதான்!*

 *நாளும் இயல்பாய்*
*அதைக் கொண்டாடுவோம்...!*

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #8 on: August 25, 2025, 11:26:05 AM »
[
இது_கதையல்ல_நிஜம்

செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.

கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான்.

பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது..

செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான்.

மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான்.

பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.

ஒரு நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான்.

நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.

செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.

"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.

அவன் குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.

பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!

அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது.

அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்
பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.

அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை.

செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.

செங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள்.

விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான்.

மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது.

நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான்.

அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.

தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.

தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.

இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..

"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.
இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை''

என்று கடிந்தபடி ,செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.

"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

இம்முறை வெள்ளிக்குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஏனெனில் ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன்.

பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.

பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.

இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான்.

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி
இருந்தது.

அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.

தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.

அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.

மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான்.

அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.

நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான்.

அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.

கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன

மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..

"உன்னுடைய உண்மையான நண்பன். உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."'

செங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.

ஒரு செயலை எடை போடும் போது அந்த செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.

நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள்.

அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது.

நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்தகைய நண்பர்களைப்பற்றி
ஏதாவது குற்றம் குறையைச் சொல்லி 

நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள் நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்வார்கள்.

ஆனால், நம்மை வீழ்த்துவது தான் அவர்கள் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #9 on: August 26, 2025, 11:36:38 AM »
🇨🇭#தண்ணீர்_மட்டுமே…❗

🇨🇭#அளவுக்கு_மிஞ்சினால்

💚#ஆரோக்கியம்_பயக்கும்💚

💦  #தண்ணீர்_பற்றிய_சில #உண்மைகள்…❓💦

💦 தண்ணீரில்தான் பிராணவாயு உள்ளது.உடலுக்கு முக்கிய தேவை.

🌏 பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

🌏 பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின்  90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக்
காணப்படுகிறது.

🈚 பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

🈸 உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

💦 #தண்ணீர்…❗❗❗💦

😲நம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.

😱தண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

😱உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது. உடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.

😱போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

*😱விளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.

😱மற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.

😱தாகம் தணிக்க சிறந்தது எது? தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை பானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம்.

😱உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது.

😱திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .

😱நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.

😱இந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.

😱சுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.

😱சிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும். தண்ணீர் மட்டுமே அளவுக்கு மிஞ்சினால் ஆரோக்கியம் பயக்கும்.

❌ #தண்ணீர்…#எந்தஎந்த #நேரங்களில்_தண்ணீர்_குடிக்கக் #கூடாது❓

💦  நீர் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. நீரில்லாமல் எந்த உயிரினமும் இப்புவியில் வாழ முடியாது. இப்பூமியின் எழுபது சதவீதம் நீரால் ஆனது என அறிவியல் உண்மை கூறுகின்றது. மேலும், நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. "நீரின்றி அமையாது உலகு என திருக்குறள்" நீரின் மேன்மை தன்மையையும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.

❌ தண்ணீர் தாகத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் வாழ்வையும் வளமாக வைத்துக் கொள்கிறது. பலர் காரமான பொருள் சாப்பிட்டால் தண்ணீர் குடிப்பார்கள். குறிப்பாக மிளகாயை கடித்து விட்டால் கத்தி கூப்பாடே போட்டு விடுவார்கள். மிளாகாய் சாப்பிட்ட நிலையில் நீர் அருந்தக்கூடாது. இவை குடல் பகுதிக்கு சென்று பல விளைவுகளை வயிற்றில் ஏற்படுத்தும்.

❌ பலர் தூங்குவதற்கு முன்னால் தண்ணீர் குடிப்பார்கள். இரவு நேரத்தில் கிட்னி சற்று மெதுவாகவே வேலை செய்யும். இதனால், உங்களின் முகம் காலையில் எழுந்தபிறகு வீங்கி இருக்கும். இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் தூக்கமும் கெடுக்கப்பட கூடும்.

❌ சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இதனால், செரிமான கோளாறு ஏற்படும். மது அல்லது வேறு குளிர் பானங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிற்றின் நிலையானது மிக மோசமாக மாறி விடும்.

❌ உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு கிட்னி தான். அதிகமான தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

❌ உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் பலர் மிகவும் வேகமாக உடற்பயிற்சிகளை செய்வர். பிறகு அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். இதனால் உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை வரக்கூடும்.

🉐#பாட்டிலில்_நீர்_அருந்தினால் #ஏற்படும்_விளைவுகள் ❗

👉 பாட்டிலில் நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உருவாகும். பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டாம்.தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. இது மிகப்பெரிய ஆபத்தை தரும். உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைத்து விடும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

💦#இதன்_அவசியம்❗

👉 12 அவுன்ஸ் தண்ணீர் நீங்கள் குடித்தால் 8 அவுன்ஸ் தண்ணீரை உடல் 15 நிமிடத்தில் உறிஞ்சிவிடும்.

