Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 40996 times)

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #210 on: February 16, 2025, 07:46:54 AM »
குறள் :210

  அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   


விளக்கம்:
         
 சாலமன் பாப்பையா விளக்கம்:

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. 

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #211 on: February 17, 2025, 07:27:55 AM »
குறள் :211

[ அதிகாரம்:   ஒப்புரவறிதல்

  கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.   


விளக்கம்:

    கலைஞர் விளக்கம்:
 கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள்     

Offline Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #212 on: March 01, 2025, 05:30:42 PM »
குறள் :212

அதிகாரம்:   ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.


விளக்கம்:

தன்னுடைய முயற்சியிலும் உழைப்பிலும் ஈன்ற பொருள்கள் எல்லாம் எதற்கு? அதுபோல அவை இவ்வுலகில் யார்க்கு சேரும்? என்பதற்கு விடையாகவே இக்குறள் அமைகிறது. ஒருவர் தன் உழைப்பால் ஈன்ற செல்வம் எல்லாம் பிறருக்கு உதவி செய்வதற்காகவே. யார்க்கு உதவி செய்வது ? தக்கார்க்கு. அப்படி என்றால் உண்மையாக பிறர் உதவியினை தேவைப்படும் எளியோர், வயதானோர்/முதியோர், வறியோர்,  உடலால்லோ அல்லது வேறு சில நியாயமான காரணத்திற்காக உழைக்க முடியாதவர்கள், துறந்தோர் ஆகியோர்க்கு உதவ வேண்டும். நாம் உழைத்து சம்பாதிப்பது நாம் சுகமாக இருப்பதற்கு இல்லை பிறர்க்கு உதவி செய்யவே என்பதை சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.
« Last Edit: March 04, 2025, 12:57:57 PM by Thooriga »

Offline Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #213 on: March 03, 2025, 03:15:23 PM »
குறள் 213:

அதிகாரம்:   ஒப்புரவறிதல்



புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.


சாலமன் பாப்பையா விளக்கம்
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

Offline Thooriga

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #214 on: March 04, 2025, 12:57:25 PM »
குறள் 214

அதிகாரம்: ஒப்புரவறிதல்


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப்‌ பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன்‌ உயிர்வாழ்கின்றவன்‌ ஆவான்‌; மற்றவன்‌ செத்தவருள்‌ சேர்த்துக்‌ கருதப்படுவான்‌.

Offline mandakasayam

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #215 on: April 22, 2025, 10:11:18 AM »
குறள்: 215

   ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   


விளக்கம்:

   
 சாலமன் பாப்பையா விளக்கம்:
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். 

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #216 on: April 22, 2025, 03:34:42 PM »
குறள் - 216

அதிகாரம்    ஒப்புரவறிதல்


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

பொருள்
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #217 on: April 23, 2025, 02:57:14 PM »
குறள் 217

அதிகாரம்    ஒப்புரவறிதல்


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள்:   
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #218 on: April 25, 2025, 03:21:14 PM »
குறள் 218

அதிகாரம்    ஒப்புரவறிதல்


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

பொருள்
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.


Offline RajKumar

Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #219 on: April 29, 2025, 04:04:15 PM »
குறள் 219

அதிகாரம்    ஒப்புரவறிதல்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பொருள்:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.