👉 நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

👉 நம் உடலிலுள்ள நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது...

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #10 on: August 29, 2025, 06:44:30 PM »
*மைக்கேல் ஜாக்சன்
ஒரு கலைஞன் உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்பும் மக்களை மகிழ்விப்பான் என்கிற வரையறைக்கு நல்லதொரு உதாரணம், மைக்கேல் ஜாக்சன்.

1960-களில் வெள்ளையின ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு கறுப்பினத் தந்தை, தன் மகன் மீது கொண்டிருக்கும் கண்டிப்பு என்பது, எந்த விதத்திலும் தன் மகன் வெள்ளையின ஆதிக்கத்திற்கு இரையாகிவிடக் கூடாது என்பதால் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஜாக்ஸனின் தந்தை ஜோஸப்பும் அப்படித்தான். அப்போதிருந்த அனைத்துத் துறைகளிலும் வெள்ளையின ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. இசையில் மட்டும் தான் கறுப்பினர்களால் காலூன்ற முடிந்தது. வாழ்க்கையில் பெரிய அளவில் உயர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார்.

இனப்போரால் தங்களை அடிமைப்படுத்தி வந்தவர்களை தனது இசையால் அடிமைப்படுத்தினார்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வு ஓர் இரவிலேயே உச்சம் தொடவில்லை. அவரின் முதல் ஆல்பம் வெளிவந்த பத்து ஆண்டுகள் கழித்து த்ரில்லர் வெளியான பின்பு தான் உலகம் திரும்பி பார்த்தது. 1982 வருடம் வெளிவந்த  த்ரில்லர், இன்றைக்கும் உலகில் அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் அதிக கவனம் பெற்றார். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத் தொடங்கியது உலகம்.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #11 on: September 01, 2025, 06:41:29 PM »

*உலக கடித தினம் இன்று..,*
ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக, கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது
 
கடிதம் எழுதுவது பல நூற்றாண்டுகளாக உள்ளது. பண்டைய எகிப்து மற்றும் கிரேக்க காலங்கள் தொட்டே இருந்தது. அந்த நேரத்தில், உலோகம், ஈயம், மெழுகு பூசப்பட்ட மரம், மண்பாண்ட துண்டுகள், விலங்குகளின் தோல் மற்றும் பாப்பிரஸ் போன்ற பொருட்களில் கடிதங்கள் எழுதப்பட்டன. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், குறிப்பிட்ட செய்தி, தகவல் அல்லது வாழ்த்துக்களை அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மற்றவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், குறிப்பிட்ட பாடங்களைப் பற்றிய விமர்சன சிந்தனையை உருவாக்கவும் கடிதங்களைப் பயன்படுத்தினார்கள்.

கடந்த காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பல கடிதங்கள் வரலாற்றாசிரியர்களுக்கான தனிப்பட்ட மற்றும் இராஜதந்திர தொடர்புகளின் காப்பகமாக செயல்பட்டன. வரலாற்றில் எத்தனை நிகழ்வுகள் நடந்தன, எப்படி நிகழ்ந்தன என்பதை தீர்மானிக்க, அனுமானிக்க கடிதங்கள் பயன்பட்டன.
மெல்ல மெல்ல  கடிதங்கள் ஒரு கலை வடிவமாக மாறியது மற்றும் இலக்கியத்தின் வகையாகவும் தனித்து நின்றது. அஞ்சல் சேவைகள் உருவாக்கப்பட்டு, மக்கள் தனிப்பட்ட தொடர்புக்காக கடிதங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய போது பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

உண்மையில், போரின் போது, குடும்பங்கள் மற்றும் காதலர்கள் தொடர்பில் இருக்க உதவிய ஒரே வழி கடிதங்கள் மட்டுமே. அழகான நினைவுகள் அவை. அந்த காலங்கள் எத்தகைய மகிழ்ச்சியானவை!!.  விஞ்ஞான விந்தையாலும், அறிவியலின் ஆர்வத்தாலும் அடுத்தடுத்த  கட்டங்களை தாண்டினாலும் “அன்புள்ள" எனத்  தொடங்கி, “இப்படிக்கு" என்று முடிக்கும் போது ,நெஞ்சம் பெற்ற நினைவுகள் மனதில்  இன்றும் நிழலாடுகிறது.

காலத்திற்கேற்ற மாற்றங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதுதல் என்ற அழகிய வாழ்வியலைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து முன்னேற வேண்டியது தான். நமது சில
சௌகரியங்களுக்காக, காலம் விழுங்கி செல்லும் பல விழுமியங்களை நாம் சகித்துக்கொள்ள தான் வேண்டியுள்ளது..,